இந்தியா (National)
புதிதாக 5,747 பேருக்கு தொற்று- கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சற்று உயர்வு
- கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 5.618 பேர் குணமாகினர்.
- இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 53 ஆயிரத்து 374 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனாவால் புதிதாக 5,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 45 லட்சத்து 25 ஆயிரத்து 937 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 5.618 பேர் குணமாகினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 53 ஆயிரத்து 374 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 46,848 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 100 அதிகம் ஆகும்.
தொற்று பாதிப்பால் கேரளாவில் 13 பேர் உள்பட மேலும் 29 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,28,302 ஆக அதிகரித்துள்ளது.