இந்தியா

மின்சார வாகன சார்ஜிங் நிலையம்

தமிழகத்தில் 281 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

Published On 2022-12-13 21:23 GMT   |   Update On 2022-12-13 21:23 GMT
  • நாடு முழுவதும் 1576 சார்ஜிங் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை.
  • சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு மாறுவது மற்றும் உற்பத்தி செய்வது என்ற எஃப்.ஏ.எம்.இ. திட்டம் மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சகத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாராளுமன்ற மாநிலங்களவையில் இது தொடர்பாக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அந்த துறையின் இணை மந்திரி கிருஷன்பால் குஜார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:

எஃப்ஏஎம்இ-திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 68 நகரங்களில் 2,877 மின் வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்க அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, நாடு முழுவதும் உள்ள 16 நெடுஞ்சாலைகள் மற்றும் 9 விரைவுச்சாலைகளில் 1576 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இதில் தமிழகத்தில் 281 சார்ஜிங் நிலையங்களும், புதுச்சேரியில் 10 சார்ஜிங் நிலையங்களும் அமைக்கப்படும். அதிகப்பட்சமாக மகாராஷ்டிராவுக்கு 317 சார்ஜிங் நிலையங்களுக்கும், ஆந்திரப் பிரதேசத்தில் 266 சார்ஜிங் நிலையங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News