search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.
    • இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளர் பதவியின் இருந்து மேத்யூ மோட் விலகியுள்ளார்.

    நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளர் பதவியின் இருந்து மேத்யூ மோட் விலகியதை அடுத்து, அப்பதவிக்கு ராகுல் டிராவிட்டை நியமிக்கலாம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

    ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்த இயான் மோர்கன், "என் பார்வையில், இந்த நேரத்தில், இங்கிலாந்தின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட், ரிக்கி பாண்டிங், ஸ்டீபன் ஃப்ளெமிங் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் ஆகியோரிடம் நீங்கள் செல்வீர்கள் என்று நான் நம்புகிறேன். அதிலும் குறிப்பாக மெக்கல்லம் என்று நான் சொல்கிறேன். ஏனென்றால் அவர் உலகின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவர் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

    • இறுதியில் இந்திய அணி 47.5 ஓவர்களில் 230 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
    • வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இலங்கைக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது.

    இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கொழும்பில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்தது. பின்னர் 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் வீரர்கள் களம் இறங்கினர். இறுதியில் இந்திய அணி 47.5 ஓவர்களில் 230 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது.

    போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆன நிலையில், 7-வது வீரராக களமிறங்கி துனித் வெல்லலகே 7 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என 67 ரன்கள் அடித்தார். 29-வது ஓவரில் வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சை துனித் வெல்லலகே எதிர்கொண்டார். அப்போது, வாஷிங்டன் சுந்தர் எல்பிடபிள்யூ அவுட் கேட்க நடுவர் இல்லை என்று கூறினார். இதனால் டிஆர்எஸ் எடுக்க இந்திய அணி முடிவு செய்தது.

    அப்போது, வாஷிங்டன், ரோகித் சர்மாவை பார்க்க, அதற்கு அவர் கேலியாக, "என்ன? நீ சொல்லு. ஏன் என்னைப் பார்க்கிறாய்? நான் உனக்காக எல்லாவற்றையும் செய்ய வேண்டுமா?" என்று கூறுகிறார்.

    ரோகித் சர்மா பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரகிறது.


    • திருப்பூர் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல்.
    • அதிரடியாக விளையாடிய அஸ்வின் அரை சதம் விளாசினார்.

    சென்னை:

    நடப்பு டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் மற்றொரு அணியை தீர்மானிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சாய் கிஷோர் தலைமையிலான ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதின.

    இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய திருப்பூர் அணியின் பேட்ஸ்மேன்கள் திண்டுக்கல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். திருப்பூர் அணியின் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அணிக்கு பின்னடைவை கொடுத்தனர்.

    அந்த அணியில் 6 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் மான் பப்னா, கனேஷ் மற்றும் அமித் சாத்விக் சிறிது நேரம் தாக்குப்பிடித்து அணி 100 ரன்களை கடக்க உதவினர்.

    19.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த திருப்பூர் 108 ரன்களில் ஆல் அவுட் ஆனது. திண்டுக்கல் தரப்பில் அதிகபட்சமாக விக்னேஷ் 3 விக்கெட்டுகளும், சுபோத் பாட்டி மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

    இதனையடுத்து திண்டுக்கல் அணியின் தொடக்க வீரர்களாக விமல் குமார் - அஸ்வின் ஆகியோர் களமிறங்கினர். தொடங்கம் முதலே இந்த ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தது. 28 ரன்கள் எடுத்த நிலையில் விமல் குமார் அவுட் ஆனார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்வின் அரை சதம் விளாசினார்.

    இறுதியில் 10.5 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 112 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டி வருகிற 4-ந் தேதி நடக்கவுள்ளது.

    • ரோகித் சர்மா 58 ரன்கள் எடுத்து அடித்தளம் அமைத்து கொடுத்தார்.
    • ஷிவம் டுபே 24 பந்தில் 25 ரன்கள் சேர்த்தார்.

    இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக நிசாங்கா 56 ரன்களும், துனித் வெலாலகே 67 ரன்களும் (அவுட் இல்லை) எடுத்தனர்.

    இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    பின்னர் 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சுப்மன் கில் நிதானமாக விளையாட ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    ரோகித் சர்மா 47 பந்தில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 16 ரன்னில் வெளியேறினார். அடுத்து விராட் கோலியுடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். வாஷிங்டன் சுந்தர் 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. அணியின் ஸ்கோர் 130 ரன்னாக இருக்கும்போது விராட் கோலி 24 ரன்னில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் அய்யரும் நடையை கட்டினார். அவர் 23 ரன்கள் எடுத்தார். அப்போது இந்தியா 132 ரன்கள் எடுத்தது.

    அதன்பின் இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. கே.எல். ராகுல் 31 ரன்னிலும், அக்சர் பட்டேல் 33 ரன்னிலும் வெளியேறினர். அக்சர் பட்டேல் அவுட்டாகும்போது இந்தியாவுக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது.

    ஷிவம் டுபே ஒரு பக்கம் நிற்க மறுமுனையில் குல்தீப் யாதவ் (2) ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 211 ரன்கள் எடுத்திருந்தது.

    20 ரன் தேவை என்ற நிலையில் ஷிவம் டுபே உடன் முகமது சிராஜ் ஜோடி சேர்ந்தார். முகமது சிராஜை வைத்துக் கொண்டு ஷிவம் டுபே அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார். 5 ரன் தேவை என்றபோது பவுண்டரி அடித்தார். இதனால் போட்டி டை ஆனது. அடுத்த பந்தில் ஷிவம் டுபே எல்.பி.டபிள்யூ ஆனார். ஷிவம் டுபே 24 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் அர்ஷ்தீப் சிங் ஆட்டமிழக்க போட்டி டையில் முடிந்தது.

    • டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி முதலில் ஆடிய திருப்பூர் 108 ரன்னில் சுருண்டது.

    சென்னை:

    டிஎன்பிஎல் தொடரின் குவலிபையர் 2 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, திருப்பூர் அணி முதலில் களமிறங்கியது. தொடக்கம் முதலே திண்டுக்கல் அணி வீரர்கள் சிறப்பாகப் பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    இறுதியில், திருப்பூர் தமிழன்ஸ் அணி 19.4 ஓவரில் 108 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் மான் பாப்னா அதிகமாக 26 ரன்கள் எடுத்தார்.

    திண்டுக்கல் அணி சார்பில் விக்னேஷ் 3 விக்கெட்டும், சுபோத் பாதி, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்குகிறது.

    • அர்ஷ்தீப் சிங், அக்சர் பட்டேல் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
    • ஷிவம் டுபே ஒருநாள் போட்டியில் முதல் விக்கெட்டை கைப்பற்றினார்.

    இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் கே.எல்.ராகுல், ஷிவம் டுபே ஆகியோர் இடம் பிடித்தனர்.

    இலங்கை அணியின் பதும் நிசாங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அவிஷ்கா பெர்னாண்டோ 1 ரன் எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 14 ரன்னிலும், சதீரா சமரவிக்ரமா 8 ரன்னிலும், சரித் அசலங்கா 14 ரன்னிலும் வெளியேறினார்.

    ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் பதும் நிசாங்கா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 56 ரன்னில் வெளியேறினார்.

    நிசாங்கா ஆட்டமிழக்கும்போது இலங்கை அணி 26.3 ஓவரில் 101 ரன்கள் எடுத்திருந்தது. 7-வது வீரராக களம் இறங்கிய துனித் வெலாலகே அரைசதம் அடிக்க இலங்கை அணி 200 ரன்களை தாண்டியது. இறுதியாக 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்துள்ளது. வெலாலகே 65 பந்தில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். முகமது சிராஜ், ஷிவம் டுபே, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • ரெய்னா, டோனி ஆகியோரை ‘தல’ என்றும், ‘சின்ன தல’ என்றும் ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர்.
    • இந்தியா 2011-ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதில் சுரேஷ் ரெய்னா அங்கம் வகித்துள்ளார்.

    ஆம்ஸ்டர்டாம்:

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா இடையிலான உறவை கிரிக்கெட் ரசிகர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.

    டீம் இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நீண்ட காலமாக இணைந்து விளையாடிய இவர்கள் இருவரையும் 'தல' என்றும், 'சின்ன தல' என்றும் ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகின்றனர்.

    இந்தியா 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதில் சுரேஷ் ரெய்னா அங்கம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வை அறிவித்ததும், அவரது நெருங்கிய நண்பரான சுரேஷ் ரெய்னாவும் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

    சி.எஸ்.கே .அணி கோப்பையை வென்ற 4 சீசன்களிலும் சுரேஷ் ரைனாவின் பங்களிப்பு மிகப்பெரியது.

    இந்நிலையில், சுரேஷ் ரெய்னா நெதர்லாந்தில் உள்ள தனது ரெஸ்டாரண்டில் எம்.எஸ்.டோனி கையெழுத்திட்ட 7-ம் நம்பர் எண் கொண்ட ஜெர்சியை பிரேம் செய்து மாட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்திய அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குகிறது.
    • ரிஷப் பண்ட் விளையாடவில்லை. ஷிவம் டுபே விளையாடுகிறார்.

    இந்திய அணி தலா மூன்று டி20, ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. டி20 தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3-0 எனக் கைப்பற்றியது.

    இந்த நிலையில் முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் நடக்கிறது. இதில் இலங்கை அணி கேப்டன் அசலங்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    இந்திய அணியில் விக்கெட் கீப்பராக யார் களம் இறங்குவார்? என்பதில் கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் கே.எல். ராகுல் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    இந்திய அணி விவரம்:-

    1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மல் கில், 3. விராட் கோலி, 4. ஷ்ரேயாஸ் அய்யர், 5. கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), 6. வாஷிங்டன் சுந்தர், 7. அக்சார் பட்டேல், 8. குல்தீப் யாதவ், 9. அர்ஷ்தீப் சிங், 10. முகமது கிராஜ், 11. ஷிவம் டுபே.

    இலங்கை அணி விவரம்:-

    1. பதும் நிசாங்கா, 2. அவிஷ்கா பெர்னாண்டோ, 3. குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), 4. சதீரா சமரவிக்ரமா, 5. சரித் அசலங்கா (கேப்டன்), 6. ஜனித் லியானகே, 7. வனிந்து ஹசரங்கா, 8. துனித் வெலாலகே, 9. அகிலா தனஞ்ஜெயா, 10, அசிதா பெர்னாண்டோ, 11. முகமது சிராஸ்.

    • ஆலோசனை கூட்டம் பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்றது.
    • விதிகளில் மாற்றம் கொண்டுவர சென்னை அணி கோரிக்கை.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் டோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்காமல் தான் உள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் அணி உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் கடந்த புதன் கிழமை மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நடைபெற்றது.

    அந்த கூட்டத்தில் ஒவ்வொரு அணியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாக கடந்த இரு நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் டோனி தக்கவைக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்காக ஐபிஎல் விதிகளில் மாற்றம் கொண்டுவர சென்னை அணி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.

     


    அதன்படி ஐபிஎல் முதல் சீசன் தொடங்கிய 2008 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அமலில் இருந்த பழைய விதிமுறையை மீண்டும் அமலுக்கு கொண்டுவர சிஎஸ்கே அணி வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விதிமுறையை மீண்டும் அமலுக்கு கொண்டுவரும் போது சென்னை அணியில் எம்எஸ் டோனி தக்கவைக்கப்படலாம்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் விளையாடி வந்தால், அவரை அன்கேப்டு வீரர் (அதாவது தேசிய அணிக்காக விளையாடாத வீரர்) ஆக கருத்தில் கொள்ளப்படுவார் என்ற விதிமுறை ஐபிஎல் தொடரின் முதலாவது சீசன் துவங்கியதில் இருந்தே அமலில் இருந்து வந்தது. இதனை மீண்டும் அமலுக்கு கொண்டுவரவே சிஎஸ்கே ஆர்வம் காட்டுகிறது. எனினும், இதற்கு பல அணிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

    கடந்த ஆகஸ்ட் 15, 2020 ஆம் ஆண்டு எம்எஸ் டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஐபிஎல் 2022 மெகா ஏலத்தின் போது ரவீந்திரா ஜடேஜாவுக்கு அடுத்தப்படியாக சிஎஸ்கே அணி தக்கவைத்த வீரராக டோனி இருந்தார். அன்கேப்டு வீரருக்காக ஒரு அணி ரூ. 4 கோடி வரை செலவிடும்.

    இதேபோன்ற விதிமுறை 2025 ஏலத்திற்கு முன் அமலுக்கு வரும் பட்சத்தில், இதை கொண்டே சிஎஸ்கே அணியில் டோனி தக்கவைக்கப்படுவார் என்று தெரிகிறது. எனினும், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று நீண்டகாலம் விளையாடி வரும் வீரர்களுக்கு அன்கேப்டு அந்தஸ்தை வழங்குவதற்கு மற்ற ஐபிஎல் அணிகள் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

    • ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
    • மற்ற அணிகளின் உரிமையாளர்கள் கான்ஃபரன்ஸ் மூலம் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அந்த தொடருக்கு முன் மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட உள்ளது.

    இதில் ஒவ்வொரு அணிகளும் ரீ-டெய்ன் செய்வதற்கான வீரர்களின் எண்ணிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக ஐபிஎல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், டெல்லி கேபிடல் அணி உரிமையாளர் கிரண் குமார் கிராந்தி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் ரூபா குருநாத், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் மனோஜ் படலே ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மற்ற அணிகளின் உரிமையாளர்கள் கான்ஃபரன்ஸ் மூலம் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    அக்கூட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இணை உரிமையாளரான ஷாருக்கானுக்கும் பஞ்சாப் கிங்ஸ் இணை உரிமையாளர் நெஸ் வாடியாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

    ஒவ்வொரு அணியும் எவ்வளவு வீரர்களை ரீ-டெய்ன் செய்யலாம் என்ற விவாதத்தில் மிக குறைவான வீரர்களையே ரீ-டெய்ன் செய்யவேண்டும் என்று நெஸ் வாடியா தெரிவித்த கருத்தால் ஷாருக்கானுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், அப்பது ஒரு சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று வாடியா தெளிவுபடுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்," ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே எனக்கு ஷாருக்கை தெரியும்.

    அவருடைய குடும்பத்தை நான் அறிவேன். அவர் மீதும் குடும்பத்தின் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

    நாங்கள் வெகுதூரம் பின்னோக்கிச் செல்கிறோம், இதுபோன்ற ஆதாரமற்ற செய்திகளில் எந்த உண்மையும் இல்லை.

    கூட்டத்தில் பேசியது குறித்து நான் அதைச் சொல்லப் போவதில்லை. எல்லோரும் தங்கள் கருத்துக்களைச் சொன்னார்கள். நான் சொன்னது போல், நீங்கள் அனைத்து பங்குதாரர்களையும் பார்க்க வேண்டும். இது ஒரு நல்ல அமர்வு.

    ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஊடகங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் அதுவே எங்கள் நோக்கம். அதனால்தான் நாங்கள் இங்கே இருந்தோம்.

    இம்பாக்ட் பிளேயர், கேப்டு, அன் கேப்ட் பிளேயர் குறித்து எல்லாம் விவாதிக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தேவைப்படும் போதெல்லாம் ரசிகர்கள் என்னைப் பாராட்டுவார்கள்.
    • எனது ரசிகர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்றார் டோனி.

    புதுடெல்லி:

    இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றபோது கேப்டனாக செயல்பட்டவர் எம்.எஸ்.டோனி. ஐ.பி.எல். தொடரிலும் சி.எஸ்.கே. அணியை திறம்பட வழிநடத்தி வந்தவர் டோனி. எனவே ரசிகர்கள் இவரை செல்லமாக தல டோனி என அழைத்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சி.எஸ்.கே. அணியின் கேப்டனுமான எம்.எஸ்.டோனியிடம், ரசிகர்கள் தல என அன்பாக அழைப்பதற்கான காரணம் குறித்து தனியார் நிறுவனம் கேள்வி எழுப்பியது. அப்போது அவர் கூறியதாவது:

    சமூக வலைதளங்களில் என்னை தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லாததால் எனது ரசிகர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

    என் ரசிகர்களை நான் பாதுகாக்க வேண்டிய போதெல்லாம் அதை செய்கிறேன். தேவைப்படும் போதெல்லாம் ரசிகர்கள் என்னைப் பாராட்டுவார்கள். எனவே நான் யூகிக்கும் எதையும் செய்யவேண்டிய அவசியம் இல்லை. எனவே இதுவும் இதன் ஒரு பகுதியாகும்.

    எனது ரசிகர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் மிகவும் சுறுசுறுப்பான சமூக ஊடக பயனராக இல்லாவிட்டாலும், நான் இடுகையிடுவதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள், அவர்கள் அதை விரும்புகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

    • இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை தொடங்குகிறது.
    • பதிரனாவின் வலது தோள்பட்டையில் லேசான சுளுக்கு ஏற்பட்டது.

    இலங்கை சென்று இருக்கும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக வென்றுள்ளது.

    இதைதொடர்ந்து, இலங்கையில் உள்ள ஆர்பிஎஸ்சி மைதானத்தில் நாளை இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இந்த போட்டி வரும் 7ம் தேதியுடன் முடிவடைகிறது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இருந்து இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் மதீஷா பதிரனா மற்றும் தில்ஷன் மதுஷங்கா ஆகியோர் விலகியுள்ளனர்.

    இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இலங்கை அணியின் பீல்டிங் பயிற்சியின்போது மதுஷங்காவின் இடது காலில் காயம் ஏற்பட்டது.

    3வது டி20 போட்டியில் கேட்ச் பிடிக்க டைவிங் செய்யும்போது பதிரனாவின் வலது தோள்பட்டையில் லேசான சுளுக்கு ஏற்பட்டது.

    இதனால், செவ்வாயன்று பல்லேகலேயில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில் பதிரனா பந்துவீசவில்லை.

    மேலும், காயம் அடைந்து விலகிய வீரர்களுக்குப் பதிலாக முகமது ஷிராஸ் மற்றும் எஷான் மலிங்கா சேர்க்கப்பட்டுள்ளனர்.

    அதேநேரத்தில், குசல் ஜனித், பிரமோத் மதுஷன் மற்றும் ஜெப்ரி வான்டர்சே ஆகியோர் அணியில் காத்திருப்பு வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×