புதுச்சேரி

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. திடீர் பாராட்டு

Published On 2023-02-26 07:56 GMT   |   Update On 2023-02-26 07:56 GMT
  • தமிழை தனது பெயரிலேயே வைத்திருக்கும் கவர்னரும் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
  • கவர்னர் தமிழிசை தமிழ் மீது பற்று கொண்டவர்.

புதுச்சேரி:

விடுதலை சிறுத்தை கட்சி எம்.பி. ரவிக்குமார் புதுவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் பல ஆய்வாளர்களை உருவாக காரணமாக இருந்தது. இதில் பெரிய பல பேராசிரியர்கள் பணியாற்றினார்கள்.

தற்போது பேராசிரியர், இயக்குநர் இல்லாமல் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் தமிழ் மீது பற்று கொண்டவர்.தமிழுக்காக போராட்டக்களத்தில் இருந்தவர்.

அவரது ஆட்சிக்காலத்தில தமிழுக்காக இருந்த நிறுவனம மூடப்பட்டது என்ற அவபெயர் வரக்கூடாது.

எனவே புதுவை மொழியில் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மீண்டும் புதுப்பிக்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழை தனது பெயரிலேயே வைத்திருக்கும் கவர்னரும் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

கவர்னர் தமிழிசை தமிழ் மீது பற்று கொண்டவர். அவரது தந்தையும் தமிழ் மீது பெரும் பற்று கொண்டவர். அவரது காலததில் இந்த நிறுவனம் மூடப்பட்டால் அவருக்கும் அது பெரும் அவபெயராக இருக்கும், எனவே அவரும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

பா.ம.க. நிறுவனர் ராமதாசு தமிழை தேடி என்ற பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழுக்காக யார் எதை செய்தாலும் அதை வரவேற்கிறோம். அவரது நோக்கம் நிறைவேற வாழ்த்துகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News