தமிழ்நாடு (Tamil Nadu)

சந்தேகப்பட்ட கணவரை கத்தியால் குத்திய மனைவி- போலீசார் கைது செய்தனர்

Published On 2023-04-24 04:17 GMT   |   Update On 2023-04-24 04:17 GMT
  • இசக்கியப்பனுக்கு தொடை மற்றும் கைகளில் படுகாயம் ஏற்பட்டது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இசைவேணியை கைது செய்தனர்.

களக்காடு:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு மருதகுளம், வடக்குத்தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன்(வயது 44). இவருக்கும், இவரது மனைவி இசைவேணிக்கும்(40) திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது.

இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இசக்கியப்பன் சூரத்தில் இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இசைவேணி தவறான பழக்க வழக்கத்தில் ஈடுபடுவதாக இசக்கியப்பனுக்கு சிலர் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். நேற்று அவர் தனது மனைவி இசைவேணி மீது சந்தேகம் அடைந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் நீ எனக்கு வேண்டாம் என்று கூறியுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு முற்றியது.

அப்போது ஆத்திரம் அடைந்த இசைவேணி, சற்றும் எதிர்பாராமல் வீட்டில் இருந்த கத்தியால், கணவர் இசக்கியப்பனை குத்தினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதில் இசக்கியப்பனுக்கு தொடை மற்றும் கைகளில் படுகாயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து மூன்றடைப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இசைவேணியை கைது செய்தனர்.

Tags:    

Similar News