இந்தியா

பலாத்காரம் செய்யும்போது சிரிக்க வேண்டும்.. பெண்களுக்கு பிரஜ்வல் செய்த சித்ரவதைகள் - குற்றப்பத்திரிகை

Published On 2024-09-15 08:20 GMT   |   Update On 2024-09-15 08:21 GMT
  • பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தால் 1,691 பக்கங்கள் அடங்கிய மற்றொரு புதிய குற்றப்பத்திரிகையானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை பிரஜ்வல் நிகழ்ச்சி ஒன்றில் பார்த்து முதன்முதலில் தனது கெஸ்ட் ஹவுஸுக்கு வரவழைத்து இந்த கொடூரங்களை செய்துள்ளான்

பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு 

கர்நாடக மாநிலம் ஹாசன் பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்டார். ஆனால் இடையே பல்வேறு பெண்களுக்கு பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் துன்புறுத்தல் அளித்த 2,976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி நிலைமையை தலைகீழாக மாற்றியது. வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா மீது பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 5 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே ஜெர்மனிக்கு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணா கடந்த 31-ந்தேதி மீண்டும் பெங்களூரு விமானநிலையத்தில் வந்திறங்கியதும் சிறப்புப் புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டான் அவர் மீது விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 150 பேரின் சாட்சிகளையும் , பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களையும் உள்ளடக்கிய 2,144 பக்கங்கள் அடங்கிய 2 குற்றப்பத்திரிகைகள் கடந்த மாதம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது . இதில் வீட்டில் வேலை செய்துவந்த பெண்மணியை இரக்கமற்ற முறையில் பாலியல் சித்திரவதை செய்து அவர்களது மகளையும் பலாத்காரம் செய்வதாக பிரஜ்வல் மிரட்டல் விடுத்தது பதிவு செய்யப்பட்டிருந்தது.

புதிய குற்றப்பத்திரிகை 

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தால் 1,691 பக்கங்கள் அடங்கிய மூன்றாவது  குற்றப்பத்திரிகையானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்ணின் வாக்குமூலம் அவலம் நிறைந்ததாக உள்ளது. அந்த பெண்ணை கடந்த 20220 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் பிரஜ்வல் தொடர்ந்து பாலியல் பலாத்கார சித்ரவதைக்கு உள்ளாகியுள்ளான். ஹோலேநரிஷிபுரா [Holenarasipura] பகுதியில் உள்ள தனது  கெஸ்ட் ஹவுஸ் வீட்டில்  வைத்து அந்த பெண்ணுக்கு இந்த கொடூரங்களை பிரஜ்வல் செய்துள்ளான்.

 

ஒவ்வொரு முறையும் அந்த பெண்ணை குறிப்பிட்ட உள்ளாடை [lingerie] அணியவைத்து தான் பலாத்காரம் செய்யும்போது சிரித்த மாதிரி இருக்க வேண்டும் என்று துப்பாக்கி முனையில் இந்த கொடூரங்களை அரங்கேற்றியுள்ளான். இதை வெளியில் சொன்னால் ஒவ்வொரு முறையும் தான் எடுத்த வீடியோ பதிவுகளை வெளியிட்டுவிட்டேன் என்று கூறி தொடர்ச்சியாக பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளான்.

பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை பிரஜ்வல் நிகழ்ச்சி ஒன்றில் பார்த்து முதன்முதலில் தனது கெஸ்ட் ஹவுஸுக்கு வரவழைத்து இந்த கொடூரங்களை செய்துள்ளான் என்று அந்த நிகழ்ச்சியில் பிரஜ்வலுடம் கலந்துகொண்ட எம்.எல்.ஏ ஒருவரின் வாக்குமூலமும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. 

Tags:    

Similar News