இந்தியா (National)

அரியானாவில் கார் மீது லாரி மோதி 6 பேர் பலி

Published On 2023-03-03 05:30 GMT   |   Update On 2023-03-03 05:30 GMT
  • பரிதாபாத்-குருகிராம் சாலையில் மாங்கர் போலீஸ் நிலையம் அருகே கார் சென்று கொண்டிருந்தது.
  • விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.

பரிதாபாத்:

அரியானா மாநிலம் குரு கிராம் அருகேயுள்ள பல்வால் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலர் ஒரு காரில் பரிதாபாத்துக்கு சென்று கொண்டிருந்தனர். பரிதாபாத்-குருகிராம் சாலையில் மாங்கர் போலீஸ் நிலையம் அருகே நேற்று இரவு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது வேகமாக வந்த டிப்பர் லாரி, கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 6 பேர் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் பெயர் புதின், ஜதின், ஆகாஷ், சந்தீப், பல்ஜித், விஷால் என்று தெரிய வந்தது. இவர்கள் அனைவருமே 18 வயது முதல் 25 வயதுக்கு உள்ளிட்டவர்கள் ஆவர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News