இந்தியா (National)
போர் கப்பலில் கடற்படை வீரர் மர்ம மரணம்
- மோகித் எப்படி இறந்தார் என்பது தெரிய வில்லை.
- மோகித் உடலுக்கு கடற்படை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.
புதுடெல்லி:
இந்திய கடற்படை வீரராக பணியாற்றி வந்தவர் மோகித் (வயது 23) சம்பவத்தன்று இவர் ஐ.என்.எஸ். பிரம்ம புத்திரா போர்க்கப்பலில் சென்றார்.அப்போது நடுக்கடலில் அவர் கப்பலில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். மோகித் எப்படி இறந்தார் என்பது தெரிய வில்லை. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. மோகித் உடலுக்கு கடற்படை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.