இந்தியா
பாராளுமன்றத்தில் விவசாயிகளுக்கு அனுமதி மறுப்பு- ராகுல்காந்தி குற்றச்சாட்டு
- ராகுல்காந்தியை இன்று விவசாய சங்க பிரதிநிதிகள் சந்தித்து பேச திட்டமிட்டு இருந்தனர்.
- பாராளுமன்றத்துக்குள் விவசாயிகள் நுழைய அனுமதிக்கவில்லை.
புதுடெல்லி:
எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை இன்று விவசாய சங்க பிரதிநிதிகள் சந்தித்து பேச திட்டமிட்டு இருந்தனர்.
அதன்படி விவசாயிகள் பாராளுமன்றத்துக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
எங்களது அழைப்பின் பேரில் சந்திக்க வந்த விவசாயிகளை பாராளுமன்றத்துக்குள் விடவில்லை. விவசாயிகள் என்பதால் பாராளுமன்றத்துக்குள் விட அனுமதி மறுக்கப்பட்டு இருக்கலாம்.
பெங்களூருவில் உள்ள வணிக வளாகத்தில் விவசாயி ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.