இந்தியா
குடிபோதையில் சிறுவன் ஓட்டிவந்த கார் மோதி கருவில் இருந்த 9 மாத சிசு மரணம்
- ரவி என்ற தூய்மை பணியாளரின் மனைவி தீபிகா 9 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.
- விபத்தில் காயமடைந்த தீபிகா தனது குழந்தையை பிறக்கும் முன்பே இழந்துள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதராவில் குடிபோதையில் சிறுவன் ஓட்டி வந்த கார் மோதியதில் 9 மாத கர்ப்பிணியின் குழந்தை பிறக்கும் முன்பே இறந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரவி என்ற தூய்மை பணியாளரின் மனைவி தீபிகா 9 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். ரவி தனது மனைவி மற்றும் 6 வயது குழந்தையுடன் பைக்கில் வந்துள்ளார். அப்போது குடிபோதையில் சிறுவர்கள் ஓட்டி வந்த கார் அந்த பைக்கின் மீது மோதியது.
இந்த விபத்தில் காயமடைந்த தீபிகா தனது குழந்தையை பிறக்கும் முன்பே இழந்துள்ளார். ரவி சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார். ஆனால் அவர்களின் 6 வயது மகள் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.