search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் மனு"

    கோவை கணபதி பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
    கோவை:

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜனதா மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தலைமையில் கோவை கணபதி ஸ்ரீலட்சுமி நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் மற்றும் பெண்கள் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது-

    எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை வர இருப்பதாகவும் அதற்கான கட்டிட பணிகள் விரைந்து நடப்பதாகவும் அறிகிறோம். டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்தின் அருகில் கோவில்களும், பள்ளிகளும் உள்ள காரணத்தால் இப்பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

    கோவை மாவட்ட காதுகேளாதோர் சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் 40, 50, 60 வயது வரை உள்ளவர்களுக்கும், காது கேளாதோருக்கும் முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பு அளிக்கவில்லை. நாங்கள் சுமார் 1000 பேர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என கூறி உள்ளனர். #tamilnews
    சுரண்டை அருகே மதுக்கடையை அகற்றக்கோரி பரங்குன்றாபுரம் பொதுமக்கள் தாசில்தாரிடம் அனு கொடுத்துள்ளனர்.
    சுரண்டை:

    சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரம் பொதுமக்கள் வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்று தாசில்தார் நல்லையாவிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பரங்குன்றாபுரத்திலிருந்து கலிங்கப்பட்டி செல்லும் ரோட்டில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இப்பகுதி, பெண்கள் பீடி கடைக்கு செல்கின்ற பகுதி என்பதால், கடையை உடனடியாக அகற்ற வேண்டி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று கடை மூடப்பட்டது. 

    இந்நிலையில் பரங்குன்றாபுரத்திலிருந்து சுரண்டை வரும் ரோட்டில், மரியதாய்புரம் ரோடு பிரிகின்ற இடத்தில் புதிய டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. நெல்லையிலிருந்து பரங்குன்றாபுரம், மரியதாய்புரம், லட்சுமிபுரம், அச்சம் குன்றம், கருவந்தா, குறிச்சான்பட்டி,  முதலான கிராமங்களுக்கு செல்கின்ற பொதுமக்கள் பரங்குன்றாபுரம் விலக்கில் இறங்கி நடந்து இப்பகுதிக்கு செல்லுகின்றனர். 

    இந்நிலையில் பரங்குன்றாபுரம், மரியதாய்புரம் ரோடு பிரியக்கூடிய இடத்தில் புதிய டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் இது பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறாக இருக்கும். நடந்து செல்லும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகும். எனவே கடையை நிரந்தரமாக அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதில் ம.தி.மு.க. மாவட்ட மகளிரணி செயலாளர் தேனம்மாள், சுதா, ராணி, மகேஸ்வரி, பாப்பா, ரீகன், அமிர்தராஜ், பொன்னுத்துரை, குமாரவேல் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 
    வீசாணம் ஊராட்சியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள வீசாணம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    வீசாணம் ஊராட்சிக்கு உட்பட்ட கடகால்புதூர், ஒட்டக்குளம்புதூர், வீசாணம், மேற்கு தோட்டம், அருந்ததியர் தெரு, பால கருப்பணார் தெரு, வீனஸ்காலனி, சிவாஜி நகர், ஜே.ஜே.நகர், திருவள்ளுவர் காலனி பகுதியில் சுமார் 3,500 பேர் வசித்து வருகிறோம்.

    எங்கள் பகுதிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 10 நாட்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு 10 குடம் குடிநீர் வந்து கொண்டு இருந்தது. தற்போது ஒரு மாதம் ஆகியும் குடிநீர் வரவில்லை. எனவே ஒரு குடம் குடிநீரை ரூ.7 கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.

    குறிப்பாக மேற்கு தோட்டம், ஜே.ஜே.நகர், சிவாஜி நகர், வீனஸ் காலனி, பாலகருப்பணார் தெரு, திருவள்ளுவர் காலனி பகுதிகளுக்கு நீண்ட நாட்களாக குடிநீர் வருவது இல்லை. எனவே வீசாணம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதி மக்களுக்கும் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர். 
    சீரான முறையில் தண்ணீர் வழங்கக் கோரி, வீசாணம் மக்கள், நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு அளித்தனர்.
    நாமக்கல்:

    சீரான முறையில் தண்ணீர் வழங்கக்கோரி, வீசாணம் மக்கள், நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியத்திடம் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல்லை அடுத்த, வீசாணம் ஊராட்சியில், 700 குடியிருப்புகள் உள்ளன. வீசாணம், கடக்கால் புதூர், ஒட்டக் குளம்புதூர், ஆதிதிராவிடர் தெரு, கிழக்குச்சாலை, தேவேந்திர குலதெரு, அருந்ததியர் தெரு, மேற்குத்தோட்டம், பால கருப்பணார் தெரு, வீனஸ் காலனி, சிவாஜி நகர், ஜெ.ஜெ.நகர், திருவள்ளுவர் காலனி உள்ளிட்ட பகுதிகளில், 3,500 பேர் வசிக்கின்றனர்.

    இந்நிலையில் இரண்டு மாதங்க ளுக்கு முன்பு 10 நாட்களுக்கு ஒரு முறை குடும்பத்திற்கு, 10 குடம் தண்ணீர் வந்தது. தற்போது ஒரு மாதமாக தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தண்ணீரை விலைக்கு வாங்கி உபயோகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒருசில பகுதியினர், நகராட்சி நிர்வாகம் மூலம் வழங்கப்படும் குடிநீரை பயன்படுத்துகின்றனர். ஆனால், மேற்கு தோட்டம், பாலகருப்பணார் நகர், ஜெ.ஜெ.,நகர், சிவாஜி நகர், வீனஸ் காலனி, திருவள்ளுவர் காலனி ஆகிய பகுதிகளில் கடந்த, மூன்றாண்டுகளாக தண்ணீர் வருவது இல்லை. தங்குதடையின்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews
    பொதுமக்கள் அளிக்கும் மனு மீது உடனடியாக தீர்வு காண வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அமைச்சர் தங்கமணி உத்தரவிட்டு உள்ளார்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பாலசந்திரன் ஆகியோர் பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம், தற்போதைய நிலை, குடிநீர் வினியோகம்் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டனர்.

    இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம், எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் அமைச்சர் தங்கமணி பேசும்போது கூறியதாவது:-

    தமிழக அரசு குடிநீர் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்்து வருகின்றது. நாமக்கல் மாவட்டத்தில் நீர் ஆதாரங்கள் இருக்கக்கூடிய இடங்களை கண்டறிந்து, அவற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கிட வேண்டும். மேலும் அரசு அலுவலர்கள் இப்பணிக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்திட வேண்டும்.

    ஏற்கனவே பயன்படுத்தி வருகின்ற நீர் ஆதாரங்களை மேலும் செம்மைப்படுத்தி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு அதிக அளவில் நீர் கிடைப்பதற்கான நடவடிக்கைகளையும் அலுவலர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் வழங்கப்படுகின்ற குடிநீர் அனைத்து பொதுமக்களுக்கும் சரியாக சென்று சேரும் வகையில், உரிய நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

    நாமக்கல் மாவட்டத்தில் 4,89,213 குடும்பங்களுக்கு ஸ்மார்ட் ரேஷன்கார்டு வழங்கப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் 76,637 நோயாளிகளுக்கு ரூ.163.90 கோடி மதிப்பீட்டில் இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. 2018 -19-ம் நிதியாண்டில் முதல்-அமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தில் ரூ.11.23 கோடி மதிப்பீட்டில் 535 பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது.

    2017-2018-ம் நிதியாண்டில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.29.19 கோடி மதிப்பீட்டில் 1,717 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. அனைத்து அரசு அலுவலர்களும், பொதுமக்கள் அளிக்கின்ற மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களுக்கு உரிய தீர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

    இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, மாவட்ட வன அலுவலர் டாக்டர் காஞ்சனா, நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    பாளையம் கிராமத்தில் இடிக்கப்பட்ட பாலங்களை சீரமைக்க கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இதில் கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினர். குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் அண்ணா நகரில் வசிக்கும் பொதுமக்கள் கலெக்டர் சாந்தாவிடம் கொடுத்த மனுவில், பாளையம் அண்ணா நகரில் உள்ள 3 தெருக்களில் போக்குவரத்துக்காக 3 பாலங்கள் இருந்தன.

    தற்போது கழிவுநீர் செல்வதற்காக பாலங்களை இடித்து விட்டு கால்வாய் கட்டி விட்டனர். ஆனால் இடிக்கப்பட்ட பாலங்களை சீரமைக்கவில்லை. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்தோ, வாகனத்திலோ செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகிறோம். மேலும் கழிவுநீர் செல்ல வசதியும், காவிரி கூட்டு குடிநீர் வசதியும் செய்து தரப்படவில்லை. இது தொடர்பாக குரும்பலூர் பேரூராட்சியின் செயல் அலுவலரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே பாளையம் அண்ணா நகரில் இடிக்கப்பட்ட பாலங்களை சீரமைக்கவும், காவிரி குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    பெரம்பலூர் ராணி மங்கம்மாள் அறக்கட்டளை தலைவர் புவனேந்திரன் மற்றும் அதன் நிர்வாகிகள் பெரம்பலூர் மாவட்ட மக்கள் சார்பாக கொடுத்த மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க மோகனூர் அல்லது ஈரோட்டில் இருந்து காவிரி நீரை நாமக்கல், தா.பேட்டை, துறையூர் வழியாக பெரம்பலூர் லாடபுரம் ஏரிக்கு கொண்டு வந்தால் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். மேலும் இந்த காவிரி நீரை மருதையாற்றுடன் இணைத்தால் கொட்டரை, ஆதனூர் அணை வரை தண்ணீர் செல்லும். இதனால் பெரம்பலூர் நகர மக்களின் குடிநீர் பிரச்சினையும் முழுமையாக தீர்ந்து விடும் என்று கூறப்பட்டிருந்தது.

    குன்னம் தாலுகா ஒதியம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ஒதியம் கிராமத்தில் உள்ள கத்துக்குளத்திற்கு கிராம மக்கள் செலவில் புதிதாக வெட்டிய வரத்து வாய்க்காலை ஒதியம் மெயின் ரோட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரமுள்ள வரைபட கணக்கில் அளந்து கணக்கில் சேர்க்க வேண்டும். பழைய வரத்து வாய்க்காலை சில பேர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்பினை அகற்றி பழைய வரத்து வாய்க்காலை கிராம மக்கள் சார்பில் தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    பாடாலூர் அ.தி.மு.க.வினர் சார்பில் கொடுத்த மனுவில், பாடாலூர் மற்றும் இரூர் ஊராட்சி பகுதிகளில் பெரம்பலூர் மாவட்ட ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2013-ம் ஆண்டு அறிவித்திருந்தார். அதற்கான ஆயத்த பணிகள் அப்போது தொடங்கப்பட்டது. ஜவுளி பூங்கா அமையவுள்ள நிலத்தை சிப்காட் நிறுவனம் வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் பஞ்சாயத்து மூலம் ஜவுளி பூங்கா இடத்திற்கு செல்லும் அணுகுசாலையும் மேம்படுத்தும் பணி தொடங்கப்பட்டது.

    தற்போது அந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஜவுளி பூங்காவில் தொழில் தொடங்க தொழில் முனைவோர்கள் முன்வந்துள்ளனர். இதன் மூலம் 5 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். எனவே மாவட்ட ஜவுளி பூங்காவை விரைந்து அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் சாந்தா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
    தஞ்சையின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக 100 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இடத்தை காலி செய்ய முடியாது என கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் குறித்த மனுக்களை வழங்கினர். அதனை பெற்று கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    பூதலூர் தாலுகா பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    பூதலூரில் பஞ்சாயத்து அலுவலகத்தில் கிளர்க்காக பணியாற்றி வரும் மகேந்திரன் தனது மனைவி வளர்மதி பெயரில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களை தனது வீட்டு வேலை செய்ய அனுப்புகிறார்.

    மேலும் கிராம பஞ்சாயத்து பகுதியில் கழிவறை கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்து வருகிறார். பஞ்சாயத்தில் குடிநீர் வசதி செய்ய வழங்கப்படும் குழாய்களை தனது சொந்த தேவைக்கு பயன்படுத்தி வருகிறார். ஏழை எளிய மக்களுக்கு பசுமை வீடு கட்ட நிதி ஒதுக்கீடு செய்யாமல் தனது உறவினர்கள் 2 பேருக்கு பசுமை வீடு கட்ட அனுமதி வழங்கியுள்ளார்.

    இதன் மூலம் அவர் ரூ.5 லட்சம் வரை முறைகேடு செய்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தஞ்சை நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடைபெற இருப்பதால் தஞ்சை மேல அலங்கம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேறி பிள்ளையார் பட்டியில் கட்டுபட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று விடும்படி மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இதனால் பாதிக்கப்படும் அப்பகுதி மக்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    மேல அலங்கம், வட அலங்கம் பகுதியில் சுமார் 4 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். 100 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் எங்களை ஸ்மார்ட் சிட்டி திட்ட விரிவாக்க பணி நடைபெறுவதால் இடத்தை காலி செய்து விட்டு பிள்ளையார் பட்டியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று விடும் படி மாநகராட்சி அலுவலர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

    எங்களது குழந்தைகள் இப்பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். இப்பகுதியில் பலர் வேலை பார்த்து வருகின்றனர். நாங்கள் இங்கிருந்து இடமாறி சென்றால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

    எனவே இந்த இடத்தில் தொடர்ந்து வசிக்க அனுமதிக்க வேண்டும். இடத்தை காலி செய்ய வேண்டும் என்ற உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    வந்தவாசியில் குரங்கு மற்றும் நாய்கள் தொல்லைகள் அதிகமாக இருப்பதால் தொல்லையிலிருந்து விடுவித்து உதவிடுமாறு நகராட்சியில் பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

    வந்தவாசி:

    வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் 3 வது வார்டு 5 வது குறுக்கு தெரு பொதுமக்கள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட 3-வது வார்டு 5வது குறுக்கு தெருவில் நிரந்தரமாக வசித்துவருகிறோம். எங்களுக்கு குடும்ப அட்டையும், வாக்காளர் அட்டையும் உள்ளது. கடந்த 6 மாத காலமாக குரங்குகள் மற்றும் நாய்கள் தொல்லைகள் அதிகமாக உள்ளது.

    இதனை நேரிடையாக பார்வையிட்டு எங்களுக்கு குரங்குகள், மற்றும் நாய்கள் தொல்லையிலிருந்து விடுவித்து உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    வாட்ஸ்-அப்பில் தவறாக தகவல்களை பதிவு செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

    கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகி நடராஜன் கொடுத்த மனுவில், குன்றாண்டார்கோவில் ஒன்றியம் கிள்ளுக்கோட்டையில் டாஸ்மாக் கடை வேண்டாம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பை மீறியும் தொடர்ந்து டாஸ்மாக் கடை நடந்து வருகிறது. இதனை எதிர்த்து போராட்டங்கள் நடந்தபோது அதிகாரிகள் வந்து பேச்சுவார்தை நடத்தி, விரைவில் மாற்று இடம் தேர்வு செய்த பிறகு டாஸ்மாக் கடையை அகற்றி விடுகிறோம் என உறுதி அளித்தனர். ஆனால் இதுவரைக்கும் டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்து, டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கூறியிருந்தனர்.

    இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டியில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீரில் குப்பைகள், தூசிகள் போன்றவை கலந்து வருகின்றன. இந்த தண்ணீரை குடிப்பவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் என பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே இது குறித்து கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சுத்தமான குடிநீரை வினியோகம் செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    நச்சாந்துப்டடி அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தை சேர்ந்த சிலரை அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் புகைப்படம் எடுத்து, அந்த புகைப்படத்துடன், இவர்கள் குழந்தைகளை கடத்துபவர்கள் என்றும், இவர்கள் கொள்ளைகளில் ஈடுபடுபவர்கள் என்றும், வாட்ஸ்-அப்பில் பதிவு செய்து உள்ளார். மேலும் இது தொடர்பான ஒரு ஆடியோவையும் பதிவு செய்து உள்ளார். இதனால் மனமுடைந்த ஒருவர் விஷம் குடித்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உள்ளார். எனவே இது குறித்து கலெக்டர் விசாரணை நடத்தி எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள் மீது தவறான தகவல்களை வாட்ஸ்-அப்பில் பதிவு செய்த அரசு பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    கூட்டத்தில் இந்து முன்ணியை சேர்ந்த நிர்வாகிகள் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை இந்துசமய அற நிலையத்துறைக்கு சொந்தமான திலகர் திடலில் அமைக்கப்பட்டு வரும் கட்டிடத்தை அகற்ற வேண்டும். இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் புகார் அளித்தும், இதுவரை எந்தஒரு நட வடிக்கை எடுக்கவில்லை. எனவே கோவில் நிலத்தை தனியாரால் செய்யப்படும் ஆக்கிரமிப்புகளை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். 
    பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு கிராமத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக அளித்தனர்.

    பண்ருட்டி அருகே உள்ள மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் மேல்மாம்பட்டு கிராமத்தில் கடந்த 9 மாதங்களாக கடுமையான குடிநீர் பிரச்சனை நிலவி வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் செய்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே குடிநீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
    கடலூரை அடுத்த எம்.புதூர் கிழக்குத் தெருவை சேர்ந்த பொதுமக்கள் காலிகுடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். கலெக்டர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    கடலூரை அடுத்த எம்.புதூர் கிழக்குத் தெருவை சேர்ந்த பொதுமக்கள் காலிகுடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். கலெக்டர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் கலெக்டர் தண்டபாணியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடலூரை அடுத்த எம்.புதூர் கிழக்குத் தெருவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இங்கு கடந்த 3 மாதமாக மின்மோட்டார் பழுதடைந்து உள்ளது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்ற முடியாமல் இருந்து வருகிறது. இதனால் எங்கள் பகுதிக்கு கடந்த 3 மாதமாக குடிநீர் இல்லாமல் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகிறோம். இதன் காரணமாக எங்கள் பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் 2 கிலோமீட்டர் நடந்து சென்று விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் பிடித்து வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் எங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இதே போல பண்ருட்டி அடுத்த புதுப்பாளையம் சேர்ந்த பொதுமக்கள் காலிகுடத்துடன் கடலூர் கலெக்டர் தண்டபாணியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில் கூறியிருப்பதாவது:-

    பண்ருட்டி அடுத்த புதுப்பாளையம் பகுதியில் கடந்த 4 மாதமாக குடிநீர் குழாய் உடைந்து எங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் எங்கள் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 3 கிலோமீட்டர் நடந்து சென்று தண்ணீர் பிடித்து வருகிறோம்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் குடிநீர் பிரச்சினையை தீர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. #tamilnews
    மக்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்கவேண்டும் என அதிமுக நிர்வாகி தலைமையில் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். #Sterlite #ThoothukudiProtest
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22‍-ந்தேதி பொது மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் கலவரம் வெடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள்.

    இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்ப‌ட்டது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி மனு அளித்து வருகிறார்கள். இதனிடையே தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரம், குமரெட்டியாபுரம், டி.குமாரகிரி மக்கள் சார்பாக முன்னாள் அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் பொன்ராஜ் தலைமையில் ஏராளமானோர் சென்னை தலைமை செயலகத்துக்கு வந்தனர்.



    முதலமைச்சரின் தனிப்பிரிவில் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    எங்கள் பகுதியில் கடந்த 22 ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை சில சமூக விரோதிகளின் பொய் பிரசாரத்தால் மக்களின் எண்ணத்தை பாதிக்கும் வகையில் எங்கள் கிராம மக்களின் கருத்துக்கு மாறாக மூடப்ப‌ட்டுள்ளது. இந்த தொழிற்சாலை மூடப்பட்டதால் எங்கள் பகுதியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைகளை இழந்து அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்ப‌ட்டு உள்ளது.

    நாங்கள் விவசாயம் செய்யும் சூழ்நிலையும், வசதியும் இல்லாததால் உணவுக்கே வழியின்றி தவிக்கிறோம். இந்த தொழிற்சாலையை திறக்க அனுமதிப்பதன் மூலம் எங்களது உணவு தேவையும், அடிப்படை தேவையும் நிறைவேறும். எனவே எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க இந்த தொழிற்சாலையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #Sterlite #ThoothukudiProtest
    ×