செய்திகள்

நவராத்திரியை முன்னிட்டு ராஞ்சி திவ்ரி கோவிலில் சாமி தரிசனம் செய்தார் மகேந்திர சிங் டோனி

Published On 2018-10-13 12:00 GMT   |   Update On 2018-10-13 12:00 GMT
நவராத்திரியின் நான்காவது நாளான இன்று, பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி ராஞ்சியில் உள்ள திவ்ரி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து காணிக்கை செலுத்தினார். #MSDhoni #DivriTemple
டேராடூன்:

நவராத்திரி பண்டிகை கடந்த 10ம் தேதி தொடங்கி நடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக,  வட மாநிலங்களில் துர்கா பூஜை என்ற பெயரில் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம் .

நவராத்திரி பண்டிகை தினங்களில் முக்கிய தலைவர்கள், பிரபல கிரிக்கெட் வீரர்கள் மற்றும்  பாலிவுட் நட்சத்திரங்கள்
தங்கள் வசிக்கும் பகுதியின் அருகிலுள்ள அம்மன் கோவில்களுக்கு சென்று காணிக்கை செலுத்தி மகிழ்வார்கள்.

இந்நிலையில், நவராத்திரியின் நான்காவது நாளான இன்று, பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி ராஞ்சியில் உள்ள திவ்ரி துர்கா அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து காணிக்கை செலுத்தினார்.

ராஞ்சியில் உள்ள திவ்ரி துர்கா அம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. எம்.எஸ்.டோனி அந்த கோவிலுக்கு சென்று அங்குள்ள அம்மனை வணங்கிய பின்னர் தனது காணிக்கையை செலுத்தினார். டோனி வருகையை முன்னிட்டு கோவிலில் ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #MSDhoni #DivriTemple
Tags:    

Similar News