- போக்சோ வழக்கில் போலீசார் தேடியதால் பயந்து போன டெய்லர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- கடந்த 10 நாட்களுக்கு முன்பு போக்சோ வழக்கில் ஏழுமலையை எதிரியாக சேர்த்து அவரை முத்தியால்பேட்டை போலீசார் தேடி வந்தனர்.
புதுச்சேரி:
போக்சோ வழக்கில் போலீசார் தேடியதால் பயந்து போன டெய்லர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுவை முத்தியால் பேட்டை சாலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது47). டெய்லர். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு போக்சோ வழக்கில் ஏழுமலையை எதிரியாக சேர்த்து அவரை முத்தியால்பேட்டை போலீசார் தேடி வந்தனர். இதையடுத்து ஏழுமலை தனக்கு முன் ஜாமீன் கேட்டு புதுவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் ஏழுமலையை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.
இதனையறிந்த ஏழுமலை கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்தார். மேலும் மன உளைச்சல் காரணமாக போலீசுக்கு பயந்து போய் இருந்த ஏழுமலை தான் வேலை பார்க்கும் டெய்லர் கடை உரிமையாளர் தேங்காய்திட்டை சேர்ந்த சதாசிவம் என்பவர் வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் தன்னை போலீசார் கைது செய்தால் உறவினர்கள் மற்றும் தனது சமுதாயம் ஏளனமாக பார்ப்பார்களே என வேதனையடைந்த ஏழுமலை நேற்று காலை சதாசிவம் வீட்டில் உள்ள பொருட்கள் வைத்திருக்கும் அறையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.