தமிழ்நாடு
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
- அருணாச்சலப்பிரதேசத்திற்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை:
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அருணாச்சலப்பிரதேசத்திற்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.