செய்திகள் (Tamil News)

டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கு ஜூன் 30-ல் தேர்தல்- ஒரு நபர் ஒரு பதவிக்குதான் போட்டி

Published On 2018-05-15 14:17 GMT   |   Update On 2018-05-15 14:17 GMT
டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கான தேர்தல் வருகிற ஜூன் 30-ந்தேதி நடைபெற இருக்கிறது. ஒரு நபர் ஒரு பதவிக்குத்தான் போட்டியிட முடியும்.
டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் டெல்லி ஐகோர்ட் நியமனம் செய்த முன்னாள் நீதிபதி கண்காணிப்பில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் 30-ந்தேதி கிரிக்கெட் சங்கத்திற்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் நிர்வாகத்தில் லோதா கமிட்டி பரிந்துரை செய்ததில் ஒரு நபர் ஒரு பதவிக்குத்தான் போட்டியிட வேண்டும் என்பதும் ஒன்று. இதனடிப்படையில்தான் டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற இருக்கிறது.

இரண்டு புதிய பொறுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று பெண்களுக்கானது. மற்றொன்று முதல் தர கிரிக்கெட்டில் விளையாடியவர்களுக்கு ஒதுக்கப்பட்டதாகும். 
Tags:    

Similar News