search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Harvest"

    • மழையையும் கடும் வெயிலையும் தாக்குப்பிடித்து வளர்ந்து குறுவை பயிர் 80 சதவீதம் அறுவடை பணிகள் முடிவடைந்து.
    • பகலில் ஓரளவு வெயில் அடித்து காய வைக்கப்பட்ட நெல் குவியல்கள் இரவு நேரங்களில் கொட்டி தீர்க்கும் மழை.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 1.81 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவ்வப்போது பெய்த மழையையும் கடும் வெயிலையும் தாக்குப்பிடித்து வளர்ந்து வந்த குறுவை பயிர் 80 சதவீதம் அளவிற்கு அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளதாக வேளாண் துறை தெரிவிக்கிறது.

    மனையில் நனைந்தன

    குறுவைப் பருவத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து கொள்முதல் பணிகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் தொடங்கியது.

    முன்கூட்டியே கொள்முதல் பணிகள் தொடங்கப்பட்டதால் விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல்லை எளிதாகவும், விரைவாகவும் நேரடி கொள் முதல் நிலையங்களில் விற்பனை செய்து விடலாம் என்று எண்ணினார்கள்.

    இதற்கு மாறாக குறுவை நெருப்பயிரில் ஈரப்பதம் அளவு 17.5 சதவீதம் இருக்க வேண்டும் என்று நிர்ணயித்ததால், விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கிடைக்கும் இடத்தில் எல்லாம் காய வைத்து கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர்.

    காய வைக்க போராட்டம்

    ஆழ்குழாய் கிணற்று தண்ணீரை பயன்படுத்தி முன்கூட்டியே நடவு செய்த விவசாயிகள் ஓரளவு பாதிக்காத அளவிற்கு தங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து விட்டனர்.

    வாய்க்கால்களில்தண்ணீர் வந்து அந்த தண்ணீரைக் கொண்டு நாற்றுப் பாவி அதன் பின்னர் நடவு செய்த விவசாயிகள் தற்போது தீவிரமாக அறுவடை செய்து கொண்டுள்ளனர்.

    அறுவடை செய்யும் சமயங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கீழ் அடுக்கு சுழற்சியினால் தினந்தோறும் பெய்யும் மழையால் விளைந்த நெல்லை காய வைக்க முடியாமலும், விற்பனை செய்ய முடியாமலும் சுழன்று கொண்டுள்ளனர்.

    பண்டிகை கேள்விக்குறி

    பூதலூர் தாலுகா பகுதியில் அறுவடை செய்யப்பட்டுள்ள குறுவை நெற்மணிகள் பூதலூர் -செங்கிப்பட்டி சாலையிலும் பூதலூர்- தஞ்சை சாலையிலும் கொட்டி வைக்கப்பட்டு தினந்தோறும் காய வைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பகலில் ஓரளவு வெயில் அடித்து காய வைக்கப்பட்ட நெல் குவியல்கள் இரவு நேரங்களில் கொட்டி தீர்க்கும் மழையால் ஈரப்பதம் அதிகமாகி மீண்டும் காய வைக்கவேண்டிய சூழ்நிலையால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    குறுவை அறுவடை செய்து அந்த நெல்லை விற்றுதீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடலாம் என்று எண்ணியிருந்த விவசாயிகள் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 48 மணி நேரமே இருக்கும் நிலையில் 25 கிலோ மீட்டர் தொலைவுசாலை முழுவதும் நெல்லை காய வைக்கும் நிலை தொடர்ந்து கொண்டுள்ளது.

    ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் தினந்தோறும் 800 முதல் 1000 சிப்பங்கள் வரை கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

    கோரிக்கை

    இரவு நேரங்களில் கொள்முதல் செய்வது நிறுத்தப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    காலச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தொழிலாளர்கள் வேலை செய்ய விரும்பும் இடங்களில் சுழற்சி முறையில் எடையாளர்களையும் சுமை தூக்குப வர்களையும்பணியில் அமர்த்தி இருக்கின்ற 48 மணி நேரத்தில் அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்து, விவசாயிகளை தீபாவளி பண்டிகையை கொண்டாட ஆவன செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    • முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • இரண்டு நாட்களாக மழை இன்று வெயில் அடிப்பதால் ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட ஈரமான நெல்மணிகள் சாலையில் கொட்டி காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    இந்த ஆண்டு டெல்டா மாவட்ட சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-க்கு முன்பாக மே மாதம் 24 ஆம் தேதியே திறக்கப்பட்டது.

    வழக்கமாக குறுவை சாகுபடி டெல்டா மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கரில் செய்யப்படுவது வழக்கம் இந்த ஆண்டு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    தஞ்சை மாவட்டத்தில் வழக்கமாக ஒரு லட்சத்து 11 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 67 ஆயிரம் ஏக்கர் குருவை சாகுபடி செய்யப்பட்டது.

    இந்த ஆண்டு ஒரு லட்சத்து 82 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்யப்பட்டது. தற்போது வரை 1 லட்சம் ஏக்கரில் அறுவடை முடிவடைந்துள்ளது.

    மீதி அறுவடை பணிகள் நடந்து வருகிறது. ஆனால் கடந்த நான்கு நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அறுவடை பணி பாதிக்கப்பட்டது.

    தற்போது இரண்டு நாட்களாக மழை இன்று வெயில் அடிப்பதால் ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட ஈரமான நெல்மணிகள் சாலையில் கொட்டி காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம் என்ற நிலை இருப்பதால் தார்ப்பாயுடன் உள்ளனர். கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

    இதனால் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். தேவையான அளவு உலர் கலம் எந்திரம் இல்லாத காரணத்தால் ஈரப்பதமான நெல்லை காய வைத்து வருகின்றனர்.

    தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் இந்த பணி மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் ஈரப்பத அளவை தளர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதற்கிடையே தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு சம்பா, தாளடி சாகுபடி 3 லட்சத்து 33 ஆயிரத்து 450 ஏக்கர் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது வரை சம்பா சாகுபடி 81 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    • முதல் போக சாகுபடிக்கு திறக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி நெல் பயிர்களை நடவு செய்தனர்.
    • தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகி நெல் மணிகளாக விளைந்துள்ள நேரத்தில் மழை ஏதும் பெய்தால் மிகுந்த அளவில் பாதிப்பு ஏற்படும் என்ற கலக்கத்தில் விவசாயிகள் உள்ளனர்.

    நிலக்கோட்டை:

    வைகை அணையில் இருந்து பெரியாறு பிரதான கால்வாயில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்போக பாசனத்துக்கு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் அணைப்பட்டி, விளாம்பட்டி, சிவஞானபுரம், மட்டப்பாறை, ராமராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் முதல் போக சாகுபடிக்கு திறக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி நெல் பயிர்களை நடவு செய்தனர்.

    அவ்வாறு நடவு செய்த நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் நல்ல மகசூல் தரும் வகையில் விளைந்து நிற்கிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு கூட எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் வெயில் காலமாக இருந்தது.

    திடீரென தற்போது சாரல் மழை பெய்து வருவதால் நெற்பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர். எது எப்படி இருப்பினும் தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகி நெல் மணிகளாக விளைந்துள்ள நேரத்தில் மழை ஏதும் பெய்தால் மிகுந்த அளவில் பாதிப்பு ஏற்படும் என்ற கலக்கத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் சில நாட்கள் மட்டும் மழை பெய்யாமல் இருந்தால் நெல்மணிகளை அறுவடை செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

    • குறுவை சாகுபடி அறுவடை செய்து விற்பனைக்காக கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு வந்தனர்.
    • ஈரப்பதம் 17 சதவீதம் இருந்தால் மட்டுமே கொள்முதல் செய்ய முடியும்.

    திருவையாறு:

    திருவையாறு அருகே கீழதிருப்பந்துருத்தியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கீழ திருப்பந்துருத்தி, மேல திருப்பந்துருத்தி, சங்கராகுளம், கண்டியூர், காட்டுகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 150- க்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடி அறுவடை செய்து விற்பனைக்காக நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கொண்டு வந்தனர்

    ஆனால் நேரடி நெல் கொள்முதல்நிலையத்தில் ஈரப்பதம் 17 சதவீதம் இருந்தால் மட்டுமே கொள்முதல் செய்ய முடியும் என்று பட்டியல் எழுத்தர் மற்றும் பணியாளர்கள் தெரிவித்ததால் விவசாயிகள் அதிர்ந்து போயினர்.

    நெல்மூட்டைகளை உடனடியாக நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள் முதல் செய்யவில்லை என்றால் நெல் மூட்டைகளை நெடுஞ்சாலையில் கொட்டி போராட்டம் நடத்தப் போவதாகவும் விவசாயிகள் கூறினர்.

    • பொது ரகத்துக்கு ரூ.2015 என உயர்த்தி கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
    • இதுவரை 2 லட்சத்து 52 ஆயிரத்து 636 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் செயல்பட்டு வரும் திறந்தவெளி நெல் கொள்முதல் சேமிப்பு கிடங்கினை இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார் ‌.

    அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    தமிழக முதல்-அமைச்சரின் ஆணைப்படி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற நெல்லை கொள்முதல் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக ஆண்டு தோறும் அக்டோபர் 1ஆம் தேதி தான் குறுவை நெல் கொள்முதல் செய்யப்படும்.

    ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே மே மாத இறுதியில் திறக்கப்பட்டது.

    இந்த காரணத்தினால் குறுவை அறுவடை முன்கூட்டியே வரும் என்று உணர்ந்த முதலமைச்சர் மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று செப்டம்பர் 1ஆம் தேதி முதல் குறைந்தபட்ச ஆதார விலை சன்ன ரகத்துக்கு ரூ.2160, பொது ரகத்துக்கு ரூ.2015 என உயர்த்தி கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    திறந்தவெளியில் இருக்கிற நெல் நனையாமல் இருப்பதற்காக 3 லட்சம் மெட்ரிக் டன் செமி குடோன் கட்டுவதற்காக ரூ. 238 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 20 இடங்களில் பணி ஆரம்பிக்கப்பட்டு மும்முரமாக நடந்து வருகிறது.

    தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் 50 ஆயிரம் மெட்ரிக்டன் கொள்ளளவு கொண்ட செமி குடோன் கட்டும் பணி நடந்து வருகிறது.

    இந்த பணி அடுத்த மாதம் 31-ம் தேதிக்குள் முடிவடையும் தருவாயில் உள்ளது.

    2022-23 நெல் கொள்முதல் பருவங்களில் இதுவரை 2 லட்சத்து 52 ஆயிரத்து 636 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    சுமார் 29 ஆயிரத்து 859 விவசாயிகளுக்கு ரூ.417 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்சமயம் 819 கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

    508 பட்டியல் எழுத்தர், உதவுபவர், காவலர்களை இந்த ஆண்டு பணியமர்த்த இருக்கிறோம்.

    இது தவிர தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 5008 பட்டியல் எழுத்தர், உதவுபவர், காவலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட உள்ளன.

    ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலைய ங்களிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செப்டம்பர் முதல் வாரத்திலேயே மருதங்குடியில் உள்ள அரசு கொள்முதல் நிலையம் திறக்கப்படுவது வழக்கம்.
    • அறுவடை செய்த நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் கொள்முதல் நிலைய வளாகத்தில் காத்துள்ளனர்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த மருதங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் குறுவை சாகுபடி அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் முதல் வாரத்திலேயே மருதங்குடியில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இதனால் அறுவடை செய்த நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் கொள்முதல் நிலைய வளாகத்தில் காத்துள்ளனர்.

    அவ்வப்போது மழை பெய்து வருவதால் நெல் மூட்டைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மருதங்குடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை விரைந்து திறக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • எந்திரங்களை கொண்டு அறுவடை செய்யமுடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
    • விவசாயிகள் மின்கம்பிகளை கடந்து செல்ல கீழே தவழ்ந்தபடி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி மேலக்கரையிருப்பு பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    சுமார் 20 ஏக்கர் அளவிற்கு அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள 30 ஏக்கர் விளை நிலங்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

    இந்த நிலையில்திரும ருகல் துணை மின் நிலைய த்திலிருந்து வயல்வெளி வழியாக கட்டலாடி, கீழப்பூதனூர் பகுதிகளுக்கு செல்லும் உயர் அழுத்த மின்கம்பங்கள் சேதமடைந்து மின்கம்பிகள் நெற்பயிர்களை உரசி செல்கிறது.

    இதனால் அறுவடை எந்திரங்களை கொண்டு அறுவடை செய்யமுடியாத நிலையில் விவசாயிகள் உள்ள னர்.

    மேலும் விவசாயிகள் மின் கம்பிகளை கடந்து செல்ல கீழே தவழ்ந்த படி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இது குறித்து சம்பந்த ப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பிகளை சீரமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சந்தைகளில் 14 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி 100 ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • 1 ஏக்கர் தக்காளி சாகுபடி செய்ய ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது.

    பல்லடம் :

    பல்லடம் மற்றும் பொங்கலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சின்ன வெங்காயத்திற்கு அடுத்தபடியாக தக்காளி விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கடந்த சீசனில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி தற்போது அறுவடைக்கு வந்துள்ள நிலையில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காமல் விலை சரிந்து வந்தது. சந்தைகளில் 14 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி 100 ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    சாகுபடி செலவு செய்த பணத்தை எடுக்க முடியாமலும், பறிப்புக்கூலிக்கும் வண்டி வாடகைக்கு ம்கூட கட்டுப்படியாகாத விலை கிடைத்து வருவதால், தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் அவற்றை அறுவடை செய்யாமல் செடிகளிலேயே விட்டு விடுகின்றனர். இதனால் அவை செடியிலேயே பழுத்து வீணாகி வருகிறது. இதுகுறித்து தக்காளி விவசாயிகள் கூறியதாவது: -1 ஏக்கர் தக்காளி சாகுபடி செய்ய ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. ஏக்கருக்கு 300 கிலோ மகசூல் கிடைக்கும். 1 கிலோ தக்காளி ரூ.40க்கு விற்றால் தான் விவசாயிக்கு விலை கட்டுபடியாகும். ஆனால் தற்போது தற்போது 1 கிலோ தக்காளி விவசாயிகளிடம் இருந்து ரூ.7க்கு வாங்கப்படுகிறது. டிப்பர் (14 கிலோ) ரூ.100க்கு கொள்முதலாகிறது. இந்த சூழ்நிலையில் தக்காளி வரத்தும் அதிகமாகியுள்ளது. இதனால் தக்காளி விற்பனை விலை மிகவும் சரிந்து பறிப்பு கூலி கூட கிடைக்காத நிலை உள்ளது.

    1 டிப்பர் தக்காளிக்கு அறுவடைக் கூலி ரூ. 20, வண்டி வாடகை மற்றும் சுங்கம் ரூ. 30 என ரூ .50 க்கு மேல் செலவாகிறது .இந்த நிலையில்1 டிப்பர் ரூ.90, ரூ.100க்கு தக்காளி விற்றால் எப்படி கட்டுபடியாகும். எனவே அரசு தக்காளி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தக்காளி போன்ற காய்கறிகள் அதிக விளைச்சலின் போது உரிய பாதுகாப்பு இல்லாததால் வீணாகி வருகிறது. எனவே ஆங்காங்கே குளிர்பதனக் கிடங்குகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பல்லடம் பகுதியில் தக்காளி ஜாம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும். இவ்வாறு தக்காளி விவசாயிகள் தெரிவித்தனர்.

    • கல்லணையில் இருந்து இந்த பருவத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வெண்ணாற்றில் 9 ஆயிரத்து 8 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
    • திருக்காட்டுப்பள்ளி பகுதியில் நல்ல வெயில் அடித்து வருவதால் விவசாயிகள் முன்பட்ட குறுவை அறுவடை பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    பூதலூர்:

    மேட்டூர் அணைக்கு கர்நாடகத்திலிருந்து வரும் உபரி நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 89,599 கன அடியாக உள்ளது.மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 88 ஆயிரத்து 887 கனஅடியாக பராமரிக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 93. 470 டிஎம்சி ஆகவும் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் உள்ளது.

    திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணையில் இருந்து காவிரியில் 41 ஆயிரத்து 112 கனஅடியும், கொள்ளிடத்தில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 693 கன அடியும் திறந்து விடப்படுகிறது.கல்லணையில் இருந்து இந்த பருவத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வெண்ணாற்றில் 9 ஆயிரத்து 8 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.காவிரியில் 8,506 கன அடி, கல்லணை கால்வாயில் 3221 கன அடியும், கொள்ளிடத்தில் 23890 கன அடியும் திறந்து விடப்படுகிறது.

    கொள்ளிடத்தில் நேற்று மாலை 1.36 லட்சம் கன அடி தண்ணீர் ஓடிக்கொண்டுள்ளது. இதனால் வடுவகுடி, மரூர், ஆச்சனூர் உள்ளிட்ட தாழ்வான பகுதியில் உள்ள நெல்வயல்கள், வாழையில் புகுந்த தண்ணீர் வடிய வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. திருக்காட்டுப்பள்ளி பகுதியில் நல்ல வெயில் அடித்து வருவதால் விவசாயிகள் முன்பட்ட குறுவை அறுவடை பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    திருக்காட்டுப்பள்ளி பகுதியில் முன்பட்டகுறுவை சாகுபடி செய்து உள்ள கிராமங்களில் அறுவடை எந்திரங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மழை இல்லாமல் இருந்தால் இன்னும் சில நாட்களில் முன்பட்ட அறுவடை நிறைவடையும் நிலையில் அறுவடை இயந்திரங்கள் குவிந்து உள்ளன. அறுவடை இயந்திரங்கள் குவிந்து அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த போதிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது, விரைந்து கொள்முதல் செய்வது என்பதில் மந்த நிலைமையே நிலவுகிறது.

    விவசாயிகள் தங்கள் விளைவித்த நெல்லை வெயில் அடிக்கும் சமயத்தில் அறுவடைக்கு முனைப்பு காட்டும் போது, அதே அளவில் ஈரப்பதம் காரணம் காட்டி கொள்முதல் செய்வதில் தாமதம் செய்யாமல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முனைப்பு காட்டி முன்பட்ட குறுவை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    • பல கிராமங்களில் முன்பட்ட குறுவை நெற்பயிற்கதிர் வந்து விளைந்து இன்னும் ஓரிரு நாட்களில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
    • விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய கணினி வழியாக பதிவு செய்ய வேண்டும்.

    பூதலூர்:

    பூதலூர் வட்டாரத்தில் முன்பட்ட குறுவை சாகுபடி கல்லணை தொடங்கி ஆழ்துளை கிணறு வசதி உள்ள கிராமங்களில் நடைபெற்றது. பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் மட்டும் ஏறக்குறைய 5000 ஏக்கர் பரப்பில் முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி செய்யப்பட்டுள்ள முன்பட்ட குறுவை பயிர் சில கிராமங்களில் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. பல கிராமங்களில் முன் பட்ட குறுவை நெற்பயிற் கதிர் வந்து விளைந்து இன்னும் ஓரிரு நாட்களில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

    அறுவடை தொடங்கி யுள்ள சில கிராமங்களிலும், தொடங்க உள்ள கிராமங்களிலும் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்வதற்கு எந்த ஏற்பாடுகளையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செய்யவில்லை. அறுவடை தொடங்கியுள்ள கிராம விவசாயிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை அணுகிய போது உடனடியாக திறக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக விவசாயிகள் குறை கூறுகின்றனர்.

    விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய கணினி வழியில் வழியாக பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிப்பு வந்து அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அறுவடை நடைபெறுவதற்கு முன்னதாகவே அதிகாரிகள் கள ஆய்வு செய்து கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் இந்த பகுதியில் நேரடியாக கள ஆய்வு செய்து கொள்முதல் நிலையங்கள் திறக்க ஆவனசெய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    ×