தமிழ்நாடு

தமிழகத்தின் நதிநீர் உரிமைகளை அடகு வைப்பதா?: திமுக அரசை சாடிய எடப்பாடி

Published On 2024-05-19 08:21 GMT   |   Update On 2024-05-19 08:21 GMT
  • சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சித்து வருகிறது கேரள அரசு.
  • இதனால் அமராவதி அணைக்கு வரும் நீரை தடுக்க அம்மாநில அரசு முயற்சி செய்கிறது.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேர்தல் கூட்டணி ஆதாயத்திற்காக மவுனம் சாதித்து, தமிழகத்தின் நதிநீர் உரிமைகளை மொத்தமாக அண்டை மாநிலங்களுக்கு அடகு வைத்துக்கொண்டிருக்கும் தி.மு.க. அரசின் முதல்வர் ஸ்டாலினின் நிர்வாக திறனற்ற ஆட்சியில் பாலாற்றில் ஆந்திர அரசு பல தடுப்பணைகளைக் கட்டியுள்ளது. மேகதாதுவில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரை தடுக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் முயற்சிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனியாவது தி.மு.க. அரசின் முதல்வர் ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து விடுபட்டு தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட உடனடியாக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News