இந்தியா

119 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறை.. ரெயில்வே வாரிய தலைவராக பட்டியலினத்தவர் நியமனம்

Published On 2024-08-28 15:13 GMT   |   Update On 2024-08-28 15:13 GMT
  • ரெயில்வே வாரியத்தின் புதிய தலைவராக IRMS அதிகாரி சதீஷ்குமார் நியமனம்.
  • செப்டம்பர் 1 ஆம் தேதி ரெயில்வே வாரியத்தின் தலைவராக அவர் பொறுப்பேற்கவுள்ளார்.

இந்திய ரெயில்வே வாரியத்தின் புதிய தலைவராக இந்திய ரயில்வே மேலாண்மை சேவை (IRMS) அதிகாரி சதீஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ரெயில்வே வாரியத்தின் 119 ஆண்டுகால வரலாற்றில் தலைவராகும் முதல் பட்டியலினத்தவர் என்ற சிறப்பை சதீஷ்குமார் பெற்றுள்ளார்

செப்டம்பர் 1 ஆம் தேதி ரெயில்வே வாரியத்தின் தலைவராக அவர் பொறுப்பேற்கவுள்ளார்.

சதீஸ்குமார் 1986 ஆம் ஆண்டு ரெயில்வேயில் வேலை செய்து வருகிறார். 34 ஆண்டு கால சேவைக்கு பிறகு அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News