இந்தியா

பாராளுமன்றத்தில் விவசாயிகளுக்கு அனுமதி மறுப்பு- ராகுல்காந்தி குற்றச்சாட்டு

Published On 2024-07-24 08:02 GMT   |   Update On 2024-07-24 08:04 GMT
  • ராகுல்காந்தியை இன்று விவசாய சங்க பிரதிநிதிகள் சந்தித்து பேச திட்டமிட்டு இருந்தனர்.
  • பாராளுமன்றத்துக்குள் விவசாயிகள் நுழைய அனுமதிக்கவில்லை.

புதுடெல்லி:

எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை இன்று விவசாய சங்க பிரதிநிதிகள் சந்தித்து பேச திட்டமிட்டு இருந்தனர்.

அதன்படி விவசாயிகள் பாராளுமன்றத்துக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

எங்களது அழைப்பின் பேரில் சந்திக்க வந்த விவசாயிகளை பாராளுமன்றத்துக்குள் விடவில்லை. விவசாயிகள் என்பதால் பாராளுமன்றத்துக்குள் விட அனுமதி மறுக்கப்பட்டு இருக்கலாம்.

பெங்களூருவில் உள்ள வணிக வளாகத்தில் விவசாயி ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.

Tags:    

Similar News