புதுச்சேரி
ஆசிரியர் இடமாற்றல் கலந்தாய்வு ஒத்திவைப்பு
- விரிவுரையாளர்களுக்கு நடைபெற இருந்த கலந்தாய்வும் தேதியும் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
- ஆசிரியர் பணியிடங்களை 2 மாதங்களில் நிரப்ப முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.
புதுச்சேரி:
ஆசிரியர் பணியிட கலந்தாய்வு கொள்கையை எதிர்த்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார்கள். பேச்சுவார்த்தையில் தலைமை ஆசிரியர்களுக்கு திங்கட்கிழமை நடைபெற இருந்த கலந்தாய்வு மற்றும் அதனைத் தொடர்ந்து விரிவுரையாளர்களுக்கு நடைபெற இருந்த கலந்தாய்வும் தேதியும் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை 2 மாதங்களில் நிரப்ப முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.
இதனால் போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட்டனர்.