செய்திகள் (Tamil News)
வீரர்கள் நடுவர்கள் தரையில் படுத்திருந்த காட்சி

மைதானத்தில் படையெடுத்த தேனீக்கள்: தரையில் படுத்து தப்பிய வீரர்கள்

Published On 2019-06-28 14:53 GMT   |   Update On 2019-06-28 14:53 GMT
இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின்போது தேனீக்கள் மைதானத்தில் படையெடுத்ததால் வீரர்கள் தரையில் படுத்து தப்பினார்கள்.
இலங்கை - தென்ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் செஸ்டர்-லி-ஸ்ட்ரீட் ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இலங்கை அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது 48-வது ஓவரின்போது திடீரென தேனீக்கள் மைதானத்திற்குள் படையெடுத்தது.

தேனீக்கள் பிட்ச் பகுதியில் கூட்டம் கூட்டமாக பறந்தது. தேனீக்கள் கொட்டிவிடக் கூடாது என்பதற்காக வீரர்கள் தரையில் படுத்து தங்களை பாதுகாத்தனர்.

ஏற்கனவே இதுபோன்று ஒருமுறை தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான ஆட்டம் தேனீக்களால் சற்று நேரம் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News