search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் மோடி"

    • விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • இதையொட்டி, நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், விநாயக சதுர்த்தியின் புனிதமான தருணத்தில், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் அன்பான வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகிழ்ச்சியான திருவிழா அறிவு, ஞானம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது. சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கும் அதே வேளையில், பணிவு மற்றும் கடமையைத் தழுவுவதற்கு மக்களை ஊக்குவிக்கிறது என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டு மக்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். கணபதி பாப்பா மோரியா என பதிவிட்டுள்ளார்.

    • தேர்தலை முன்னிட்டு முதல் கட்சியாக காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்தது.
    • முதல் நபராக ராகுல் காந்தி பிரசாரம் செய்து காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    ஜம்மு:

    காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு வருகிற 18, 25, அக்டோபர் 1-ந்தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ்-தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி மற்றும் மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    மொத்தம் 90 தொகுதிகள் கொண்ட காஷ்மீரில் ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதாவுக்கும், காங்கிரசு கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.

    தேர்தலை முன்னிட்டு முதல் கட்சியாக காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்தது. அதுபோல நேற்று முன்தினம் முதல் நபராக ராகுல் காந்தி பிரசாரம் செய்து காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். இந்த நிலையில் பாரதிய ஜனதா இன்று பிரசாரம் தொடங்குகிறது.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று காஷ்மீர் செல்கிறார். இன்று பிற்பகல் 4 மணிக்கு அவர் பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார். நாளை அவர் ஜம்மு பிராந்தியத்தில் தீவிர பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார்.

    பிரதமர் மோடி அடுத்த வாரம் காஷ்மீர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காஷ்மீரில் அவர் ஸ்ரீநகர், ஜம்மு உள்பட 3 இடங்களில் பொதுக்கூட்டத்தில் பேசி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவார் என்று தெரிய வந்து உள்ளது.

    காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்த 370-வது சட்டப்பிரிவை நீக்கிய பிறகு பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை அந்த மாநிலத்துக்கு அறிவித்தார். தற்போது அவர் பிரசாரம் செய்வதன் மூலம் பாரதிய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று பா.ஜ.க. தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • புருனே நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார்.
    • இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தென்கிழக்கு ஆசிய நாடான புருனே நாட்டுக்கு சென்றார். இரு நாடுகள் இடையே தூதரக உறவு தொடங்கப்பட்டு 40-வது ஆண்டு கொண்டாடப்படுவதையொட்டி இப்பயணத்தை மேற்கொண்டார்.

    இதன்முலம் புருனே நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார்.

    புருனே மன்னர் ஹாஜி ஹசனல் போல்கியா-பிரதமர் மோடி சந்திப்பு உலகின் மிகப்பெரிய அரண்மனையான இஸ்தானா நூருல் இமான் அரண்மனையில் நடந்தது. பிரதமர் மோடியை மன்னரும், அவரது குடும்பத்தினரும் வரவேற்றனர்.

    இரு தலைவர்களும் பாதுகாப்பு, விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது தொடர்பாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.


    பின் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றடைந்தார். இது, பிரதமராக அவருடைய ஐந்தாவது பயணம். சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் அவரை வரவேற்று, தனிப்பட்ட முறையில் விருந்தும் அளித்தார்.

    இதைத் தொடர்ந்து, இரு தலைவர்களும் நேற்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, திருவள்ளுவர் பெயரில், முதல் சர்வதேச கலாசார மையம் சிங்கப்பூரில் துவக்கப்பட உள்ளது. இதை மிக விரைவில் அமைக்க உள்ளதாக, நம் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இரு நாடுகள் வெற்றி பயணம் நிறைவடைந்த நிலையில் பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்.

    • பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது.
    • பாரா ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 25 பதக்கங்களை வென்றுள்ளது.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி துவங்கிய நிலையில், செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    ஆண்கள் பாரா ஜூடோ விளையாட்டின் 60 கிலோ எடை பிரிவில் பிரேசில் நாட்டின் எலிடன் டி ஒலிவெய்ராவை எதிர்த்து விளையாடிய கபில் பர்மார் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை பெற்றார். இதன் மூலம் இதில் 5 தங்கம், 9 வெள்ளி மற்றும் 11 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.

    ஜூடோவில் இந்திய வீரர் கபில் பர்மார் வெண்கலம் வென்றதை அடுத்து பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்த பதிவில், "பாரிஸ் 2024 பாராலிம்பிக்ஸில் பாரா ஜூடோ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கபில் பர்மருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பல தடைகளைத் தாண்டி, பாராலிம்பிக்ஸில் ஜூடோ போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார். எதிர்காலத்தில் அவர் இன்னும் பெரிய சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்," என திரவுபதி முர்மு குறிப்பிட்டுள்ளார்.

    "மிகவும் மறக்கமுடியாத விளையாட்டு திறன் மற்றும் ஒரு சிறப்பான பதக்கம்!

    பாராலிம்பிக்ஸில் ஜூடோவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் கபில் பார்மருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். பாராலிம்பிக்ஸ்2024ல் ஆடவருக்கான 60கிலோ J1 போட்டியில் வெண்கலம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள்! அவருடைய முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்," என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    • எல்லா ஒப்பந்தங்களும் அதானிக்கும் அம்பானிக்கும் மட்டும் ஏன் கொடுக்கப்படுகிறது?
    • விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டதற்கு பிரதமர் மன்னிப்பு கேட்கவில்லை என்றார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் சாங்க்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    சத்ரபதி சிவாஜி சிலையை உருவாக்கும் ஒப்பந்தம் தகுதி இல்லாத ஆர்.எஸ்.எஸ்.காரருக்கு கொடுக்கப்பட்டதா அல்லது இந்த முறைகேட்டில் நடந்த ஊழலுக்கு என்ன வருத்தம் என பிரதமரிடம் கேட்க விரும்புகிறேன்.

    சிவாஜி சிலை சேதமடைந்த விவகாரத்தில் சிவாஜியிடம் மட்டும் மன்னிப்பு கேட்டதை ஏற்கமுடியாது. மகாராஷ்டிரா மாநில மக்கள் ஒவ்வொருவரிடமும் மோடி மன்னிப்பு கேட்கவேண்டும்.

    எல்லா ஒப்பந்தங்களும் அதானிக்கும் அம்பானிக்கும் மட்டும் ஏன் கொடுக்கப்படுகிறது? ஏன் இரண்டு பேருக்காக மட்டும் ஆட்சி நடத்துகிறார் என மோடி பதில் சொல்ல வேண்டும்.

    போராட்டங்கள் நடத்தியதால் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டதற்கு பிரதமர் மன்னிப்பு கேட்கவில்லை.

    பணமதிப்பு நீக்கம் மற்றும் தவறான சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றுக்கு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்..

    வடகிழக்கு மாநிலத்தை பா.ஜ.க.வே தீயிட்டுக் கொளுத்தியதால் உள்நாட்டுப் போர் போன்ற சூழலை எதிர்கொள்ளும் மணிப்பூருக்கு மோடி செல்லவில்லை.

    சிறு, குறு தொழில்கள் 2 பேரின் நலனுக்காக முடிக்கப்பட்டன. அதானி, அம்பானி குழுக்களால் வேலைவாய்ப்பை உருவாக்க முடியாது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் சித்தாந்தத்தின் அடித்தளமும் டி.என்.ஏ.வும் உள்ளது. இன்றைய அரசியல் என்பது இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான சண்டை.

    நாங்கள் சமூக முன்னேற்றத்தை விரும்புகிறோம். அனைவரையும் அழைத்துச் செல்ல விரும்புகிறோம். அதே நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் வளர்ச்சியை பா.ஜ.க. விரும்புகிறது என தெரிவித்தார்.

    • முதலாவது திருவள்ளுவர் கலாச்சார மையத்தை சிங்கப்பூரில் அமைப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    • தமிழ் மொழி, தமிழர் கலாச்சாரத்தை பாதுகாக்கிற முயற்சியாக எடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    திருக்குறளின் பெருமையை உலகம் முழுவதும் பரப்பும் வகையில், திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார்.

    அதன்படி தற்போது அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம், முதலாவது திருவள்ளுவர் கலாச்சார மையத்தை சிங்கப்பூரில் அமைப்பதாக தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்று அறிவித்த பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது:-

    உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் அனைத்து தமிழர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

    பன்னெடுங்கால பழமை வாய்ந்த தமிழரின் கலாச்சாரம் விண்ணளவு உயரும் என்கிற மகிழ்ச்சியை கெடுத்துள்ளது.

    தமிழ் மொழி, தமிழர் கலாசாரத்தை பாதுகாக்கிற முயற்சியாக எடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    திருவள்ளுவர் கலாச்சார மையம் உலகெங்கும் வாழும் தமிழர்களை மொழி, கலாசாரம், வரலாற்று ரீதியாக இணைக்கிற பாலமாக அமையும்.

    பல்வேறு காலகட்டங்களில் பல தேசங்களுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களை ஒன்றிணைக்கும் மையமாகவும் இந்த கலாச்சார மையம் செயல்படும்.

    பிரதமர் மோடியின் குறிப்பிடத்தக்க சாதனையாக இந்த அறிவிப்பை பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு முறை பயணமாக புரூணே சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுள்ளார்.
    • சிங்கப்பூரில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்தியா-சிங்கப்பூர் இடையிலான நட்புறவை மேம்படுத்துவது, மிகமுக்கிய விவகாரங்களில் கூட்டணியை ஆழப்படுத்துவது மற்றும் முதலீட்டை ஈர்க்கும் நோக்கில் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.

    சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், "சிங்கப்பூரில் தரையிறங்கினேன். இந்தியா-சிங்கப்பூர் நட்புறவை மேம்படுத்துவது தொடர்பாக ஏராளமான சந்திப்புகளை எதிர்நோக்கியுள்ளேன்."

    "இந்தியாவின் சீர்திருத்தங்கள் மற்றும் யுவ சக்தி திறமை நம் நாட்டை சிறந்த முதலீட்டு இடமாக மாற்றுகிறது. இதுதவிர நெருங்கிய கலாச்சார உறவுகளையும் எதிர்பார்க்கிறோம்," என பதிவிட்டுள்ளார்.



    சிங்கப்பூர் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு அங்கு வாழும் இந்திய வளம்சாவளியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியர்கள் வரவேற்பை பார்த்து மகிழ்ச்சி அடைந்த பிரதமர் மோடி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.



    மேலும், அவர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி அவரை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டோல் இசைகருவியை இசைத்து மகிழ்ந்தார். 

    • பிரதமர் மோடியை மன்னரும், அவரது குடும்பத்தினரும் வரவேற்றனர்.
    • பிரதமர் மோடி இன்று புருனே மன்னர் ஹாஜி ஹசனல் போல்கியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பந்தர் செரி பெகவான்:

    பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக தென்கிழக்கு ஆசிய நாடான புருனே நாட்டுக்கு நேற்று சென்றார். இதன்மூலம் புருனே நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார்.

    இரு நாடுகள் இடையே தூதரக உறவு தொடங்கப் பட்டு 40-வது ஆண்டு கொண்டாடப்படுவதையொட்டி இப்பயணத்தை மேற்கொண்டார்.

    தலைநகர் பண்டார் செரி பெகவானில் பிரதமர் மோடியை பட்டத்து இளவரசரும், மூத்த அமைச்சருமான ஹாஜி அல்-முஹ்தாதி பில்லா வரவேற்றார். புருனேவில் உள்ள இந்திய தூதரகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியர்கள், பிரதமர் மோடியை உற்சாகத்துடன் வரவேற்றனர். புருனேயில் உள்ள புகழ்பெற்ற ஒமர் அலி சைபுடியன் மசூதிக்கு மோடி சென்றார்.

    பிரதமர் மோடி இன்று புருனே மன்னர் ஹாஜி ஹசனல் போல்கியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

     

    புருனே மன்னர் ஹாஜி ஹசனல் போல்கியா-பிரதமர் மோடி சந்திப்பு உலகின் மிகப்பெரிய அரண்மனையான இஸ்தானா நூருல் இமான் அரண்மனையில் நடந்தது. மோடியை மன்னரும், அவரது குடும்பத்தினரும் வரவேற்றனர்.

    இரு தலைவர்களும் பாதுகாப்பு, விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது தொடர்பாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    இதில் மோடி பேசும்போது, உங்கள்(மன்னர்) அன்பான வார்த்தைகள், அன்பான வரவேற்பு, விருந்தோம்பல் ஆகியவற்றிற்காக உங்களுக்கும் முழு அரச குடும்பத்திற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 140 கோடி இந்தியர்கள் சார்பாக 40-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உங்களுக்கும் புருனே மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நமக்கு பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார உறவுகள் உள்ளன. நமது நட்பின் அடிப்படையே நமது பண்பாட்டு பாரம்பரியம்தான். உங்கள் தலைமையின் கீழ் நமது உறவுகள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன.

    எனது 3-வது பதவிக் காலத்தின் தொடக்கத்தில் உங்களுடன் எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆண்டு நமது இருதரப்பு கூட்டுறவின் 40-வது ஆண்டு விழாவை கொண்டாடுவது மகிழ்ச்சியான நிகழ்வு.

    இந்தியாவின் கிழக்கு கொள்கை மற்றும் இந்தோ-பசிபிக் விஷன் ஆகியவற்றில் புருனே ஒரு முக்கிய பங்காளியாக இருப்பது எங்களுக்கு பிரகாசமான எதிர்காலத்திற்கான உத்தரவாதமாகும் என்றார்.

    பின்னர் பிரதமர் மோடிக்கு மன்னர் ஹாஜி ஹசனல் போல்கியா மதிய விருந்து அளித்தார். இதில் வித விதமான உணவுகள் பரிமாறப்பட்டது.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, புருனே மன்னர் ஹாஜி ஹசனல் போல்கியாவை சந்தித்ததில் மகிழ்ச்சி. எங்களது பேச்சுவார்த்தை பரந்த அளவில் இருந்தன. நமது நாடுகளுக்கு இடையே இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை உள்ளடக்கியது.

    வர்த்தக உறவுகள், வர்த்தக இணைப்புகள் மற்றும் மக்களிடையே பரிமாற்றம் ஆகியவற்றை மேலும் விரிவுபடுத்தப் போகிறோம் என்று தெரிவித்தார்.

    பிரதமர் மோடியும் புருனே மன்னரும் முதன்முறையாக 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் மியான்மரில் நடந்த 25-வது ஆசியான் உச்சி மாநாட்டிலும், 2017-ம் ஆண்டு மணிலாவில் நடந்த கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டிலும் சந்தித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரதமர் மோடி தனது புருனே பயணத்தை முடித்துக்கொண்டு சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு இந்தியர்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதிக்கிறார்கள். இந்த சந்திப்பின்போது மோடிக்கு லாரன்ஸ் வோங் விருந்து அளிக்கிறார்.

    • இந்தியா இதுவரை 16 பதக்கங்களை வென்றுள்ளது.
    • திறமையும் விடாமுயற்சியும் பாராட்டுக்குரியது.

    பிரான்ஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    பாரீஸ் 2024 பாரா ஒலிம்பிக் 400 மீட்டர் டி20 போட்டியில் தீப்தி ஜீவன்ஜி வெண்கலப் பதக்கம் வென்றார்.

    இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இந்நிலையில், பாரா ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் "பாராலிம்பிக்ஸ் 2024 ல் பெண்கள் 400 மீட்டர் டி20 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு வாழ்த்துகள். அவர் எண்ணற்ற மக்களுக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறார். அவருடைய திறமையும் விடாமுயற்சியும் பாராட்டுக்குரியவை என பதிவிட்டுள்ளார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில் "பாரீஸ் 2024 பாரா ஒலிம்பிக்கில் பெண்கள் 400 மீ - டி20 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு வாழ்த்துகள். பல துன்பங்களை எதிர்கொண்டாலும் அவர் உறுதியையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். அவர் இன்னும் உயர்ந்த சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 15 பதக்கங்களை வென்றுள்ளது.
    • இதில் 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் ஆகியவை அடங்கும்.

    புதுடெல்லி:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்று விளையாடி வருகிறது.

    பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இந்நிலையில், புருனே சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுடன் தொலைபேசியில் இன்று உரையாடினார்.

    இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதக்கம் வென்ற யோகேஷ், சுமித் அண்டில், ஷீதல் தேவி மற்றும் ராகேஷ்ஜ் குமார் ஆகியோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர்களுக்கு தனித்தனியாக வாழ்த்து தெரிவித்தார்.

    ஏற்கனவே பதக்கம் வென்ற மோனா அகர்வால், பிரீத்தி பால், மணீஷ் நர்வால் மற்றும் ரூபினா பிரான்சிஸ் ஆகியோருடன் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி இன்று புருனே பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • சிங்கப்பூர் செல்லும் பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள் தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி புருனே மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு 2 நாட்கள் பயணமாக இன்று புறப்பட்டுச் சென்றார். நரேந்திர மோடிதான் புருனே செல்லும் முதலாவது இந்திய பிரதமர்.

    இந்தியா- புருனே இடையேயான தூதரக உறவுகள் தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் பிரதமர் மோடியின் இந்த பயணம் அமைகிறது. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி இன்று புருனே பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இதேபோல சிங்கப்பூர் செல்லும் பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள் தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்.

    • இனிவரும் முயற்சிகளுக்கு வெற்றிபெற வாழ்த்துகள்.
    • இந்தியா இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம் என 14 பதக்கங்களை வென்றுள்ளது.

    பிரான்ஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் F64 போட்டியில் 70.59 மீ தூரம் என்ற புதிய உலக சாதனையுடன் இந்தியாவின் சுமித் ஆன்டில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

    சுமித்துக்கு பாராலிம்பிக்கில் தொடர்ந்து 2வது தங்கம்.


    இந்தியா இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம் என 14 பதக்கங்களை வென்றுள்ளது.

    இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், பாரா ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப்64 போட்டியில் தங்கம் வென்றத சுமித்துக்கு வாழ்த்துகள்! சிறப்பான நிலைத்தன்மையையும், சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். சுமித்தின் இனிவரும் முயற்சிகளுக்கு வெற்றிபெற வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.


    ×