இந்தியா

பா.ஜ.க.-வின் ஜனநாயக மரபு: சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி

Published On 2024-06-28 06:46 GMT   |   Update On 2024-06-28 06:46 GMT
  • ஜனாதிபதி உரையின்போது நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.
  • பாராளுமன்றத்தில் இன்று நீட் தேர்வு குறித்து எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர முடிவெடுத்தனர்.

பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு 18-வது மக்களவை அமைக்கப்பட்டு உள்ளது. புதிய அரசின் முதல் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

ஜனாதிபதி உரையின்போது நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.

இதைத்தொடர்ந்து பாராளுமன்றத்தில் இன்று நீட் தேர்வு குறித்து எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர முடிவெடுத்தனர்.

இந்நிலையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில்,

பாராளுமன்றத்தில் நீட் தேர்வு குறித்து எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுக்க முடிவெடுத்த பின் நேற்றிரவு முதல் எங்களின் மின்னஞ்சல் வசதிகள் காலாவதியாவிட்டதாகச் சொல்லி முடக்குவது தான் பாஜக-வின் ஜனநாயக மரபு.

இந்தச் செயலுக்கு பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பொறுப்பேற்று விளக்கமளிக்க வேண்டும் என்று கிரண் ரிஜிஜூ வெளியிட்டுள்ள தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.

 

பாராளுமன்றத்தில் நீட் தேர்வு முறைகேடு அவசர பிரச்சனையாக விவாதிக்க வேண்டுமென இன்று ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு கைகளில் எழுதி நோட்டீஸ் கொடுத்துள்ளோம் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News