புதுச்சேரி

கென்னடி எம்.எல்.ஏ. மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தார்பாய்  வழங்கிய காட்சி.

மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தார்பாய்

Published On 2023-12-03 03:28 GMT   |   Update On 2023-12-03 03:28 GMT
  • கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
  • விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த தெசீர், வினோத் மற்றும் ராகேஷ், பாஸ்கல், மோரீஸ், ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.

புதுச்சேரி:

புதுவையில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகி றது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.

இந்த நிலையில் உப்பளம் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சென்று தொகுதி எம்.எல்.ஏ. கென்னடி ஆறுதல் கூறினார். மேலும் தனது சொந்த செலவில் நிவாரண பொருட்கள் மற்றும் வீடுகளுக்கு தார் பாய்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் போது தொகுதி செயலாளர் சக்தி வேல், தி.மு.க. நிர்வாகிகள் ெஜயராமன், தங்கவேல், காத்தலிங்கம், நோயல், ராஜி, விநாயகமூர்த்தி, செல்வம், விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த தெசீர், வினோத் மற்றும் ராகேஷ், பாஸ்கல், மோரீஸ், ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News