இந்தியா (National)

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்?

Published On 2024-10-17 05:22 GMT   |   Update On 2024-10-17 05:22 GMT
  • கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியிருக்கிறார்.
  • நவம்பர் 10-ஆம் தேதியுடன் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஓய்வு பெறுகிறார்.

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமிக்கலாம் என்று தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் பரிந்துரை செய்துள்ளார். மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்திற்கு இது தொடர்பாக அவர் கடிதம் எழுதியுள்ளார்.

மரபுப்படி தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையிலுள்ளளார் மூத்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா. கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியிருக்கிறார்.

இந்த பரிந்துரையை அரசு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், உச்ச நீதிமன்றத்தின் 51-வது நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பொறுப்பேற்பார்.

நவம்பர் 10-ஆம் தேதியுடன் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News