செய்திகள் (Tamil News)

சுவிட்சர்லாந்து வீரர்களுக்கு அபராதம்

Published On 2018-06-26 07:53 GMT   |   Update On 2018-06-26 07:53 GMT
செர்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சுவிட்சர்லாந்து வீரர்கள் இருவருக்கு ரூ.6¾ லட்சம் அபராதமாக விதித்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் உத்தரவிட்டது. #GranitXhaka #XherdanShaqiri
மாஸ்கோ:

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் செர்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சுவிட்சர்லாந்து வீரர்கள் கிரானிட் ஷக்கா, ஷகிரி கோல் அடித்த போது, அல்பேனியா நாட்டு தேசிய கொடிக்குரிய இரட்டை கழுகு தலையை நினைவூட்டும் வகையில் செய்கை காட்டினர். அல்பேனியாவுடன் சீரான உறவு இல்லாத செர்பியாவுக்கு வீரர்களின் செயல் ஆத்திரமூட்டியது. அவர்கள் இருவரையும் செர்பியா கால்பந்து சங்கம் கடுமையாக விமர்சித்தது.

இந்த நிலையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக ஷக்கா, ஷகிரி இருவருக்கும் ரூ.6¾ லட்சம் அபராதமாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் நேற்று விதித்தது. இதே போல் செர்பியா கால்பந்து சங்க தலைவர், அந்த அணியின் பயிற்சியாளர் ஆகியோருக்கு தலா 3½ லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது. #GranitXhaka #XherdanShaqiri
Tags:    

Similar News