search icon
என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • சில மர்ம நபர்கள் வங்கியின் பின்புறம் இருந்த சி.சி.டி.வி. கேமரா இணைப்பை துண்டித்துள்ளனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த துணிகர செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே புத்தனேந்தல் பகுதியில் பட்டமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கடன் சங்கம் இயங்கி வருகிறது. கடந்த 1977-ம் ஆண்டு கட்டப்பட்ட மிகவும் மோசமான நிலையில் உள்ள பழமையான கட்டிடத்தில் இந்த சங்கம் செயல்படுகிறது. இங்கு விவசாயிகளுக்கு தேவையான நகைக்கடன் உட்பட அனைத்து விதமான கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பட்டமங்கலம் கூட்டுறவு வங்கியில் வீரசோழன் அருகேயுள்ள வத்தாப்பேட்டை புதூரை சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 45) என்பவர் எழுத்தராகவும், கூடுதல் பொறுப்பு செயலராகவும் பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் பாப்பாங்குளம் கூட்டுறவு செயலர் ஓய்வுபெற்ற நிலையில் பாப்பாங்குளம் கூட்டுறவு வங்கியையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.

    இதற்கிடையே முத்துப்பாண்டி வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து கூட்டுறவு வங்கியை பூட்டிய நிலையில் வீடு திரும்பினார். நேற்று காலை அவர் பாப்பாங்குளம் கூட்டுறவு வங்கிக்கு சென்று விட்டு மதிய வேளையில் பட்டமங்கலம் கூட்டுறவு வங்கிக்கு வந்தபோது வங்கி கதவுகள் திறந்து கிடந்தன. மேலும் வங்கியின் அலுவலக சுவர் உடைக்கப்பட்டிருந்தது கண்டு முத்துப்பாண்டி அதிர்ச்சியடைந்தார்.

    இதனையடுத்து வங்கியை சுற்றி வந்து கட்டிடத்தை சரிபார்த்த போது கட்டிடத்தின் பின்பக்க சுவர் கடப்பாரை போன்ற ஆயுதங்களால் துளையிட்டிருந்ததை அறிந்தார். அதேபோல் லாக்கர் இருந்த பகுதியின் மேற்கூரையும் உடைக்கப்பட்டிருந்தது. பின்னர் அவர் வங்கிக்குள் சென்று லாக்கரை திறந்து பார்த்தபோது அதில் நகைகள் அனைத்தும் பத்திரமாக இருந்ததை கண்டு நிம்மதி பெரு மூச்சு விட்டார்.

    இதுகுறித்து அவர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நரிக்குடி போலீசார் கூட்டுறவு வங்கிக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிப்பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவில் கூட்டுறவு வங்கிக்கு வந்த அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் வங்கியின் பின்புறம் இருந்த சி.சி.டி.வி. கேமரா இணைப்பை துண்டித்துள்ளனர்.

    தொடர்ந்து பின்பக்க சுவரை கடப்பாரையால் இடித்து துளையிட்ட கொள்ளையர்கள் வங்கிக்குள் செல்ல முயற்சி செய்துள்ளனர். பின்னர் கழிவறை அருகேயுள்ள ஜன்னல் பகுதியையும் கடப்பாரையால் இடித்து தள்ளி ஜன்னல் வழியாகவும் வங்கியினுள் நுழைய முயன்றுள்ளனர்.

    ஆனால் வங்கியினுள் இயங்கி கொண்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை பார்த்ததும் கொள்ளையர்கள் போலீசிடம் சிக்கிக்கொள்வோம் என தெரிந்து அங்கிருந்து பக்கத்து கட்டிடத்திற்கு சென்ற மேற்கூரையை பிரித்து லாக்கர் இருக்கும் பகுதிக்கு சென்றுள்ளனர். வங்கி லாக்கரை உடைக்க முடியாததால் அங்கிருந்த ரூ.32 லட்சம் மதிப்புள்ள சுமார் 67 பவுன் நகைகள் தப்பியது.

    கொள்ளை முயற்சி தோல்வியடைந்ததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். கூட்டுறவு வங்கியில் லாக்கர் வசதி இருந்ததால் விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நகைகள் தப்பியது. மேலும் அங்கு வந்த விருதுநகர் கைரேகை நிபுணர்கள் வங்கியில் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் செய்தனர். மோப்பநாய் உதவியுடனும் சோதனை நடந்தது.

    நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த துணிகர செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    • மழை எதிரொலியால் ஓடைகளில் குளிக்க தடை.
    • இரவில் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது.

    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவி லுக்கு அமாவாசை, பவுர்ண மிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்தில் 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    அந்த வகையில் பிரதோ ஷம், ஆனி மாத பவுர்ண மியை முன்னிட்டு இன்று முதல் வருகிற 22-ந்தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. பிரதோஷ நிகழ்ச்சியில் பங் கேற்க சென்னை, நெல்லை, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு நள்ளிரவு முதல் வருகை தந்தனர்.

    வானம் மேக மூட்டத்துடன் மழை பெய்வது போன்ற சூழல் நிலவியதால் குறைந்த அளவிலான பக்தர்களே வந்திருந்தனர். இதையடுத்து காலை 6.15 மணிக்கு வனத்துறை கேட் திறந்துவிடப்பட்டது. குளுமையான சூழலால் பக்தர்கள் சிரமமின்றி மலையேறி சென்றனர். தற்போது பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதாலும், மழை பெய்தால் அனுமதிக்க மாட்டார்கள் என்பதாலும், அப்படியே வந்தாலும் கோவிலுக்குச் செல்ல முடியாமல் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும் பக்தர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருந்தது.

    இன்று மாலை சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் மொட்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இரவில் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது என்றும், தரிசனம் முடிந்து திரும்பி வருபவர்கள் ஓடைகளில் இறங்கி குளிக்க கூடாது என வனத்துறையினர் தெரி வித்துள்ளனர்.

    நாளை மறுநாள் (21-ந் தேதி) ஆனி மாத பவுர்ணமி நாளில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • போலீசார் அவர்களை பிடித்து சோதனை செய்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    சமீப காலமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், அதன் காரணமாக மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

    இதையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் சமூக விரோத கும்பலை கூண்டோடு கைது செய்து இளையதலை முறையினரின் நலன் காக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் நேற்று நடந்த கலெக்டர்கள் மாநாட்டிலும் அவர் இதனை வலியுறுத்தி உள்ளார்.

    அதன்பேரில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை பணியினை மேற்கொண்டுள்ளனர். இதில் தினமும் கிலோ கணக்கில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

    இருந்தபோதிலும் ஒருசில இடங்களில் துணிச்சலாக கஞ்சா விற்பனை நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையிலான போலீசார் மங்காபுரம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது மங்காபுரம் பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளி அருகில் ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி பகுதியைச் சேர்ந்த வாசு (வயது 37), அதே பகுதியைச் சேர்ந்த சத்யா (39), அனுசுயா (32) ஆகிய மூன்று பேரும் மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா 430 கிராமை வைத்து ஒரு மோட்டார் சைக்கிள் அருகில் நின்று கொண்டிருந்தனர்.

    போலீசார் அவர்களை பிடித்து சோதனை செய்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பேரிடமும் விசாரித்ததில், வாசு கஞ்சாவை விற்பனைக்காக வெளியூரில் இருந்து கொண்டு வந்து சத்யா மற்றும் அனுசுயாஆகிய இருவரிடம் கொடுத்ததாகவும், அதனை அவர்கள் மாணவர்கள் உள்ளிட்டோருக்கு விற்பனை செய்ய இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் கஞ்சாவை கடத்தி வந்த வாசு, சத்யா, அனுசியா ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த கறிவிருந்து நிகழ்ச்சியில் பெண்களுக்கு கண்டிப்பாக அனுமதியில்லை.
    • முன்னதாக பக்தர்கள் மனமுருகி வேண்டி மாசாணம் சுவாமியை தரிசனம் செய்து திருவருள் பெற்று சென்றனர்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள மறையூர் கிராமத்தில் ஆண்டாண்டு காலமாக மிகவும் பிரசித்தி பெற்ற. மாசாணம் சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடமும் வைகாசி வளர்பிறையில் மறையூர் மாசாணம் சுவாமி கோவில் வைகாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

    கிருதுமால் ஆற்றங்கரையில் அமைந்து அருள் பாலிக்கும் மாசாணம் சுவாமி கோவில் ஆலயத்தில் பூஜை நேற்றிரவு வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் கோவிலில் நள்ளிரவில் நடைபெறும் கப்பரை பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. மாசாணம் சுவாமியை நினைத்து மனமுருகி வேண்டினால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

    இந்த திருவிழாவில் கலந்து கொள்ளவும், தரிசனம் செய்யவும் பெண்களுக்கு அனுமதியில்லை. மறையூர் மந்தையம்மன் கோவிலில் புறப்பட்ட மாசாணம் சுவாமி, அரியசாமி மற்றும் வீரபத்திர சுவாமி பூசாரிகள் மாசாணம் சுவாமி கோவிலை வந்தடைவர். அங்கு சுவாமியின் உத்தரவை பெற்ற பின்பு அங்குள்ள அம்மி கல்லில் மஞ்சளை வைத்து சத்தம் எழுப்பும் வகையில் அதனை தட்டி கலயத்தில் வைத்து சுவாமி உத்தரவிற்கு பிறகு பீடமாக காட்சியளிக்கும் மாசாணம் கோவில் ஆலயத்தை வந்தடைவர். அதன் பின்னர் சுவாமிக்கு பொங்கல் வைத்து பல்வேறு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்ற நிலையில் பக்தர்கள் நேர்த்தி கடனாக செலுத்திய சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆடுகள், சேவல்கள் மற்றும் கோழிகளை பலியிட்டு உணவாக சமைக்கப்பட்டு இன்று அதிகாலை முதல் கோவில் வளாகத்தில் மாபெரும் கறிவிருந்து அன்னதானம் நடைபெற்றது.

    இந்த கறிவிருந்து அன்னதான நிகழ்ச்சியானது காலை 5 மணிக்கு தொடங்கி சூரிய உதயத்திற்கு முன்பாகவே நிறைவடைவது மிகவும் சிறப்பு. ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இந்த கறிவிருந்து நிகழ்ச்சியில் பெண்களுக்கு கண்டிப்பாக அனுமதியில்லை.

    அதுமட்டுமின்றி அன்னதானம் முடிந்து மீதமுள்ள சாதம், எஞ்சிய கறி எதையும் கோவில் எல்லையை அடுத்து எடுத்து செல்ல அனுமதியில்லை.இந்த நிலையில் மீதமிருந்த உணவுகளை பெரிய பள்ளத்தில் போட்டு புதைக்கும் நிகழ்ச்சி வினோதமானது.

    இந்த திருவிழாவில் சென்னை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, கோவை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் வசித்து வரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் தரையில் அமர்ந்து கறிவிருந்து அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பசியாறினர்.

    முன்னதாக பக்தர்கள் மனமுருகி வேண்டி மாசாணம் சுவாமியை தரிசனம் செய்து திருவருள் பெற்று சென்றனர்.

    • ஒரு சின்ன பையன் முதல்முறையா தேர்தல்ல நிக்கிறாரு. அப்படி ஜெயிச்சாதான் என்ன போச்சு உங்களுக்கு?
    • இப்படி பொறுப்பில்லாமல் பேசுவது பிரேமலத்தவன் வழக்கம்.

    விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜயப்ரபாகரன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் தோல்வியடைந்தார்..

    இது தொடர்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "50 - 60 வருசமா கட்சி நடத்துறீங்க, ஆட்சியில இருக்கீங்க. ஒரு சின்ன பையன் முதல்முறையா தேர்தல்ல நிக்கிறாரு. அப்படி ஜெயிச்சாதான் என்ன போச்சு உங்களுக்கு?

    39 தொகுதி நீங்க ஜெயிச்சதா அறிவிச்சிங்கள்ல, ஒரு தொகுதில கடைசி வரைக்கும் போராடி வராரே ஒரு இளைஞர், அவரை பெரிய மனசோட நீங்க ஜெயிக்க வச்சிருந்தீங்கனா, இந்த ஆட்சியை நா தலைவணங்கி போற்றியிருப்பேன் வரவேற்றிருப்பேன்.

    ஆனால் அதிலும் சூழ்ச்சி செய்து அவர் ஜெயிக்க கூடாது என்பதற்காக அவர்கள் அமைச்சர்களை வைத்து அதிகாரிகளை மிரட்டி தவறு செய்துள்ளீர்கள்.

    விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும்" என்று அவர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இது தொடர்பாக பேசிய விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், "பிரேமலதா முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். வாக்கு என்னும் மையத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டு கிளம்பினார்கள். ஆனால் அடுத்த நாள் சென்னையில் சின்ன பையனா இருந்தா என்ன என்று பிரேமலதா பேசுகிறார். இது என்ன வடிவேல் படமா" இது பாராளுமன்ற தேர்தல். இப்படி பொறுப்பில்லாமல் பேசுவது பிரேமலதாவின் வழக்கம். வேண்டுமானால் அவர் சட்ட போராட்டம் நடத்தட்டும்" என்று தெரிவித்துள்ளார் .

    மேலும் பேசிய அவர், "மோடியின் பதவியேற்பு விழாவில் அதானியும் அம்பானியும் கலந்து கொண்டுள்ளனர். இந்த அரசு அதானி அம்பானிகளுக்கானது தான் என்பதை மீண்டும் ஒருமுறை மோடி நிரூபித்துள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தலோடு பாஜக கூட்டணியின் ஆட்சி முடிவுக்கு வரும். ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவின் நிர்வாக தோல்வி" என்று பேசியுள்ளார்.

    • தடுப்பு சுவரில் மோதி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
    • விபத்தில் பஸ்சின் சக்கரங்கள் கழன்று நொறுங்கி பலத்த சேதமடைந்தது.

    விருதுநகர்:

    கோவையில் இருந்து கோவில்பட்டி நோக்கி இன்று அதிகாலை அரசு விரைவு பேருந்து ஒன்று 39 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை பழனியை சேர்ந்த டிரைவர் முருகபூபதி (வயது 36) என்பவர் ஓட்டி சென்றார். பேருந்தில் பேரையூரை சேர்ந்த பிரதீப் நடத்துனராக பணியில் இருந்தார்.

    இந்நிலையில் விருதுநகர் அருகே விருதுநகர்-சாத்தூர் சாலையில் காலை 5.30 மணியளவில் சென்றபோது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

    வச்சகாரப்பட்டி அருகே சாலையோர தடுப்பு சுவரின் மீது மோதி சாலையோர பள்ளத்தில் பேருந்து நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சின் இருபுறமும் சக்கரங்கள் கழன்று நொறுங்கி பேருந்து பலத்த சேதமடைந்தது.

    இதில் பிரபு(31), கோவையை சேர்ந்த நாகராஜன் என்பவரின் மனைவி புவனேஸ்வரி (33) ஆகியோர் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.

    மேலும் பேருந்தில் பயணம் செய்த 37 பயணிகளும் காய மடைந்தனர். தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் உயிருக்கு போராடிய பிரபு மற்றும் புவனேஸ்வரியை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே புவனேஸ்வரி உயிரிழந்தார். பிரபு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    • 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி.
    • குறைந்த அளவிலான பக்தர்களே வருகை தந்திருந்தனர்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குாட தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோ ஷத்திற்கு 2 நாட்கள் என மாதம் 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். கடந்த 4-ந்தேதியில் இருந்து நாளை வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட் டுள்ளது.

    இன்று வைகாசி மாத அமாவாசை தினத்தை யொட்டி சென்னை, கோவை, நெல்லை, தூத்துக் குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் நள்ளிரவு முதல் வருகை தந்து தாணிப்பாறை வனத்துறை கேட்பு முன்பு குவிந்தனர்.

    இன்று காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் உடைமைகளை வனத்துறையினர் சோதனை செய்து அனுப்பினர்.

    காலையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. பக்தர்கள் வெயில் தெரியாத நிலையில் சாமி தரிசனம் செய்ய சென்றனர். இன்று மழை பெய்தால் அனுமதி வழங்கப்படாது என்று முன்கூட்டியே அறிவிப்பு வெளியாகி இருந்தது. எனவே தாணிப்பாறை வரை சென்று கோவிலுக்கு செல்ல முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இன்று குறைந்த அளவிலான பக்தர்களே வருகை தந்திருந்தனர்.

    வைகாசி அமாவாசை ஒட்டி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சுவாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் மொட்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத் தினர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்தி ருந்தனர். பக்தர்கள் பல முறை தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் தற்போது வரை மருத்துவக்கு ழுவினர் நியமிக்கப்படாதது அனைத்து தரப்பினருக்கும் ஒரு குறையாகவே இருந்து வருகிறது. 

    • வைகாசி மாத அமாவாசை ஒட்டி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
    • பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதம் 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். கடந்த 4-ந்தேதியில் இருந்து நாளை வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இன்று வைகாசி மாத அமாவாசை தினத்தையொட்டி சென்னை, கோவை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் நள்ளிரவு முதல் வருகை தந்து தாணிப்பாறை வனத்துறை கேட்பு முன்பு குவிந்தனர். இன்று காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் உடைமைகளை வனத்துறையினர் சோதனை செய்து அனுப்பினர்.

    காலையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. பக்தர்கள் வெயில் தெரியாத நிலையில் சாமி தரிசனம் செய்ய சென்றனர். இன்று மழை பெய்தால் அனுமதி வழங்கப்படாது என்று முன்கூட்டியே அறிவிப்பு வெளியாகி இருந்தது. எனவே தாணிப்பாறை வரை சென்று கோவிலுக்கு செல்ல முடியாமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் இன்று குறைந்த அளவிலான பக்தர்களே வருகை தந்திருந்தனர்.

    வைகாசி அமாவாசை ஒட்டி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சுவாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் மொட்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். பக்தர்கள் பலமுறை தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் தற்போது வரை மருத்துவக்குழுவினர் நியமிக்கப்படாதது அனைத்து தரப்பினருக்கும் ஒரு குறையாகவே இருந்து வருகிறது.

    • சென்னையில் நாளை நடைபெறும் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தார்.
    • தகவல் அறிந்த ராஜபாளையம் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 50). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

    கணேசன், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனியார் எண்ணெய் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையே சென்னையில் நாளை நடைபெறும் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தார்.

    இதற்கிடையே இன்று காலை ராஜபாளையத்தில் உள்ள அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் கதவு திறந்து கிடந்துள்ளது. இதைப்பார்த்த பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுபற்றி அவர்கள் உடனடியாக கணேசனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக அவர் ராஜபாளையம் திரும்பிக் கொண்டு இருக்கிறார். முன்னதாக தகவல் அறிந்த ராஜபாளையம் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கணேசன் வீட்டில் யாரும் இல்லாததை முன்கூட்டியே அறிந்திருந்த மர்மநபர்கள் நள்ளிரவில் புகுந்து 100 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

    • சுவாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும்.
    • பிரதோஷம் வருவதால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும்.

    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலை யில் சதுரகிரி சுந்தர மகா லிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோ ஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு எட்டு நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் வரும் 4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

    இதில் 4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை காலை 6 மணி முதல் 12 மணி வரையி லும், 7-ந்தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படு வார்கள். 4-ந்தேதி வைகாசி மாத பிரதோஷத்தை யொட்டி மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற உள்ளது.

    பின்னர் சுவாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். அதேபோல் 6-ந்தேதி வைகாசி அமாவா சையொட்டி சுந்தர மகாலி ங்கம் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. விடுமுறை தினத்தில் பிரதோஷம் வருவதால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும், இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை. சளி, இருமல், காய்ச்சல் உள்ள வர்கள் கோவிலுக்கு வர வேண்டாம். ஓடைகளில் இறங்கி குளிக்க கூடாது, எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களான பீடி, சிகரெட், தீப்பெட்டி, மது மற்றும் போதை வஸ்து பொருட்கள், பாலிதீன் கேரிப்பை போன்றவற்றை கொண்டுவர தடை விதிக் கப்பட்டுள்ளது.

    வழிபாட்டிற்கான ஏற்பா டுகளை சுந்தரமகாலிங்கம் கோவில் பரம்பரை அறங்கா வலர் ராஜா என்ற பெரிய சாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர். வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்தால் அனுமதி மறுக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

    • லாரியை நிறுத்திய அனில்குமார் முன் பகுதியில் சென்று பார்ப்பதற்குள் தீ வேகமாக பரவியது.
    • தீ விபத்தில் லாரியின் முன்பகுதி மற்றும் 720 சிமெண்ட் மூட்டைகள் முற்றிலும் சேதம் அடைந்தன.

    சாத்தூர்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலா பகுதியை சேர்ந்தவர் அனில்குமார். லாரி டிரைவரான இவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஆர்.ஆர். நகர் பகுதியில் உள்ள தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து நேற்று அதிகாலை 36 டன் எடை கொண்ட 720 சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்டார்.

    இந்த நிலையில் அனில் குமார் ஓட்டி வந்த லாரி சாத்தூர் அருகே உள்ள எட்டூர் வட்டம் விலக்கு அருகே சென்றபோது மின் கசிவு காரணமாக திடீரென லாரியின் முன்பகுதியில் தீப்பற்றி கரும்புகை வெளியேறியது. உடனே லாரியை நிறுத்திய அனில்குமார் முன் பகுதியில் சென்று பார்ப்பதற்குள் தீ வேகமாக பரவியது. இதுகுறித்து அவர் சாத்தூர் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் லாரியின் முன்பகுதி மற்றும் 720 சிமெண்ட் மூட்டைகள் முற்றிலும் சேதம் அடைந்தன.

    தீ விபத்து குறித்து வச்சகாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பட்டாசு ஆலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
    • மாவட்டத்தில் உள்ள பல்வேறு பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், வெம் பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய அளவிலான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலைகளில் நேரடி யாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த பட்டாசு தொழிற்சாலைகள் மத்திய அரசு வழங்கக்கூடிய நாக்பூர் லைசன்ஸ் மற்றும் சென்னை லைசன்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உரி மம் பெற்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர் பட்டாசு விபத்தின் காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பட்டாசு ஆலைகளில் விதிமுறைகள் மீறப்படுவது குறித்து ஆய்வு செய்வதற்காக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு அந்த குழுக்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி பேரியம் நைட்ரேட் என்ற பச்சை உப்பு மற்றும் தொடர் வெடிக்கான தடையை அறிவித்தது. அதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பேன்சி ரக தொடர் வெடிக்கான சாட் வெடிகளையும் அதில் பயன்படுத்தப்படும் பச்சை உப்பையும் கண்டுகொள்ளாமல்விட்டது.

    மேலும் தொடர் வெடியின் வகைகளில் ஒன்றான சரவெடி தயாரிக்கும் சிறிய தொழிற்சாலைகளை மட்டுமே மூடி வருவதால் மாவட்ட நிர்வாகத்தை கண்டிக்கும் விதமாகவும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டாப்மா) சார்பில் இன்று முதல் (24-ந்தேதி) மறு அறிவிப்பு வரும் வரை காலவறையற்ற விடுமுறை அளிப்பதாக அனைத்து சங்க உறுப்பினர்களாலும் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதையடுத்து இன்று காலை பட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ×