search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ஸ்பெயின் அணி தொடர்ந்து 14 டி20 போட்டிகளில் வெற்றிகளை பதிவுசெய்தது.
    • இந்தப் பட்டியலில் இந்திய அணி 3- வது இடத்தில் உள்ளது.

    துபாய்:

    ஐ.சி.சி. நடத்தும் டி20 உலகக் கோப்பை வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான ஐரோப்பிய பிராந்திய தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடந்து வருகின்றன.

    இதில் ஸ்பெயின் கிரிக்கெட் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் (ஒரு போட்டி முடிவு இல்லை) குரூப் சி பிரிவில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதில் கிரீஸ் அணியை வென்றதன் மூலம் ஸ்பெயின் அணி தொடர்ந்து 14 டி20 போட்டிகளில் வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் பெற்ற அணி என்ற புதிய உலக சாதனையை ஸ்பெயின் அணி படைத்துள்ளது.

    இந்தப் பட்டியலில் இந்திய அணி 12 வெற்றிகளுடன் ஆப்கானிஸ்தான் மற்றும் ருமேனியா அணியுடன் 3-வது இடம் பிடித்துள்ளது.

    மேலும், மலேசியா மற்றும் பெர்முடா ஆகிய அணிகள் 13 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

    • ஸ்மித், ஸ்டார்க், உஸ்மான் கவாஜா, மார்னஸ் ஆகியோர் ஜாம்பவான் சச்சினை தேர்வு செய்தனர்.
    • ஜோஷ் ஹசில்வுட் ஆஸ்திரேலியாவுக்காக விளையாட விரும்பும் வீரராக பும்ராவை தேர்வு செய்தார்.

    ஆஸ்திரேலிய அணி அடுத்த மாதம் ஸ்காட்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அதனை தொடர்ந்து இங்கிலாந்துக்கு சென்று டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி வீரர்களிடம் ஒரு இந்திய வீரரை நமது அணியில் தேர்வு செய்ய விரும்பினால் யாரை தேர்வு செய்வீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சச்சின், விராட் கோலி, பும்ரா ஆகியோரை தேர்வு செய்தனர்.

    ஸ்மித், ஸ்டார்க், உஸ்மான் கவாஜா, மார்னஸ் ஆகியோர் ஜாம்பவான் சச்சினை தேர்வு செய்தனர். அதே நேரத்தில் நாதன் லயன், அலெக்ஸ் கேரி ஆகியோர் விராட் கோலியை தேர்வு செய்தனர். மேலும் ஜோஷ் ஹசில்வுட் ஆஸ்திரேலியாவுக்காக விளையாட விரும்பும் வீரராக பும்ராவை தேர்வு செய்தார்.

    ஆஸ்திரேலிய வீரர்கள் டோனியை தேர்வு செய்யாதது இந்திய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    • மாணவனின் படிப்புக்கு ரிஷப் பண்ட் 90,000 ரூபாய் பணத்தை அனுப்பியதாக தெரிகிறது.
    • ரிஷப் பண்ட் அந்த மாணவனுக்கு உதவி செய்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வெளி வந்தன.

    இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் விளையாடி வருகிறார். அந்த நிலையில் ட்விட்டர் பக்கத்தில் தம்முடைய படிப்புக்கு பண உதவி செய்யுமாறு ஒரு மாணவர் அவரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

    குறிப்பாக ஏழை குடும்பத்தைச் சேர்ந்த தமது இன்ஜினியரிங் படிப்பை முடிக்க பண உதவி செய்யுமாறு சான்றிதழ்களை காண்பித்து அவர் கோரிக்கை வைத்தார்.

    இது பற்றி அந்த நபர் ட்விட்டரில் பதிவிட்டது பின்வருமாறு. "ஹலோ ரிஷப் பண்ட் சார். நான் பொறியியல் கல்விக்கு நிதி இல்லாமல் போராடும் மாணவன். உங்கள் ஆதரவு என் வாழ்க்கையை மாற்றும். எனது பிரச்சாரத்திற்கு உதவ அல்லது பகிர்வதை கருத்தில் கொள்ளவும். உங்கள் கருணை எனக்கு எல்லாவற்றையும் கொடுக்கும்" என்று பதிவிட்டார்.

    அதைப் பார்த்த ரிஷப் பண்ட் அந்த மாணவனின் படிப்புக்கு 90,000 ரூபாய் பணத்தை அனுப்பியதாக தெரிகிறது.

    அத்துடன் அந்த நபருக்கு "உங்களுடைய கனவுகளை தொடர்ந்து துரத்துங்கள். கடவுள் எப்போதும் சிறந்த திட்டங்களை வைத்திருப்பார்" என்று ரிஷப் பண்ட் பதிலளித்தார். அவருக்கு அந்த நபர் "உங்கள் ஆதரவு எல்லாவற்றையும் குறிக்கிறது. கல்விக்கு தேவையான நிதி சேகரிக்கப்படவில்லை. இதை பரப்புவதில் எந்த உதவியும் ஒரு ஆசிர்வாதமாக இருக்கும். இன்னும் என் கனவுகளை துரத்துகிறேன்" என்று பதிலளித்தார். அத்துடன் ரிஷப் பண்ட் பணத்தை அனுப்பிய விவரங்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அந்த நபர் "நன்றி ரிஷப் பையா" என்று பதிவிட்டார். இதைத் தொடர்ந்து ரிஷப் பண்ட் அந்த மாணவனுக்கு உதவி செய்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வெளி வந்தன. ஆனால் அதைப் பார்த்த இதர இந்திய ரசிகர்கள் ரிஷப் பண்ட் ஏமாற்றப்பட்டதாக ஆதாரத்துடன் கண்டுபிடித்தனர்.

    அதாவது அதே நம்பர் கடந்த 3/4/2024 ம் தேதியன்று கல்லூரி படிப்புக்காக வைத்திருந்த 90000 ரூபாயை ஆன்லைனில் ஆர்சிபி அணியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு இழந்ததாக ட்விட்டரில் பதிவிட்டார். எனவே தம்முடைய கல்லூரி படிப்புக்காக உதவி செய்யுங்கள் என்று அந்த நபர் இதே போன்ற கோரிக்கையை வைத்திருந்தார். அந்த ஆதாரத்தை எடுத்த ரசிகர்கள் "இவருக்கு ஏன் பணம் அனுப்பினீர்கள்? இவர் ஏமாற்றுபவர்" என்று ரிஷப் பண்ட்டுக்கு தெரிவித்தனர்.

    இருப்பினும் ரிஷப் பண்ட் அதற்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆனால் மற்ற ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து நம் நாட்டுக்காக விளையாடும் கிரிக்கெட்டரை இப்படியா ஏமாற்றுவீர்கள்? என்று அந்த குறிப்பிட்ட நபரை ட்விட்டரில் ஆதாரத்துடன் விமர்சித்து திட்டி தீர்த்தார்கள். அதற்கு தாக்குப்பிடிக்க முடியாத அந்த ரசிகர் தற்போது 90,000 ரூபாய் பணத்தை மீண்டும் ரிஷப் பண்ட்க்கு அனுப்பிவிட்டதாகவும் தம்மை அனைவரும் மன்னித்து விடுங்கள் என்றும் கூறியுள்ளார்.

    • கடந்த 2020-ம் ஆண்டில் டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் 1 வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
    • 2022-ம் ஆண்டில் இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்திருந்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஆன டேவிட் மலான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

    டேவிட் மலான் 2017-ம் ஆண்டு இங்கிலாந்தின் டெஸ்ட் அணியில் அறிமுகமானார். இங்கிலாந்து அணிக்காக டேவிட் மலான் கடைசியாக 2023-ம் ஆண்டு விளையாடினார்.

    36 வயதாகும் இவர் இதுவரை 22 டெஸ்ட், 30 ஒருநாள் மற்றும் 62 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    கடந்த 2020-ம் ஆண்டில் டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் 1 வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

    2022-ம் ஆண்டில் இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பை வென்ற அணியிலும் இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பி.சி.சி.ஐ-யின் புதிய செயலாளராக ரோகன் ஜெட்லி தேர்ந்து எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • ஐசிசி-யின் தலைவராக ஜெய்ஷா டிசம்பர் 1-ந் தேதி பொறுப்பேற்கிறார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) செயலாளராக இருந்த ஜெய்ஷா ஐ.சி.சி.யின் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) தலைவராக ஒரு மனதாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.

    35 வயதான அவர் இளம் வயதில் ஐ.சி.சி. தலைவர் என்ற பெருமையை பெறுகிறார். ஜெய்ஷா டிசம்பர் 1-ந்தேதி பொறுப்பை ஏற்கிறார்.

    ஜெய்ஷா ஐ.சி.சி. தலைவராகி விட்டதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய செயலாளராக யார்? நியமிக்கப்பட இருக்கிறார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும், மறைந்த மத்திய மந்திரி அருண் ஜெட்லியின் மகனுமான ரோகன் ஜெட்லி பி.சி.சி.ஐ-யின் புதிய செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் இந்த தகவலை அவர் மறுத்துள்ளார்.

    கிரிக்கெட் வாரிய பொருளாளரும், மராட்டிய பா.ஜனதா நிர்வாகியுமான ஆசிஷ் ஷிலார், காங்கிரஸ் எம்.பி.யும், கிரிக்கெட் வாரிய துணைத் தலைவருமான ராஜீவ் சுக்லா, ஐ.பி.எல். தலைவர் அருண்துமால், மேற்கு வங்காள கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் அபிஷேக் டால்மியா, திலகர் கண்ணா உள்ளிட்டோரும் போட்டியில் உள்ளனர்.

    • வேகம்தான் நம்முடைய பலம் என்பது உலகிற்கே தெரியும்.
    • நம்முடைய டாப் வேகப்பந்து வீச்சாளர்கள் அதே வேகத்தில் வீசுவதில்லை.

    லாகூர்:

    பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி பெற்றது.இந்த தோல்விக்கு பாகிஸ்தான் பவுலர்கள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றனர்.

    இந்நிலையில் பாகிஸ்தான் பவுலர்களை அந்நாட்டு முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கடுமையாக சாடியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:- 

    வேகம்தான் நம்முடைய பலம் என்பது உலகிற்கே தெரியும். ஆனால் தற்போது நம்முடைய டாப் வேகப்பந்து வீச்சாளர்கள் அதே வேகத்தில் வீசுவதில்லை. அதுதான் முதல் போட்டியில் தோல்வியை சந்திக்க காரணம். அவர்களின் வேகம் அதிகமாக குறைந்து விட்டது. ஒருவேளை காயம் இருந்தால் அதை அவர்கள் வெளியே சொல்ல வேண்டும். ஷாஹீன், நசீம், குர்ராம் ஆகியோர் 145 கி.மீ வேகத்தில் தங்களது கெரியரை தொடங்கினர். ஆனால் தற்போது அவர்களுடைய வேகம் 130க்கு கீழே வந்து விட்டது. நம்முடைய பயிற்சியாளர்களை குறை சொல்ல வேண்டும்.

    ஜோப்ரா ஆர்ச்சர் காயத்தை சந்தித்து 2 வருடங்கள் கழித்து வந்தார். அப்போதும் அவர் தனது வேகத்தை இழக்கவில்லை. ஜஸ்பிரித் பும்ரா முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு வந்த பின்பும் அதே வேகத்தில் வீசுகிறார். காயத்தால் நீண்ட காலம் விளையாடாத பேட் கம்மின்ஸ் மீண்டும் விளையாடியபோது வேகம் குறைந்ததாக தெரியவில்லை. ஆனால் நமது பவுலர்களின் வேகம் ஏன் குறைந்து விட்டது? இத்தனைக்கும் நமது பயிற்சியாளர்கள் தேவையான வேலையை செய்கின்றனர். இருப்பினும் வேகம் 144 கிலோமீட்டரில் இருந்து 128ஆக குறைந்து விட்டது.

    என்று அவர் கூறினார்.

    • நீங்கள் கிரிக்கெட்டை மாபெரும் உயரத்திற்கு கொண்டுசெல்வதை பார்க்க ஆவலோடு உள்ளேன்.
    • உங்களின் நோக்கம் மற்றும் செயல்பாடு ஐசிசி-ன் வளர்ச்சிக்கு உதவும்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    2019 அக்டோபர் முதல் பிசிசிஐ கெளரவ செயலாளராகவும், 2021 ஜனவரி முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றிய ஜெய் ஷா, 2024 டிசம்பர் 1 முதல் ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

    இந்நிலையில் ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜெய்ஷாவுக்கு இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்ட்யா வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஐசிசி-ன் இளம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெய்ஷாவுக்கு வாழ்த்துகள். நீங்கள் கிரிக்கெட்டை மாபெரும் உயரத்திற்கு கொண்டுசெல்வதை பார்க்க ஆவலோடு உள்ளேன். உங்களின் நோக்கம் மற்றும் செயல்பாடு ஐசிசி-ன் வளர்ச்சிக்கு உதவும்.

    இவ்வாறு பாண்ட்யா கூறினார்.

    • மும்பை மற்றும் டிஎன்சிஏ லெவன் அணிகள் மோதி வருகிறது.
    • மும்பை அணிக்காக ஷ்ரேயாஸ் அய்யர் விளையாடுகிறார்.

    புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடர் தமிழ்நாட்டில் 4 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மத்திய பிரதேசம், டெல்லி, ஹரியானா, உள்ளிட்ட 12 அணிகள் மோதுகிறது. இந்த போட்டிகள் திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறுகிறது.

    இந்நிலையில் மும்பை மற்றும் டிஎன்சிஏ லெவன் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் மும்பை அணியில் விளையாடும் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீசும் போது சுனில் நரைன் ஸ்டைலில் பந்து வீசி அசத்தி உள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் சுனில் நரைன் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 50 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் அவரது சாதனைகள் பிரமிப்பானவை.
    • வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் கோலியே விட சிறந்த பேட்ஸ்மேன் யாரும் இல்லை.

    லண்டன்:

    இங்கிலாந்து கிரிக்கெட்டின் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சனிடம், வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் (ஒரு நாள் மற்றும் 20 ஓவர்) ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் (பினிஷர்) கில்லாடி யார் என்று கேட்கப்பட்டது.

    அதற்கு அவர் பதில் அளித்து கூறுகையில், 'இலக்கை விரட்டிப்பிடிப்பதில் (சேசிங்) இந்திய வீரர் விராட் கோலியை விட வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. குறிப்பாக 50 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் அவரது சாதனைகள் பிரமிப்பானவை.

    2-வது பேட்டிங்கின் போது அவர் அதிகமான சதங்களை (27 சதம்) அடித்துள்ளார். அத்துடன் அத்தகைய சூழலில் அவரது மனஉறுதியும், தன்னம்பிக்கையும் உயர்வாக இருக்கிறது. 1990-களின் இறுதி மற்றும் 2000-களில் சிறந்த பினிஷராக ஆஸ்திரேலியாவின் மைக்கேல் பெவன் திகழ்ந்தார்.

    அவர் 6-வது வரிசையில் இறங்கி அந்த பணியை செய்தார். பெரும்பாலும் அவர் 50, 60 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடிப்பார். ஆனால் கோலி 3-வது வரிசையில் களம் கண்டு நீண்ட நேரம் நிலைத்து நின்று பெரிய ஸ்கோர் அடித்து அணியை கரைசேர்ப்பார். உண்மையை சொல்வது என்றால் வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் கோலியே விட சிறந்த பேட்ஸ்மேன் யாரும் இல்லை என ஆண்டர்சன் கூறினார். 

    • மழைக் காரணமாக ஆட்டம் 13 ஓவராக குறைக்கப்பட்டது.
    • தென்ஆப்பிரிக்கா 108 ரன்கள் அடிக்க, 116 இலக்கை வெஸ்ட் இண்டீஸ் 9.2 ஓவரில் அடித்தது.

    வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. ஏற்கனவே முடிவடைந்த முதல் இரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியிருந்தது.

    இந்த நிலையில் இந்திய நேரப்படி நேற்றி நள்ளிரவு 3-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது.

    4.3 ஓவர் முடிந்த நிலையில் மழை குறுக்கிட்டது. நீண்ட நேரம் மழை பெய்ததால் ஆட்டம் 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    தென்ஆப்பிரிக்கா அணியின் ஸ்டப்ஸ் 15 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 40 ரன்களும், குப்டன் மார்கிராம் 12 பந்தில் 20 ரன்களும், ரிக்கெல்டன் 24 பந்தில 27 ரன்களும் அடிக்க தென்ஆப்பிரிக்கா 13 ஓவர் முடிவில 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஷெப்பர்டு 2 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் டக்வொர்த் லீவிஸ் விதியின்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 13 ஓவரில் 116 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    தொடக்க வீரர் அதான்சா 3 பந்தில் 1 ரன் எடுத்து வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப் உடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். இருவரும் தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சிதறடித்தனர்.

    நிக்கோலஸ் பூலன் 13 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 35 ரன்கள் விளாசினார். ஷாய் ஹோப் 24 பந்தில் 42 ரன்களும், அடுத்து வந்த ஹெட்மையர் 17 பந்தில் 31 ரன்களும் அடிக்க வெஸ்ட் இண்டீஸ் 9.2 ஓவரில் 116 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் டி20 வெஸ்ட் இண்டீஸ் 3-0 எனக் கைப்பற்றி தென்ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது.

    இதற்கு முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா 1-0 எனக் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஜெய் ஷா, 2024 டிசம்பர் 1 முதல் ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
    • 35 வயதான ஜெய் ஷா, மிக இளம் வயதில் ஐ.சி.சி. தலைவரானார் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    2019 அக்டோபர் முதல் பிசிசிஐ கெளரவ செயலாளராகவும், 2021 ஜனவரி முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றிய ஜெய் ஷா, 2024 டிசம்பர் 1 முதல் ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

    தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே இருக்கிறார். 2020-ம் ஆண்டு நவம்பர் 24-ந்தேதி அவர் அந்த பொறுப்பை ஏற்றார். வருகிற நவம்பர் 30-ந்தேதியுடன் அவரது 4 ஆண்டு காலம் பதவி முடிகிறது.

    3 முறை அந்த பதவியில் இருந்த அவர் மேலும் அதில் நீடிக்க விரும்பவில்லை. ஐ.சி.சி. சேர்மன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இதனையடுத்து, ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ஏற்கனவே இந்தியாவை சேர்ந்த ஜக்மோகன் டால் மியா, சரத் பவார். என்.சீனிவாசன், ஷசாங்க் மனோகர் போன்றவர்கள் ஐ.சி.சி. தலைமை பதவி வகித்தனர். அந்த வரிசையில் ஜெய்ஷாவும் இணைந்துள்ளார். 35 வயதான ஜெய் ஷா, மிக இளம் வயதில் ஐ.சி.சி. தலைவரானவர் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.

    • ஜடேஜா ஆகஸ்ட் 25 அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்பி புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.
    • இந்த பதிவு எக்ஸ் தளத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா ஆகஸ்ட் 25 அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செல்பி புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.

    இந்நிலையில், ஜடேஜா எடுத்த செல்பியில் டோனி இருப்பதைப் போல எடிட் செய்த புகைப்படத்தை பகிர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    அந்த பதிவில், "தல தளபதி வயலில் இருந்தால் எப்படி இருக்கும், சும்மா ஒரு கற்பனைக்கு" என்று சி.எஸ்.கே. அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த பதிவு எக்ஸ் தளத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

    ×