தமிழ்நாடு

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்த விஜய்

Published On 2024-06-21 06:29 GMT   |   Update On 2024-06-21 06:29 GMT
  • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விஜய் கேட்டறிந்தார்.
  • விஜய் மருத்துவமனைக்கு வருவதை அறிந்து அவரது ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்ததால் அப்பகுதியில் பெரும் நெரிசல் ஏற்பட்டது.

சென்னை:

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தார்களை நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விஜய் கேட்டறிந்தார். விஜய் மருத்துவமனைக்கு வருவதை அறிந்து அவரது ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்ததால் அப்பகுதியில் பெரும் நெரிசல் ஏற்பட்டது.

விஜய் அரசியல் கட்சி தொடங்கி அறிக்கை மற்றும் வாழ்த்து செய்தி மட்டும் வெளியிட்டு வந்த நிலையில் நேற்று நேரிடையாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்றது அவர் அரசியல் பணியில் முழு வீச்சில் உள்ளார் என்பதையே காட்டுகிறது.


இந்நிலையில், நாளை 50-வது பிறந்தநாளை கொண்டாடும் விஜய், தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்குமாறு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.


Tags:    

Similar News