இந்தியா (National)

சீன தூதரகத்தில் இருந்து ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு ரூ.1.35 கோடி கிடைத்தது- காங்கிரஸ் மீது அமித்ஷா பாய்ச்சல்

Published On 2022-12-13 08:09 GMT   |   Update On 2022-12-13 08:09 GMT
  • காங்கிரஸ் ஆட்சியில் சீன ஆக்கிரமிப்புக்கு இடம் கொடுத்து விட்டு தற்போது நாடகம் ஆடுகிறார்கள்.
  • மோடி அரசு இருக்கும் வரை ஒரு அங்குல நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது.

புதுடெல்லி:

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி அறக்கட்டளையின் வெளிநாடு நிதி பெறுவது தொடர்பான உரிமம் ரத்து குறித்து கேள்வியை தவிர்க்கவே பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எல்லை பிரச்சினையை எழுப்பியது.

சீன தூதரகத்தில் இருந்து ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு ரூ.1.35 கோடி நன்கொடை கிடைத்தது. இது எப்.சி.ஆர்.ஏ. விதிகளின்படி இல்லாததால் ரத்து செய்யப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் சீன ஆக்கிரமிப்புக்கு இடம் கொடுத்து விட்டு தற்போது நாடகம் ஆடுகிறார்கள்.

மோடி அரசு இருக்கும் வரை ஒரு அங்குல நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது என்பதை தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News