கிணற்றுக்குள் கவிழ்ந்த கார்.. உள்ளே சிக்கிய டாக்டர் குடும்பம்.. அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?
- பள்ளத்தில் இறங்கி, ஏரிய போது கட்டுப்பாட்டை இழந்தது.
- கார் ஒன்று கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எதிர்பாராமல் நடப்பவை விபத்துக்கள். இப்படியும் நடக்குமா என்று கேட்கும் அளவுக்கு கேரளாவில் கார் ஒன்று விபத்தில் சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பொதுவாக வாகனங்கள் அதிவேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து, மற்ற வாகனங்கள், சாலையின் தடுப்பு, சுற்றுச்சுவர் உள்ளிட்டவைகளில் மோதுவது தினந்தோரும் எங்கேயும் நடக்கும் சம்பவங்கள் தான்.
ஆனால், கார் ஒன்று சுற்றுச்சுவரை இடித்துக் கொண்டு கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மருத்துவர் ஒருவர் ஓட்டிவந்த கார், சாலையில் தண்ணீர் தேங்கியிருந்த பள்ளத்தில் இறங்கி, ஏரிய போது கட்டுப்பாட்டை இழந்தது.
கட்டுப்பாட்டை இழந்த கார், அருகே இருந்த சுற்றுச்சுவரை இடித்துக் கொண்டு கிணற்றுக்குள் விழுந்தது. சுமார் 15 அடி ஆழம் கொண்ட கிணற்றில் நீரின் அளவு குறைவாகவே இருந்துள்ளது. இதனால், காரில் இருந்து வெளியே வந்த மருத்துவர், உதவி கோரி கூச்சலிட்டார். காரில் மருத்துவருடன் அவரது மனைவியும் இருந்தார்.
கிணற்றுக்குள் இருவர் கூச்சலிடுவதை கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வந்து இருவரையும் மீட்டனர். இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்த நிலையில், விபத்தில் சிக்கிய மருத்துவர் மற்றும் அவரது மனைவி எந்த வித காயமும் இன்றி உயிர்தப்பினர்.