இந்தியா (National)

பெங்களூருவில் கார் பழுதுபார்க்கும் மையத்தில் பயங்கர தீ விபத்து- 14 கார்கள் எரிந்து சேதம்

Published On 2023-02-16 07:26 GMT   |   Update On 2023-02-16 07:27 GMT
  • 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
  • சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான 14 கார்கள் எரிந்து சேதம் அடைந்தன.

பெங்களூரு:

பெங்களூரு கஸ்தூரி நகரில் தனியாருக்கு சொந்தமான கார் பழுது பார்க்கும் மையம் உள்ளது.

சந்த் பாஷா மற்றும் தபேராஸ் பாஷா ஆகியோருக்கு சொந்தமான இந்த மையத்தில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ பற்றி எரிந்தது. மளமள என எரிந்த தீ அந்த மையம் முழுவதும் பரவியது.

இதனால் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த விபத்தில் கார் ஷெட்டில் நின்ற ஏராளமான கார்கள் எரிந்து சேதம் அடைந்தன.

ஊழியர் ஒருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே இதுபற்றி தகவல் கிடைத்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான 14 கார்கள் எரிந்து சேதம் அடைந்தன. தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ விபத்தில் காயம் அடைந்த ஊழியர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த வாரம் பெங்களூரு மட்டிகெரே அருகே உள்ள தேவனாரப்பள்ளியில் உள்ள கார் கேரேஜில் தீ விபத்து ஏற்பட்டு 3 பழைய கார்கள் எரிந்து நாசமானது என்பது குறிபிடத்தக்கது.

Tags:    

Similar News