இந்தியா (National)

கேரளாவில் 18-ந் தேதி வரை கனமழை- 6 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை

Published On 2024-10-13 10:10 GMT   |   Update On 2024-10-13 10:10 GMT
  • மழையின் போது காற்றின் வேகம் மணிக்கு 35 முதல் 55 கி.மீட்டர் அளவுக்கு இருக்கும்.
  • மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் பெரும்பாலான பகுதிகளில் வருகிற 18-ந் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மாவட்டங்களுக்கு நாளை (14-ந் தேதி) மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நாளை மறுநாள் (15-ந் தேதி) திருச்சூர், காசர்கோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கும், 16-ந் தேதி 7 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த மழையின் போது காற்றின் வேகம் மணிக்கு 35 முதல் 55 கி.மீட்டர் அளவுக்கு இருக்கும். நாளை (14-ந் தேதி) வரை கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடற்கரை பகுதிகளில் வானிலை மோசமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News