புதுச்சேரி

அறநிலையத்துறை அதிகாரிகளுடன் கென்னடி எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்திய காட்சி.

கும்பாபிஷேகத்துக்கு நிதி உதவி - கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2022-11-15 04:09 GMT   |   Update On 2022-11-15 04:09 GMT
  • வாணரப்பேட்டை சித்தி விநாயகர் கோவிலில் தற்போது கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
  • ஆனால் அதற்கான நிதி உதவி இல்லை. இது சம்பந்தமாக ஊர் பஞ்சாயத்தாரர்கள் மற்றும் நிர்வாகிகள் கென்னடி எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

புதுச்சேரி:

வாணரப்பேட்டை சித்தி விநாயகர் கோவிலில் தற்போது கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. ஆனால் அதற்கான நிதி உதவி இல்லை. இது சம்பந்தமாக ஊர் பஞ்சாயத்தாரர்கள் மற்றும் நிர்வாகிகள் கென்னடி எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

இதை தொடர்ந்து அறநிலையத்துறை அலுவ லகத்துக்கு சென்ற கென்னடி எம்.எல்.ஏ. அறநிலை யத்துறை ஆணையர் சிவசங்கர், கோவில் மேலாளர் அண்ணாமலை, ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனை நடத்தினார்.

அந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.வின் கோரிக்கை ஏற்று நிதி அளிப்பதற்கான ஆவணங்களை செய்து கொடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

அதனைத் தொடர்ந்து நிதி உதவியினை வாணரப்பேட்டை சித்தி விநாயகர் கோவிலுக்கு வழங்குவதற்கான விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டார்.

இதில் கலியமூர்த்தி,ஊர் பஞ்சாயத்தாரர்கள், தொகுதி செயலாளர் சக்திவேல், கலை மற்றும் இலக்கிய பகுத்தறிவு சந்துரு, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ஆரோக்கி யராஜ், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளைச் செயலாளர் ரவிக்குமார், இளைஞர் அணி பஸ்கள், கவி, அரவிந்த், ரகுராமன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News