search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rahul Gandhi"

    • 2019ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றார்.
    • 2024 ஆம் ஆண்டு மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி தோல்வி அடைந்தார்.

    முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாஜகவை சேர்ந்த ஸ்மிருதி இரானி, கடந்த 2019ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு ராகுல்காந்தியை தோற்கடித்தார். அதன்பின் மத்திய அமைச்சராக அவர் பொறுப்பேற்றார்.

    இதனையடுத்து 2024 ஆம் ஆண்டு மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி காங்கிரஸ் வேட்பாளர் கிஷோர் லால் சர்மாவிடம் தோல்வி அடைந்தார்.

    டிவி சீரியல் மூலம் பிரபலமாகி அரசியலில் நுழைந்த ஸ்மிருதி இராணி, சமீபத்தில் 'அனுபாமா' என்ற டிவி சீரியல் நடிகையுடன் இருக்கும் புகைப்படம் வெளியாக, அவர் மீண்டும் இந்தி டி.வி. சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் பரவியது

    இந்நிலையில், சீரியலில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல்களுக்கு பாஜக முன்னாள் எம்.பி. ஸ்மிருதி இராணி மறுப்பு தெரிவித்துள்ளார்.

    • துணை முதல்வராக சுரேந்தர் குமார் பதவி ஏற்றார்.
    • தமிழகத்திலிருந்து திமுக சார்பில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கலந்துகொண்டார்

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் அக்டோபர் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் பெரும்பான்மை இடங்களைப் பிடித்து தேசிய மாநாடு [என்சிபி] மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.

    தேசிய மாநாடு கட்சி 42 இடங்களிலும் , காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் ஸ்ரீநகரில் வைத்து நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவியேற்றார்.

    மேலும் துணை முதல்வராக சுரேந்தர் குமார் பதவி ஏற்றார். என்சிபி அமைச்சரவையில் இப்போதைக்குப் பங்குகொள்ளப்போவதில்லை என்றும் வெளியில் இருந்து ஆதரிப்பதாகவும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்நிலையில் உமர் அப்துல்லா பதவியேற்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் சார்பில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி , காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    மேலும் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சரத் பவார் தேசியவாத கட்சி எம்.பி. சுப்ரியா சூலே, திமுக சார்பில் எம்.பி.கனிமொழி என பிற மாநில கூட்டணி கட்சயினரும் கலந்துகொண்டனர். அமைத்துள்ள என்சிபி ஆட்சிக்கு உமர் அப்துல்லா  மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோரை சந்தித்து இவர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • ஜம்மு காஷ்மீரில் 10 வருடங்களுக்குபிறகு அரசு அமைந்துள்ளது
    • தமிழகத்திலிருந்து திமுக சார்பில் கனிமொழி எம்.பி. கலந்துகொள்கிறார்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 26 தொகுதிகளுக்கும், 3-வது கட்டமாக 40 தொகுதிகளுக்கும் வாக்கப்பதிவு நடைபெற்றது.

    ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 8 ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் பெரும்பான்மை இடங்களை பிடித்து தேசிய மாநாடு [என்சிபி] மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. தேசிய மாநாடு கட்சி 42 இடங்களிலும் , காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    இதற்கிடையே 4 சுயேட்சைகள் மற்றும் 1 இடத்தில் வென்ற ஆம் ஆத்மி என்சிபி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஜனாதிபதி ஆட்சி திரும்பப்பெறப்பட்டு உமர் அப்துல்லா தலைமையிலான என்சிபி அரசு இன்றைய தினம்  ஆட்சியமைத்துள்ளது.

    ஸ்ரீநகரில் உள்ள சேர்-இ-காஷ்மீர் இன்டர்நேஷனல்  கான்வென்டின்  சென்டர்  (SKICC) இல் வைத்து காலை 11.30 மணியளவில் பதவியேற்பு விழா  தொங்கியது. நிலையில் உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீரில் முதல்வராக துணை நிலை ஆளுநர் முன்னிலையில்  பதவியேற்பட்டார். மேலும் ஜம்மு காஷ்மீர் துணை முதல்வராக என்.சி.பி. கட்சியின் முக்கிய தலைவர் சுரேந்தர் குமார் பதவியேற்றார். ஜம்மு காஷ்மீரில் 10 வருடங்களுக்குபிறகு அரசு  அமைத்துள்ளது. உமர் அப்துல்லாவை தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர்.

     

    இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் சார்பில் கலந்துகொள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இந்தியா கூட்டணி கட்டியான சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டுள்ளார். தமிழகத்திலிருந்து திமுக சார்பில் கனிமொழி எம்.பி கலந்துகொண்டுள்ளார்.

     

    • ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
    • வயநாடு தொகுதியில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    சட்டப்படி, ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே ஒருவர் தொடர முடியும் என்பதால் ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதன்மூலம் ராகுல்காந்தி ரேபரேலி எம்.பியாக ராகுல் காந்தி தொடர்கிறார்.

    வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்த நிலையில், அந்த தொகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டார்.

    இதனையடுத்து வயநாட்டில் ஏற்பட்ட மோசமான நிலச்சரிவில் சிக்கி எண்ணற்றோர் உயிரிழந்தனர். இதனால் வயநாடு தொகுதியின் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.

    இந்நிலையில் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலுடன் சேர்த்து வயநாடு இடைத்தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அதன்படி நவம்பர் 13 ஆம் தேதி வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும், மகாராஷ்டிராவின் நான்தேட் பாராளுமன்ற தொகுதிக்கு நவம்பர் 20 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கையோடு சேர்த்து இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நவம்பர் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.

    • இந்தச் சம்பவம் அக்னிவீர் திட்டம் குறித்து மீண்டும் கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.
    • இதற்கு பா.ஜ.க. அரசு பதிலளிக்கத் தவறிவிட்டது என்றார் ராகுல் காந்தி.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக்கில், கடந்த 10-ம் தேதி பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென வெடிகுண்டு வெடித்துச் சிதறியதில் கோஹில் விஸ்வராஜ், சயீபாத் ஆகிய 2 வீரர்கள் சம்பவ இடத்திலேயே வீரமரணமடைந்தனர்.

    இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:

    நாசிக்கில் பயிற்சியின்போது கோஹில் விஸ்வராஜ் சிங் மற்றும் சைபத் ஷிட் ஆகிய இரு அக்னிவீரர்கள் மரணம் அடைந்திருப்பது ஒரு சோகமான சம்பவம். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தச் சம்பவம் அக்னிவீர் திட்டம் குறித்து மீண்டும் கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. இதற்கு பாஜக அரசு பதிலளிக்கத் தவறிவிட்டது.

    வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கான இழப்பீட்டிற்கு இணையாக கோஹில் மற்றும் சைபத் குடும்பத்தினருக்கு சரியான நேரத்தில் இழப்பீடு வழங்கப்படுமா?

    அக்னிவீரர்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பிற அரசு வசதிகள் ஏன் கிடைக்காது? இரு வீரர்களின் பொறுப்பும் தியாகமும் ஒரே மாதிரியாக இருக்கும்போது, அவர்கள் தியாகம் செய்த பிறகு ஏன் இந்தப் பாகுபாடு?

    அக்னிபாத் திட்டம் ராணுவத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் நமது வீரர், வீராங்கனைகளின் தியாகத்தை அவமதிக்கும் செயல்.

    ஒரு ராணுவ வீரரின் உயிரை விட மற்றொரு ராணுவ வீரரின் உயிர் ஏன் விலை உயர்ந்தது என்பதற்கு பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும் பதில் சொல்ல வேண்டும்.

    இந்த அநீதிக்கு எதிராக ஒன்றுபடுவோம். பாஜக அரசின் அக்னிவீர் திட்டத்தை நீக்கி, நாட்டின் இளைஞர்கள் மற்றும் ராணுவத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்க இன்றே நமது ஜெய் ஜவான் இயக்கத்தில் இணையுங்கள் என பதிவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 48 வருட காலமாக காங்கிரசில் இருந்துவந்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் கட்சி மாறினார்
    • பாபா சித்திக்கின் மறைவு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

    மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் நேற்றைய தினம் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 48 வருட காலமாக காங்கிரசில் இருந்துவந்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஆட்சியில் பங்கு வகிக்கும் அஜித் பவார் தேசியவாத கட்சிக்குத் தாவினார்.

    பாந்த்ரா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள தனது மகன் ஜீஸ்ஹான் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர். இந்நிலையில் இந்த கொலைக்கு மகாராஷ்டிர ஆளும் பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    பாபா சித்திக் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    பாபா சித்திக்கின் மறைவு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகாராஷ்டிராவில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளதை இந்த கொடூர சம்பவம் அம்பலப்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர அரசாங்கம்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். நீதி வெல்ல வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

    • செங்கோட்டையில் உள்ள மகாதேவ் தாஸ் பூங்காவில் ராம்லீலா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • டெல்லியில் ஆம் ஆத்மி சார்பில் நடந்த தசரா நிகழ்ச்சியில் முதல்வர் அதிஷி கலந்துகொண்டார்.

    இந்துக்களின் புனிதப் பண்டிகையான நவராத்திரி மற்றும் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. இந்நிலையில் இன்றைய இரவு ராவணன் பொம்மையை எரிக்கும் ராம்லீலா நிகழ்வு கொண்டாடப்படுகிறது.

    அந்த வகையில் தலைநகர் டெல்லியில் செங்கோட்டையில் உள்ள மகாதேவ் தாஸ் பூங்காவில் ராம்லீலா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    அதன்பின்னர் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரும் செங்கோட்டையில் நடக்கும் நிகழ்வுக்கு வருகை தந்தனர். இதற்கிடையே டெல்லியில் ஆம் ஆத்மி சார்பில் நடந்த தசரா நிகழ்ச்சியில் முதல்வர் அதிஷி கலந்துகொண்டார்.

    இதுபோல மகாராஷ்டிரா, பீகார், உத்தரகண்ட், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட இடங்களிலும் அரசியல் தலைவர்கள் தலைமையில் தசரா விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    • அரியானாவில் ஆட்சியை பிடித்து விடலாம் என காங்கிரஸ் நம்பிக்கையில் இருந்தது.
    • தேர்தல் முடிவு தலைகீழாக மாறி பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

    90 இடங்களை கொண்ட அரியானா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 5-ந்தேதி நடைபெற்றது. நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    முதலில் காங்கிரஸ் 50-க்கும் அதிகமான இடங்களில் முன்னணி பெற்றது. பின்னர் அப்படியே தலைகீழாக மாறியது. பா.ஜ.க. முன்னிலை பெற்று இறுதியாக 48 இடங்களை பிடித்து தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறது. காங்கிரஸ் 37 இடங்களில் வெற்றி பெற்றது.

    தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது மெதுவாக அப்டேட் செய்ததாக தேர்தல் ஆணையத்தின் மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியது. அத்துடன் தோல்வியை ஏற்கமாட்டோம் எனத் தெரிவித்தது.

    இந்த நிலையில் அரியானா மாநில தோல்வி குறித்து ராகுல் காந்தி கூறியதாவது:-

    அரியானாவின் எதிர்பாராத முடிவு குறித்து ஆராய்ந்து வருகிறோம். ஏராளமான சட்டமன்ற தொகுதியில் இருந்து வந்த புகார்கள் பற்றி தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவிப்போம்" என்றார்.

    "ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாடு- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது, ஜனநாயக சுயமரியாதைக்கு கிடைத்த வெற்றி. ஜம்மு-காஷ்மீர் மக்களுக்க என்னுடைய இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாநில வெற்றி இந்தியாவின் வெற்றி. அரசியலமைப்பின் வெற்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    தேர்தலுக்க பிந்தைய கருத்துக் கணிப்பில் அரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் வாக்கு எண்ணிக்கை முடிவில் கருத்து கணிப்பு பொய்யாக்கப்பட்டது.

    • பாஜவினர் பெட்டி பெட்டியாக ஜிலேபி வாங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
    • பிரதமர் பதவி என்ன மாதுராம் ஜிலேபி என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா என்று மோடி கிண்டலடித்தார்.

    அரியானாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் 3-வதுமுறையாக ஆட்சி அமைக்கிறது. தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நேற்றய தினம் நடந்த வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்தில் முன்னிலையில் இருந்த காங்கிரஸ் பாதியிலேயே பின்னடைவை சந்திக்கத் தொடங்கியது.

    தற்போது பாஜக தனது வெற்றியை கொண்டாடி வரும் நிலையில் இனிப்பு பலகாரமான ஜிலேபி டிரண்ட் ஆகி வருகிறது. பாஜவினர் பெட்டி பெட்டியாக ஜிலேபி வாங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஜிலேபியை குறிப்பிட்டு அவர்கள் தேர்ந்தெடுக்க காங்கிரசை வெறுப்பேற்றும் அரசியல் காரணங்களும் உண்டு.

     

    தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அரியானாவில் பிரதியேகமாக தயாரிக்கப்படும் மாதுராம் ஜிலேபி குறித்து பேசியிருந்தார். பிரசித்தி பெற்ற மாதுராம் ஜிலேபிகளை நாட்டின் மற்ற பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதால் அரியானாவில் வேலைவாய்ப்பு உயரும் என்ற திட்டத்தைத் தேர்தல் பிரசாரங்களில் ராகுல் முன்வைத்திருந்தார்.

    மற்ற ஜிலேபிகளை விட சற்று அதிக நாட்கள் நீடிக்கக்கூடிய இந்த மாதுராம் ஜிலேபிகளின் தயாரிப்பை அதிகப்படுத்தும்போது நாள் ஒன்றுக்கு 20,000 முதல் 50,000 வரை மாதுராம் கிளைகளில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்த முடியும் என்று அவர் பேசினார். இதைக் கிண்டல் செய்த பாஜக தலைவர்கள், எங்களுக்கும் மாதுராம் ஜிலேபிகள் பிடிக்கும், ஆனால் ராகுல் காந்தி இதுபற்றிய அடிப்படை புரிதல் இல்லாமல் பேசி வருகிறார் என்று கூறியிருந்தனர்.

    பிரதமர் மோடியும் தேர்தல் பிரசாரத்தின்போது, இந்தியா கூட்டணி வருடத்துக்கு ஒரு பிரதமர் என பிரித்து 5 வருடங்கள் ஆட்சி செய்யும் கனவில் உள்ளது, பிரதமர் பதவி என்ன மாதுராம் ஜிலேபி என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா என்று கிண்டலடித்திருந்தார்.

    தற்போது காங்கிரசை வீழ்த்தி பாஜக வென்றுள்ளதால் அம்மாநிலத்தில் ஜிலேபிகளை பாஜவினர் டிரண்ட் செய்து வருகின்றனர். அசாமில் பாஜக ஊழியர் ஒருவர் காங்கிரஸ் அலுவலகத்திற்குச் சென்று ஜிலேபி பெட்டிகளை டெலிவரி செய்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. 

    • விமானப்படை தினத்தில், இந்திய விமானப்படையின் துணிச்சலான ஆண்களுக்கும் பெண்களுக்கும் எனது மனமார்ந்த மரியாதை.
    • உங்களது தன்னலமற்ற சேவைக்கும் தியாகத்திற்கும் நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம்.

    புதுடெல்லி:

    மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்ற தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    விமானப்படை தினத்தில், இந்திய விமானப்படையின் துணிச்சலான ஆண்களுக்கும் பெண்களுக்கும் எனது மனமார்ந்த மரியாதை.

    உங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு எங்கள் வானத்தைப் பாதுகாப்பாகவும், எங்கள் உற்சாகத்தையும் உயர்வாகவும் வைத்திருக்கிறது. உங்களது தன்னலமற்ற சேவைக்கும் தியாகத்திற்கும் நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம்.

    ஜெய்ஹிந்த்.

    இவ்வாறு ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். 


    • பட்டியலின தம்பதியின் வீட்டிற்கு சென்ற ராகுல் காந்தி அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி கேட்டறிந்தார்.
    • இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார்.

    மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் ஒரு பட்டியலின தம்பதியின் வீட்டிற்கு சென்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி கேட்டறிந்து அவர்களுடன் சேர்ந்து உணவு சமைக்க உதவி செய்து பின்னர் அவர்களுடன் சேர்ந்து உணவருந்தியுள்ளார்.

    இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ராகுல் காந்தி அவரது பதிவில், இன்றும் தலித் சமையலறை பற்றி வெகு சிலருக்கே தெரியும். ஷாஹு படோலே ஜி கூறியது போல், தலித்துகள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள், எப்படி சமைக்கிறார்கள், அதன் சமூக மற்றும் அரசியல் முக்கியத்துவம் என்ன என்பதை பற்றி, அஜய் துக்காராம் சனடே மற்றும் அஞ்சனா துக்காராம் சனடே ஆகியோருடன் ஒரு மதியம் செலவிட்டேன்.

    மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு என்னை மிகுந்த மரியாதையுடன் அழைத்து, சமையலறையில் அவருக்கு உதவ எனக்கு அவர் வாய்ப்பு அளித்தார். நாங்கள் இருவரும் சேர்ந்து 'ஹர்பர்யாச்சி பாஜி', கொண்டைக்கடலை, கீரைகள் மற்றும் கத்திரிக்காயுடன் துவர் பருப்பு ஆகியவற்றைச் செய்தோம்.

    படோல் ஜி மற்றும் சனடே குடும்பத்தின் சாதி மற்றும் பாகுபாடு பற்றிய தனிப்பட்ட அனுபவங்களைப் பற்றி பேசுகையில், தலித் உணவுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை மற்றும் இந்த கலாச்சாரத்தின் ஆவணப்படுத்தலின் முக்கியத்துவம் பற்றி விவாதித்தோம்.

    அரசியலமைப்பு சட்டம் பகுஜன்களுக்கு பங்கேற்பையும் உரிமைகளையும் வழங்குகிறது. அந்த அரசியலமைப்பை நாங்கள் பாதுகாப்போம். ஆனால், ஒவ்வொரு இந்தியனும் தன் இதயத்தில் சகோதரத்துவ உணர்வோடு முயற்சி செய்தால் மட்டுமே சமுதாயத்தில் அனைவரையும் உள்ளடக்கியும் சமத்துவம் சாத்தியமாகும்" என்று பதிவிட்டுள்ளார்.


    • முஸ்லிம்களுக்கு எனது எச்சரிக்கை, காங்கிரசின் வாக்கு வங்கியாக மாறாதீர்கள்.
    • காங்கிரஸ் கட்சியின் பிரித்து ஆட்சி செய்யும் கொள்கைளால் பாதிக்கப்படாதீர்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற விவகாரத் துறை மந்திரி கிரண்ரிஜிஜூ தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    முஸ்லிம்களுக்கு எனது எச்சரிக்கை, காங்கிரசின் வாக்கு வங்கியாக மாறாதீர்கள். அதேபோல் இந்துக்களுக்கும் மற்றவர்களுக்கும் எனது எச்சரிக்கை, காங்கிரஸ் கட்சியின் பிரித்து ஆட்சி செய்யும் கொள்கைளால் பாதிக்கப்படாதீர்கள்.

    முஸ்லிம்கள் எப்போதும் தனக்கு வாக்களிப்பார்கள் என்று காங்கிரஸ் நம்புகிறது. இவ்வாறான சிந்தனை செயல்பாட்டிற்கு மத்தியில் முஸ்லிம் சமூகம் எவ்வாறு அபிவிருத்தி அடையும்.

    இந்துக்களை பிளவுப்படுத்தும் அதே வேளையில் முஸ்லிம்களை தனது வாக்கு வங்கியாக வைத்திருப்பதே காங்கிரஸ் திட்டமிடலின் குறிப்பிடத்தக்க பகுதியாகும்.


    எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து ராகுல்காந்திக்கு ஏ.பி.சி.டி. கூட தெரியாது. ஆனாலும் அவர் எப்போதும் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. மக்களை பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார்.

    எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பாடத்தில் பேசுவதன் மூலம் அவர் அப்படி பேச கற்றுக்கொண்டார்.

    கடந்த 60 வருடங்களில் உங்களை ஏழைகளாக்கியது யார் என்று எங்கள் முஸ்லிம்களிடம் கேட்க விரும்புகிறேன். இன்று பிரதமர் மோடி உங்களுக்காக வங்கி கணக்குகளை திறந்து உங்களுக்காக வீடுகளை கட்டி கொடுக்கிறார்.

    தண்ணீர், மின்சாரம் மற்றும் கடன்களை வழங்குகிறார். அவர் அனைத்து இந்தியர்களையும் சமமாக நடத்துகிறார். பலன் எல்லோருக்கும் செல்கிறது. அப்படி இருக்க முஸ்லிம் வாக்குகள் அனைத்தும் காங்கிரசுக்கு ஏன் போக வேண்டும்.

    ஒரு சமூகத்தை தவறாக பயன்படுத்துவது தவறான விஷயம். முஸ்லிம்களை வாக்கு வங்கியாக ஆக்காதீர்கள் என்று காங்கிரசை எச்சரிக்கிறேன்.

    இந்த முறை சிறுபான்மை வாக்குகள் காங்கிரசுக்கு போகாமல் பார்த்துக் கொள்வோம். நாங்கள் தெளிவான பார்வையுடன் மக்களிடம் செல்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×