தமிழ்நாடு (Tamil Nadu)
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை
- மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
- தற்போது மழை பெய்து வருவதால் நகரில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் 18-ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஆலந்தூர், கிண்டி, அசோக் நகர், வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது மழை பெய்து வருவதால் நகரில் குளிர்ச்சியான சூழல் உருவாகி இருக்கிறது.