என் மலர்
நீங்கள் தேடியது "BHUMI PUJA"
- மீனவ கிராமத்தில் சுமார் 164 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- அனுகு சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை.
சீர்காழி:
சீர்காழி அருகே புது குப்பம் மீனவ கிராமத்தில் சுமார் 164 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் பருவநிலை மாறுபாடு மற்றும் அவ்வப்போது ஏற்படும் கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. கடல் அரிப்பை தடுக்க கருங்கல் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி ரூ.9 கோடி மதிப்பீட்டில் மீன்வளத் துறை சார்பில் கடற்கரை ஓரங்களில் தடுப்பு சுவர் மற்றும் மீன் உலர் தளம் ரூ.9 கோடி மதிப்பீட்டில் கருங்கற்கல் கொட்டும் பணி, வலை பின்னும் கூடம், அனுகு சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழா புதுகுப்பம் மீனவர் கிராமத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை வகித்தார்.
நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.
இதில் காவிரி பூம்பட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் முத்து.மகேந்திரன், நிர்வாகிகள் ஜி.என்.ரவி, பழனிவேல், மீன்வளத் துறை செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, மீன்வளத்துறை உதவி செயற் பொறியாளர் ரபீந்திரநாத், உதவி பொறியாளர் சேனாதிபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ரூ.25 லட்சம் மதிப்பில் சமுதாய கூடத்திற்கான பூமிபூஜை நடந்தது.
- அதற்கு அவர் வெற்றி பெற்றதும் கண்டிப்பாக இந்தப் பகுதியில் சமுதாயக்கூடம் ஏற்படுத்தி தருவேன் என்று வாக்குறுதி அளித்தார்.
கீழக்கரை
கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட முத்துச்சாமிபுரத் தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஏழை, எளிய மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சமுதாயக்கூடம் இல்லாத நிலையில் பெரும் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் வாக்கு சேகரிக்க சென்ற தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்திடம் இந்தப்பகுதி மக்கள் சமுதாயக் கூடம் கட்டித் தருமாறு கோரிக்கை விடுத்த னர்.அதற்கு அவர் வெற்றி பெற்றதும் கண்டிப்பாக இந்தப் பகுதியில் சமுதாயக்கூடம் ஏற்படுத்தி தருவேன் என்று வாக்குறுதி அளித்தார்.
அதன்படி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டுவ தற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ராமநாத புரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில், நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா, துணைத் தலைவர் ஹமீது சுல்த்தான், நகராட்சி கமிஷனர் செல்வராஜ் முன்னிலையில் பூமி பூஜை நடந்தது.
இதில் கீழக்கரை நகர் தி.மு.க. செயலாளர் பஷீர் அஹமது, மாணவர் அணி நகர் அமைப்பாளர் இப்திகார் ஹசன், நகராட்சி பொறியாளர் அருள், மேற்பார்வையாளர் சாம்ப சிவம், நகர் மன்ற கவுன் சிலர்கள் முகமது ஹாஜா சுகைபு, நசுருதீன், மீரான் அலி, பயாஸ், காயத்ரி உள்பட கவுன்சிலர்கள், முக்கிய பிரமுகர்கள், வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- 800மீட்டர் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்தல் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது .
- வார்டு கவுன்சிலர்கள் ,பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மங்கலம் :
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி வார்டு எண்-15 முத்தீஸ்வரன் நகர் மேல்நிலைத்தொட்டி முதல் பெருமாள் கோவில் வீதி வரை 100 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் சுமார் 800மீட்டர் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்தல் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது .
இந்த பூமி பூஜை நிகழ்ச்சியானது சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.இதில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டி வரதராஜன்,வார்டு கவுன்சிலர்கள் ,பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராஜபாளையம் அருகே நடந்த அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட பூமிபூஜையில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
- கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி சேத்தூர் பேரூராட்சியில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சேத்தூர் பேரூராட்சி, வார்டு 15 முகவூர் ரோடு தேவேந்திரகுல வேளாளர் பெரிய தெருவில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அங்கன்வாடி மையம் அமைக்க தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.
அதன்பின்னர் ராஜபா ளையம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் வார்டு 15 முகவூர் ரோடு தேவேந்திரகுல வேளாளர் பெரிய தெருவில், வார்டு 4 போலீஸ் ஸ்டேஷன் தெரு மற்றும் வார்டு 12 அய்யனார் கோவில் தெரு ஆகிய 3 பகுதியிலும் தாமிர பரணி குடிநீருக்கென தனியாக நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
இந்நிகழ்ச்சியில் பேரூ ராட்சி தலைவர் பாலசுப்பிர மணியன், துணை தலைவர் காளீஸ்வரி மாரிச்செல்வம், ஒன்றியதுணை செயலாளர் குமார், பேருராட்சி செயல் அலுவலர் வெங்கட் கோபு மற்றும் கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ரூ.5.28 கோடியில் கட்டப்படுகிறது
செய்யாறு:
செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் அறிவியல் படிக்கும் மாணவ மாணவிகளுக்காக புதிய ஆய்வகங்கள் கட்டிடம் ரூ. 5.28 கோடி மதிப்பில் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கலைவாணி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஞானவேல், ராம் ரவி, கல்லூரி பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் திமுக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டுவதற்கான பூமி பூஜை விழா ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் பூமிநாதன் தலைமையில் நடந்தது.
- சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன் கட்டுமான பணியை துவக்கி வைத்தார்.
சுவாமிமலை:
திருவிசநல்லூர் ஊராட்சி மன்றத்தின் சார்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டுவதற்கான பூமி பூஜை விழா ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் பூமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
விழாவிற்கு திருவிடைமருதூர் ஒன்றிய குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஜி.கே.எம் ராஜாஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன் கலந்து கொண்டு ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணியை துவக்கி வைத்தார் .
இதில் திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன் ,வீரமணி, கிராம நிர்வாக அலுவலர்கள்சுரேஷ் பாபு, ரேவதி, பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
- ரூ.7.30 கோடியில் கட்டப்படுகிறது
- பூமி பூஜை நடந்தது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே புதிய ஆரம்ப சுகாதார நிலையம் ரூ.7கோடி 30லட்சம் செலவில் கட்டும் பணியை பூமி பூஜை போட்டு தொடங்கப்பட்டது. ஜோலார்பேட்டை ஒன்றியம், ஓட்டப்பட்டி ஊராட்சியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் அவசர மருத்துவ தேவைகள் மற்றும் சிகிச்சைக்கு அரு காமையில் உள்ள புதுப் பேட்டைக்கு சென்றுவரும் நிலை இருந்து வருகிறது. அதே பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்
இதனை ஓட்டி தமிழக அரசு புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட ரூ.7 கோடி 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை ஒட்டப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் காந்தி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன் சிலர் கவிதா தண்டபாணி, ஒன்றிய குழு துணை தலைவர் ஸ்ரீதேவி காந்தி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவர் புகழேந்தி, வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ரூ.30.20 லட்சத்தில் அமைகிறது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் ஒன்றியம் தணிகை போளூர் ஊராட்சி அல்லியப்பன்தாங்கல் கிராமத்தில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாடு மற்றும் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.30.20 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கட்ட கட்டிடத்திற்கான பூமி பூஜை ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ஜீவா கிருஷ்ணன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தனபால், தீனு பரந்தாமன், இளவரசன், ஆசிரியர் கீதாஞ்சலி, ஒப்பந்ததாரர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முடிவில் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
செய்யாறு அருகே உள்ள அருகாவூர் கிராமத்தில் புதியதாக திரவுபதி அம்மன் கோவில் ரூ.2 கோடியில் கட்ட பூமி பூஜை விழா நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள் சங்கர், மூர்த்தி ஆகியோர் வரவேற்றனர்.
ஒ.ஜோதி எம்எல்ஏ கலந்துகொண்டு கட்டிடம் கட்ட பூமி பூஜையை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
- முனிரத்தினம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சோளிங்கர்:
சோளிங்கர் அடுத்த கல்பட்டு அரசு தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஊராட்சிக் குழு நிதி யில் இருந்து ரூ.33 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.
ஊராட்சி மன்ற தலைவர் அந்தோணி தலைமை தாங்கினார். சோளிங்கர் தொகுதி ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வகுப்பறை கட்டுமான பணியை பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
ஒன்றியக் குழு தலைவர் கலைக்குமார், ஒன்றிய கவுன்சிலர் சுகந்தி முருகேசன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், சோளிங்கர் மத்திய ஒன்றிய செயலாளர் பூர்ண சந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கழிவுநீர் கால்வாய் மற்றும் நடைபாதை இன்டர்லாக் கற்கள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
- பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, நாராயணன், பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
குன்னூர் நகராட்சி 12-வது வார்டில் ரூ.70 லட்சம் மதிப்பில் தடுப்பு சுவர், கழிவுநீர் கால்வாய் மற்றும் நடைபாதை இன்டர்லாக் கற்கள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. இதனை முன்னாள் நகர மன்ற தலைவரும், நகர செயலாளருமான ராமசாமி, நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர்கள் மணிகண்டன், குமரேசன், ராஜேந்திரன், நகர இளைஞரணி அமைப்பாளர் பத்மநாபன், நகர துணை செயலாளர் முருகேசன், கிளை செயலாளர் சிக்கந்தர், சண்முகம், நந்தகுமார் அப்துல் காதர், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, நாராயணன், பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருப்புகலூர் மேலப்பகுதி முதல் அரசூர் வரை உள்ள இணைப்பு சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
- திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் திருப்புகலூர் மேலப்பகுதி முதல் கீழஆமப்பட்டம், வவ்வாலடி, அரசூர் வரை உள்ள இணைப்பு சாலை ரூ.4 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன் முன்னிலை வகித்து சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுஜாதா ஆசைத்தம்பி, பேபிசரளா பக்கிரிசாமி, ஒன்றிய பொறியாளர் செந்தில், ஊராட்சி செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.