புதுச்சேரி
null
மின்னட்டை ஆதார் எண்ணுடன் இணைப்பு முகாம்
- கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பர்கத் நகர் அங்கன்வாடி மையத்தில் மின்னட்டை ஆதார் எண்ணுடன் இணைக்கும் முகாம் நடந்தது. முகாமை கோட்டக்குப்பம் நகர் மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி தொடங்கி வைத்தார்.
- முகாமில் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி:
கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பர்கத் நகர் அங்கன்வாடி மையத்தில் மின்னட்டை ஆதார் எண்ணுடன் இணைக்கும் முகாம் நடந்தது. முகாமை கோட்டக்குப்பம் நகர் மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி தொடங்கி வைத்தார்.
கோட்டக்குப்பம் மின்வாரிய இளமின் என்ஜினீயர் ஆதிமூலம் தலைமை வகித்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை 22-வது வார்டு உறுப்பினர் நாசர் அலி, மற்றும் வார்டு செயலாளர் கமால் ஹசேன் செய்திருந்தனர்.
முகாமில் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.