செய்திகள் (Tamil News)
அவிஷ்கா பெர்னாண்டோ

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 339 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை

Published On 2019-07-01 13:46 GMT   |   Update On 2019-07-01 13:46 GMT
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 339 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை.
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை தொடரின் 39-வது லீக் செஸ்டர்-லி-ஸ்ட்ரீட்டில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இலங்கை அணியின் கருணாரத்னே, குசால் பேரேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கருணாரத்னே 32 ரன்களும், பெரேரா 64 ரன்களும் சேர்த்து நல்ல தொடக்கம் அமைத்தனர்.



அடுத்து வந்த அவிஷ்கா பெர்னாண்டோ சிறப்பாக விளையாடி 103 பந்தில் 104 ரன்கள் குவித்ததார். திரிமானே ஆட்டமிழக்காமல் 33 பந்தில் 45 ரன்கள் விளாச இலங்கை 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்துள்ளது. குசால் மெண்டிஸ் 39 ரன்களும், மேத்யூஸ் 26 ரன்களும் சேர்த்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஹோல்டர் 2 விக்கெட்டும் காட்ரெல், தாமஸ், ஆலன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 339 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்து வருகிறது.

Similar News