செய்திகள்
புதுவையில் இளம்பெண்ணை கற்பழித்த 2 பெண்டாட்டிக்காரர் கைது
வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கற்பழித்த 2 பெண்டாட்டிக்காரர் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி:
புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 39). பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ளனர். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வின்சென்ட் சென்றார். அப்போது அந்த வீட்டில் இளம்பெண் மட்டும் தனியாக இருந்தார். மற்றவர்கள் வெளியே சென்றிருந்தனர்.
டி.வி. பார்க்க வேண்டும் என கூறி டி.வி.யை ஆன் செய்ய சொன்னார். அந்த பெண் டி.வி.யை ஆன் செய்து விட்டு மற்றொரு அறையில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென அந்த அறைக்கு சென்று வின்சென்ட் இளம்பெண்ணை வலுக்கட்டாய மாக கற்பழித்தார். பின்னர் அவர் அங்கிருந்து சென்று விட்டார்.
ஒதியஞ்சாலை போலீசில் இதுபற்றி புகார் செய்யப்பட்டது. கற்பழிப்பு வழக்குபதிவு செய்து வின்சென்டை போலீசார் கைது செய்தனர்.