null
- மரங்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் எப்போது விழுமோ என்ற நிலையில் உள்ளது.
- புதிய மரக்கன்றுகளை நட்டு பசுமை வளத்தை காக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபால் நிர்வாகிகள் மற்றும் தொகுதி மக்களுடன் வனத்துறை அலுவ லகத்திற்கு சென்றார்.
அங்கு இணை இயக்குநர் குமாரவேலுவை சந்தித்து மனு அளித்தார்.அந்த மனுவில் கூறியி ருப்பதாவது:-
உருளையன்பேட்டை தொகுதி மறைமலையடிகள் சாலையில் கிரீன்பார்க் ஹோட்டல் முதல் தென்னஞ்சாலை ரோடு இடையில் பட்டுப்போன மரங்கள் உள்ளன. அந்த மரங்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் எப்போது விழுமோ என்ற நிலையில் உள்ளது.
மரங்கள் விழுந்து விபத்து ஏற்படும் முன் பட்டுப்போன மரங்களை அகற்ற வேண்டும். அந்த இடத்தில் புதிய மரக்கன்றுகளை நட்டு பசுமை வளத்தை காக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
மனுவைப் பெற்ற இணை இயக்குநர் துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இந்த சந்திப்பின்போது, தி.மு.க. மாணவர் அணி அமைப்பாளர் எஸ்.பி. மணிமாறன், தொண்டர் அணி துணை அமைப்பாளர் ராஜேஷ், கிளைச் செயலாளர்கள் அந்தோணி, விஜயகுமார், முருகன், பிரகாஷ், இளைஞர் அணி அமைப்பாளர் தாமரை க்கண்ணன், கிரி, சாலமன், மூர்த்தி, காங்கிரஸ் சோமு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வனதுறை அதிகாரியிடம் திமுக பொதுகுழு உறுப்பினர் கோபால் மனு அளித்தார்.