செய்திகள் (Tamil News)
பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்போம் - இம்ரான் கான்
பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு வரும் ஜூலை மாதம் 25-ம் தேதி நடைபெறும் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடிப்போம் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:
தற்போதைய பாராளுமன்றத்தில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் ஷரிப்) தலைமையிலான கூட்டணி கட்சிகளின் பலம் 199 ஆகவும், எதிர்க்கட்சிகளின் பலம் 137 ஆகவும் உள்ள நிலையில் வரும் ஜூலை மாதம் 25-ம் தேதி நடைபெறும் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடிப்போம் என தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
எங்கள் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் ஆட்சி நடைபெறும் கைபர் பகதுங்வா மாகாணத்தில் ஊழலற்ற ஆட்சி நடைபெறுவதாக குறிப்பிட்ட இம்ரான் கான் நேர்மையான தலைவரால் மட்டுமே நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.
கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது அதிக அனுபவம் இல்லாமலே நாங்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றோம். மக்களின் செல்வாக்குடன் இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்று நாங்கள் ஆட்சியை பிடிப்போம் என தெரிவித்துள்ளார். #ImranKhan #PakistanElection