புதுச்சேரி

அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்ற காட்சி.

போதை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு

Published On 2023-12-01 09:32 GMT   |   Update On 2023-12-01 09:32 GMT
  • திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் கலந்து கொண்டு பேசினார்.
  • நாட்டு நல பணி திட்ட அதிகாரிகள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ-மாணவி யர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

மதகடிப்பட்டு கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு போதை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் கலந்து கொண்டு பேசினார்.

அதனை தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி யின் துணை முதல்வர், நாட்டு நல பணி திட்ட அதிகாரிகள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ-மாணவி யர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News