புதுச்சேரி

கோப்பு படம்.

ஆசிரியர் இடமாற்றல் கலந்தாய்வு ஒத்திவைப்பு

Published On 2023-07-02 05:29 GMT   |   Update On 2023-07-02 05:29 GMT
  • விரிவுரையாளர்களுக்கு நடைபெற இருந்த கலந்தாய்வும் தேதியும் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
  • ஆசிரியர் பணியிடங்களை 2 மாதங்களில் நிரப்ப முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.

புதுச்சேரி:

ஆசிரியர் பணியிட கலந்தாய்வு கொள்கையை எதிர்த்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார்கள். பேச்சுவார்த்தையில் தலைமை ஆசிரியர்களுக்கு திங்கட்கிழமை நடைபெற இருந்த கலந்தாய்வு மற்றும் அதனைத் தொடர்ந்து விரிவுரையாளர்களுக்கு நடைபெற இருந்த கலந்தாய்வும் தேதியும் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை 2 மாதங்களில் நிரப்ப முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.

இதனால் போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட்டனர்.

Tags:    

Similar News