இந்தியா

நீங்கள் எந்த வகையிலும் இந்துக்கள் அல்ல: மக்களவையை கொந்தளிக்க வைத்த ராகுல் காந்தியின் பேச்சு

Published On 2024-07-01 09:51 GMT   |   Update On 2024-07-01 09:51 GMT
  • நம்முடைய சிறந்த மனிதர்கள் வன்முறை இல்லாதது (அகிம்சை), பயத்தை முடிவுக்கு கொண்டு வருதல் குறித்து பேசியிருக்கிறார்கள்.
  • ஆனால், தங்களை இந்துக்கள் என அழைத்துக் கொள்பவர்கள் வன்முறை, பொய் ஆகியவைகளை மட்டுமே பேசுகிறார்கள்.

நீட் தொடர்பாக ஒருநாள் முழுவதும் விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், சபாநாயகர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

இதற்கிடையே இந்து மதம் குறித்து ராகுல் காந்தி கூறியதும், பிரதமர் மோடி அதற்கு பதில் அளித்ததும், பாஜக எம்பி-க்கள் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தாலும் மக்களவை அதிர்ந்தது.

ராகுல் காந்தி பேசும்போது "நம்முடைய சிறந்த மனிதர்கள் வன்முறை இல்லாதது (அகிம்சை), பயத்தை முடிவுக்கு கொண்டு வருதல் குறித்து பேசியிருக்கிறார்கள். ஆனால், தங்களை இந்துக்கள் என அழைத்துக் கொள்பவர்கள் வன்முறை, பொய் ஆகியவைகளை மட்டுமே பேசுகிறார்கள். இவர்கள் (பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்) அனைத்து இந்துக்களையும் பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை. இவர்கள் எந்த வகையிலும் இந்துக்கள் அல்ல" என்றார்.

இதனால் பாஜக எம்.பி.க்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். அப்போது பிரதமர் மோடி எழுந்து "ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் வன்முறையாளர்கள் என்பது மிகவும் கடுமையான குற்றச்சாட்டு" என தனது கண்டனத்தை தெரிவித்தார்.

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா "ராகுல் காந்தி தனது கருத்துக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார். இதனால் மக்களவை சில நிமிடங்கள் அமளியாக காணப்பட்டது.

Tags:    

Similar News