தமிழ்நாடு
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விவாதிக்க தயாரா? - அமைச்சர் சிவசங்கருக்கு அன்புமணி சவால்
- முக்கியமான சமுதாயத்திற்கு கல்வி, வேலைவாய்ப்பில் கணக்கெடுப்பு நடத்த மறுப்பது ஏன்?
- மாநில அரசு தான் பொருளாதார ரீதியான கணக்கெடுப்பை நடத்த முடியும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உரிமை உண்டு.
* முக்கியமான சமுதாயத்திற்கு கல்வி, வேலைவாய்ப்பில் கணக்கெடுப்பு நடத்த மறுப்பது ஏன்?
* மாநில அரசு தான் பொருளாதார ரீதியான கணக்கெடுப்பை நடத்த முடியும்.
* மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியும் என முதலமைச்சர் கூறியது மோசடி.
* கலைஞர் ஆட்சியில் எந்த அடிப்படையில் வன்னியர், இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
* பீகார் முதலமைச்சரால் மட்டும் எவ்வாறு கணக்கெடுப்பு நடத்த முடிகிறது.
* சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சர் சிவசங்கருடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் என்றார்.