மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்கு மார் ஊர் பெரியோர்களுடன் சந்தித்தார்.
- அப்போது முத்தியால்பேட்டை தொகுதிக்கு வழங்கப்படும் குடிநீரில் அதிக தாது உப்புக்கள் கலந்துள்ளது.
புதுச்சேரி:
முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்கு மார் ஊர் பெரியோர்களுடன் சந்தித்தார். அப்போது முத்தியால்பேட்டை தொகுதிக்கு வழங்கப்படும் குடிநீரில் அதிக தாது உப்புக்கள் கலந்துள்ளது. சாதாரணமாக குடிநீரில் 50 முதல் 150 றி.டி.எஸ். அளவுள்ள குடிநீரை பருகுவது மட்டுமே நமது உடல் நலத்திற்கு பாதுகாப்பானது.
அதே குடிநீரில் றி.டி.எஸ். 1,000-க்கு மேல் இருந்தால் நிச்சயம் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும் என்று புகார் தெரிவித்தார். மேலும் முத்தியால்பேட்டை தொகுதி காட்டாமணி குப்பம் குடிநீர் மேல்நிலைத்தேக்க தொட்டிக்கு 6 இடங்களில் இருந்து கொண்டு வரப்படும் குடிநீரில் அதிக அளவு உப்பு உள்ளது. இந்த குடிநீர் முத்தியால்பேட்டை சோலை நகர், வ.உ.சி.நகர், மஞ்சினி நகர், அங்காளம்மன் நகர், விஸ்வநாதன்நகர் ஆகிய பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
எனவே , முத்தியால்பேட்டை தொகுதிக்கு வழங்கப்படும் குடிநீரை மாற்றி, குறைந்த தாது உப்புத்தன்மையுடைய, மக்களுக்கு பாதுகாப்பான தரமான குடிநீர் வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.