கம்பத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் புதுப்பள்ளிவாசல் தெருவை சேர்ந்த 14 வயது சிறுமி அதேபகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். தாத்தப்பன்குளத்தை சேர்ந்த முகமதுபாசில்(21) என்பவரது ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக பாசில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே அவரது ஆட்டோவில் மாணவியை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி விட்டனர்.
சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மாணவியை கையை பிடித்து இழுத்து திருமணம் செய்து கொள்ளுமாறு பாசில் கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு சிறுமி மறுக்கவே புகைப்படத்தை சமூகவலைத் தளங்களில் பதிவு செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கம்பம் வடக்கு போலீசார் பாசில்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.