செய்திகள் (Tamil News)
டாஸ் சுண்டிய கேப்டன்கள்

உலகக்கோப்பை கிரிக்கெட் - வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்

Published On 2019-07-02 09:42 GMT   |   Update On 2019-07-02 09:42 GMT
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
பர்மிங்காம்:

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் பர்மிங்காமில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிஙகை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் குல்தீப் யாதவ் மற்றும் கேதர் ஜாதவ்க்கு பதிலாக புவனேஷ் குமார் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

Similar News