விளையாட்டு (Sports)

அதிக வெப்பம் எதிரொலி: இந்திய போட்டியாளர்களுக்கு ஏசி அனுப்பிய விளையாட்டுத்துறை

Published On 2024-08-03 11:34 GMT   |   Update On 2024-08-03 11:34 GMT
  • பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது.
  • துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.

புதுடெல்லி:

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றி உள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்திய வீரர்கள் தங்குவதற்கு வசதியாக பாரிஸில் ஒலிம்பிக் கிராமம் கொடுக்கப்பட்டுள்ளது.

சில விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கு ஓட்டல்களை தேடவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சில விளையாட்டு வீரர்கள் வெப்ப அலைக்கு ஏற்ப தங்களது சொந்த உபகரணங்களை கொண்டுவர முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், பிரான்சில் உள்ள இந்தியத் தூதரகம் இந்திய விளையாட்டு வீரர்களுக்காக ஒலிம்பிக் கிராமத்திற்கு 40 ஏ.சி.களை வழங்கியுள்ளது.

இதனால் இந்திய வீரர்கள் வசதியாக தங்குவதற்கும், ஓய்வு நேரத்தை அனுபவிக்கவும் முடியும். ஏ.சி.களுக்கான செலவை விளையாட்டு அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

Tags:    

Similar News