search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நர்சு"

    கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தபோது டயாலிசிஸ் செய்தால் இறந்து போவீர்கள் என்று நர்சு ஒருவர் கூறியதால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளி மாரடைப்பால் பரிதாபமாக இறந்தார்.
    கோவை:

    திருப்பூர் மாவட்டம் முருகானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்வர் அலி (வயது 57), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சவுராமா. இவர்களுக்கு சர்மிளா பானு, ஆதிதா பானு ஆகிய மகள்களும், மன்சூர் அலிகான் என்ற மகனும் உள்ளனர். இதில் சர்மிளா பானு, ஆதிதா பானு ஆகியோருக்கு திருமணம் ஆகிவிட்டது.

    அன்வர் அலிக்கு சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த 19-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு டயாலிஸ் சிகிச்சைக்காக சென்று உள்ளார். அப்போது பணியில் இருந்த நர்சு ஒருவர் அன்வர் அலியிடம் டயாலசிஸ் செய்தால் நீங்கள் இறந்துவிடுவீர்கள் என்று தெரிவித்து உள்ளார். இதைக்கேட்ட 5 நிமிடத்தில் அவர் மயங்கி விழுந்து இறந்துவிட்டார். நோயின் தன்மை குறித்து நோயாளியிடம் வெளிப்படையாக தெரிவித்ததால் அவர் இறந்ததாகவும், சம்பந்தப்பட்ட நர்சு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்வர் அலியின் உறவினர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து அன்வர் அலியின் மகள்கள் சர்மிளா பானு, ஆதிதா பானு ஆகியோர் கூறியதாவது:-

    எங்களது தந்தை அன்வர் அலி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல் முழுவதும் அரிப்பு மற்றும் உடல் சோர்வு காரணமாக அவதியடைந்து வந்தார். இதற்காக அவரை ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதை அறிந்தனர்.

    இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக கடந்த மாதம் 9-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவரை மறுநாள் 10-ந் தேதி காலையில் அரசு ஆஸ்பத்திரி புதிய கட்டிடத்தில் இயங்கும் சிறுநீரக சிகிச்சை பிரிவில் சேர்த்தோம். இதைத்தொடர்ந்து அவருக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்று எங்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர்.

    அத்துடன் அங்கு பணியில் இருந்த நர்சு ஒருவர் எங்களது தந்தையிடம் உங்களுக்கு டயாலிசிஸ் செய்தால் 90 சதவீதம் இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளார். இதனால் பயந்துபோன அவர் டயாலிசிஸ் செய்ய வேண்டாம் என்று கூறியவாறு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறினார்.

    இந்தநிலையில் கடந்த 19-ந் தேதி அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவரை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றோம். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் அன்று இரவு மேல்சிகிச்சைக்காக அங்குள்ள டாக்டர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    அங்கு மறுநாள் 20-ந் தேதி ஏற்கனவே நாங்கள் சென்ற சிறுநீரக சிகிச்சை பிரிவுக்கு டயாலிசிஸ் செய்ய மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு பணியில் இருந்த நர்சு எங்களிடம் கையெழுத்து வாங்கினார். அதேபோல் எங்களுடைய தந்தையிடம் டயாலிஸ் செய்தால் உங்கள் உடலில் வயிற்றுப்பகுதியில் ஓட்டை போட்டு 2 லிட்டர் தண்ணீர் செலுத்தி ரத்தத்தை சுத்தம் செய்வோம். அதில் நீங்கள் உயிர் இழப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

    இதை ஏன் சம்பந்தப்பட்ட நோயாளியிடம் தெரிவிக்கிறீர்கள் என்று நாங்கள் கண்டித்தோம். அதற்கு அவர்கள் இது எங்கள் பணி. நாங்கள் அவ்வாறு தான் சொல்வோம் என்று அலட்சியமாக பதில் அளித்தனர்.



    இந்தநிலையில் நர்சு கூறிய வார்த்தையை கேட்டு அதிர்ச்சியடைந்த எங்கள் தந்தை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நெஞ்சை பிடித்துக்கொண்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை அங்குள்ள டாக்டர்கள் மற்றும் நர்சுகள் வார்டில் உள்ள படுக்கைக்கு அழைத்து சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் எங்களுடைய தந்தை டயாலிசிஸ் செய்வதற்கு முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். எனவே எங்கள் தந்தை போன்று வேறு யாருக்கும் இந்தநிலை வரக்கூடாது. இதில் சம்பந்தப்பட்ட நர்சு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகனிடம் கேட்டபோது, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளிடம் நோய் குறித்து தெரிவிக்கக்கூடாது என்று டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே டயாலிசிஸ் செய்ய வந்த நோயாளியிடம் அவரின் நிலை குறித்து நர்சு தெரிவிக்க வாய்ப்பு இல்லை.

    மேலும் இங்கு வரும் நோயாளிகளிடம் கனிவாக பேசி சில புரோக்கர்கள் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்கிறார்கள். எனவே அவர்கள் இதுபோன்று நோயாளியிடம் தெரிவித்து இருக்கலாம். இதில் உண்மை தன்மை இருந்தால் சம்பந்தப்பட்ட நர்சு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் செவிலியர்களால் கொண்டாடப்பட்டது.
    பெரம்பலூர்:

    மக்கள் நல்வாழ்வுக்காக இரவு, பகல், பண்டிகை நாட்கள் பாராமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய செவிலியர் சேவை புரிந்து வரும் செவிலியர்களின் பங்களிப்பு வெகுவாக பாராட்டத்தக்கது. இங்கிலாந்து நாட்டில் செல்வ செழிப்புமிக்க குடும்பத்தில் 12–5–1820–ம் ஆண்டு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார். அவர் செவிலியர் சேவையை தன் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக அப்பணியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவர் பிறந்த மே 12–ம் நாள் உலக செவிலியர் தினமாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள், ஊழியர்கள், நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்களுக்கு செவிலியர்கள் இனிப்பு கொடுத்தனர்.

    அவர்கள் செவிலியர்களுக்கு, செவிலியர் தின வாழ்த்துக்களை கூறினர். எதிர்காலத்தில் செவிலியர் ஆக உள்ள மருத்துவமனையில் பயிற்சி பெறும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள், செவிலியர்களுக்கு கை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் செவிலியர்கள் ஒருவருக்கொருவர் கை கொடுத்தும், கட்டி அரவணைத்தும் செவிலியர் தின வாழ்த்துக்களை கூறி பரிமாறி கொண்டனர். சில செவிலியர்கள் ஒன்று சேர்ந்து தங்களது செல்போனில் ‘செல்பி‘ எடுத்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் செவிலியர்கள் கட்டை விரலை உயர்த்தி தங்கள் இலக்கினை அடைவோம் என்று உறுதி எடுத்து கொண்டனர். சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ்–அப் ஸ்டேட்டஸ்களில் சிலர் செவிலியர்களை என்னை பெற்றெடுத்த தாய் அரவணைக்கும் முன்பே என்னை அரவணைத்த தெய்வங்கள் என்று வாழ்த்தி பதிவிட்டிருந்தனர்.

     பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அரசு செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள் என 200–க்கும் மேற்பட்டோர் காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளைகளில் சுழற்சி முறையில் பணிபுரிந்து நோயாளிகளுக்கு சேவையாற்று வருகின்றனர். மனம் கோணாது சேவையில் சிறந்து விளங்கும் செவிலியரை இன்னொரு தாய் என்று சொல்வது அர்த்தம் உள்ளதாகவே இருக்கும்.

    இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உலக செவிலியர் தினம் கொண்டாட்டப்பட்டது.
    வடமதுரை அருகே பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என பயந்து மகளிர் போலீசில் பாதுகாப்பு கேட்டு காதலனுடன் நர்ஸ் தஞ்சமடைந்தார்.
    வடமதுரை:

    வடமதுரை அருகே மந்தைகுரும்ப பட்டியை சேர்ந்தவர் சத்யாதேவி (வயது20). தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கரிசல்பட்டியை சேர்ந்த பிரபாகரன்(வயது24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பிரபாகரன் சென்ட்ரிங் தொழில் செய்து வருகிறார்.

    நாளடைவில் இது காதலாக மாறியது. காதல்ஜோடி பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்துள்ளனர். இருவரும் திருமணம் செய்துகொள்வதென முடிவு செய்தனர். ஆனால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என பயந்த காதல்ஜோடி வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்தனர்.

    அதன்படி எரியோட்டில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படியே செல்லலாம் என போலீசார் அறிவுறுத்தினர். மேலும் அவர்களிடம் சமரசபேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். #tamilnews
    அரசு மருத்துவமனையில் கர்ப்பிணியிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்ட நர்சை பணியிட மாற்றம் செய்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணராஜ் உத்தரவிட்டார்.
    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த நாலூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு நர்சாக வேலை பார்த்து வருபவர் தங்கரத்தினம். இவர் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் 20 ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவரிடம் மகப்பேறு அரசு உதவி தொகை பெறுவதற்கான அட்டவணை வழங்க ரூ.2000 லஞ்சமாக கேட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கர்ப்பிணி பெண் மற்றும் சிகிச்சைக்கு வந்தவர்கள், கிராம மக்கள் ஆராம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு தங்கரத்தினத்தை அறையில் பூட்டி சிறை வைத்தனர்.

    மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் மீஞ்சூர் ஒன்றிய மருத்துவ அலுவலர் ராஜேஷ் பேச்சுவார்த்தை நடத்தி நர்சு தங்கரத்தினத்தை விடுவித்தனர்.

    இதற்கிடையே லஞ்சம் கேட்ட அவரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணராஜ் உத்தரவிட்டார்.

    நர்சு தங்கரத்தினம் ஏற்கனவே மூன்று மாத குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்ததாக அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    காங்கயத்தில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.15 லட்சம் மோசடி செய்த போலி டாக்டர், நர்சு தலைமறைவான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காங்கயம்:

    கரூர் டவுன் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 58). இவர் காங்கயம் சிவன்மலை திருப்பூர் பிரிவில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். மேலும் தான் ஒரு ஓமியோபதி மருத்துவர் என்றும், தனது மனைவி நர்சு என்றும் கூறி அங்குள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

    அதே இடத்தில் ஏலச்சீட்டு நிறுவனமும் நடத்தி வந்தார். தீபாவளியையொட்டி 3 வகையான சீட்டு பணம் வசூல் செய்தார். அதன்படி காங்கயம், சென்னிமலை, அவினாசிபாளையம் ஆகிய பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் சீட்டு போட்டனர். அதன்படி ரூ.15 லட்சம் வசூலானது.

    தீபாவளி முன்தினம் 300 பேரும் சேர்ந்து தங்களின் பணத்தை தருமாறு கேட்டனர். நாளை தருவாக கூறி அனுப்பி வைத்தனர். தீபாவளியன்று சென்று பார்த்தபோது மெடிக்கல் ஸ்டோர், கிளீனிக், நிதி நிறுவனம் ஆகியவை பூட்டப்பட்டிருந்தது.

    அதிர்ச்சியடைந்த முதலீட்டார்கள் குமார் மற்றும் அவரது மனைவியை தேடியபோது அவர்கள் பணத்துடன் தலைமறைவானது தெரியவந்தது.

    இதனையடுத்து காங்கயம், அவினாசிபாளையம், சென்னிமலை ஆகிய 3 போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் குமார் மருத்தாளுனருக்கு படித்ததும், அவரது மனைவி படிக்கவில்லை என்றும் தெரியவந்தது. டாக்டர், நர்சு என்று பொய் கூறி சிகிச்சை அளித்ததுடன் சீட்டு நடத்தி ரூ.15 லட்சம் மோசடி செய்ததும் தெரியவந்தது. தம்பதியை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
    அரசு ஆஸ்பத்திரிக்குள் வாலிபர்கள் புகுந்து அடிக்கடி ரகளை செய்வதை தடுக்க வேண்டும், போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி டாக்டர், நர்சுகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் சிக்னல் அருகே அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு 24 மணி நேரம் செயல்படக்கூடிய அவரச சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு மற்றும் பல பிரிவுகள் உள்ளன.

    இந்த ஆஸ்பத்திரிக்கு விழுப்புரம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பேர் சிகிச்சை பெற வருகின்றனர். இந்த ஆஸ்பத்திரியின் காவலாளியாக ராஜா (வயது 35). என்பவர் நேற்று இரவு இருந்தார்.

    இரவு 11 மணியளவில் விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் (28) என்ற வாலிபர் குடிபோதையில் ஆஸ்பத்திரியின் கேட்டில் நின்று கொண்டு காவலாளியிடம் கதவை திறக்கும்படி கூறினார். ஆனால் ராஜா கதவை திறக்காமல் இருந்தார்.

    அப்போது ஆத்திரம் ராமச்சந்திரன் கேட்டின் கதவை திறந்துகொண்டு உள்ளே புகுந்தார். பின்பு பிரசவ வார்டு அருகே சென்ற அவர் அங்கு இருந்த கதவை உடைத்து ரகளை செய்தார். அப்போது அந்த அறையில் இருந்த நர்சுகள் கிரேசி, வசந்தி, மலர்விழி மற்றும் டாக்டர் மணிகண்டன் ஆகியோர் அந்த வாலிபரிடம் ஏன் இங்கு வந்து ரகளை செய்கிறீர்கள் என்று தட்டிக்கேட்டனர். அவர்களையும் ராமச் சந்திரன் ஆபாசமாக பேசினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அங்கு இருந்த நர்சுகள் அலறிஅடித்துக்கொண்டு ஆஸ்பத்திரி அருகில் இருந்த புறக்காவல் நிலையத்திற்கு சென்று புகார் கூறினர். இதை அறிந்ததும் ராமச்சந்திரன் அங்கிருந்து ஓடிவிட்டார். பின்பு அவர் சிறிது நேரம் கழித்து தனது அண்ணன் இளையபெருமாள் (29), உறவினர் ஸ்ரீகாந்த் (32) ஆகியோருடன் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்பு அவர்கள் அங்கிருந்த காவலாளி ராஜாவை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து காவலாளி ராஜா விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    இன்று காலை டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பணிக்கு வழக்கம் போல் வந்தனர். ஆஸ்பத்திரிக்குள் புகுந்து வாலிபர் காவலாளியை தாக்கி விட்டு ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் திடீரென்று பணி செய்யாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    7 டாக்டர்கள், 18 நர்சுகள், 30 ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஆஸ்பத்திரிக்குள் வாலிபர்கள் புகுந்து அடிக்கடி ரகளை செய்வதை தடுக்க வேண்டும், போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி கோ‌ஷம் எழுப்பினர். ஆனால் அவசர சிகிச்சை பிரிவு மட்டும் இயங்கியது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், பட்டாபிராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்பு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள், நர்சுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆஸ்பத்திரிக்குள் புகுந்து காவலாளியை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் சாந்தி கூறினார். அதனை போலீசார் ஏற்றுக்கொண்டனர்.

    அதனைதொடர்ந்து போராட்டம் நடத்திய டாக்டர்கள், நர்சுகள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு பணியில் ஈடுபட்டனர்.

    சுமார் 3 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள் பெரும் அவதி அடைந்தனர்.

    இதற்கிடையே ஆஸ்பத்திரிக்குள் புகுந்து காவலாளி ராஜாவை தாக்கிய ராமச்சந்திரன், இளையபெருமாள், ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆஸ்பத்திரியில் புகுந்து தாக்குதலில் காயம் அடைந்த காவலாளி ராஜாவுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

    ஆஸ்பத்திரிக்குள் புகுந்து காவலாளியை தாக்கிய சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    புதூரில் நர்சு வீட்டில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை புதூர் ராமலட்சுமி நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி லதாதேவி (வயது 48). தனியார் மருத்துவமனையில் நர்சாக பணி புரிந்து வருகிறார்.

    சில தினங்களுக்கு முன்பு முருகன் விபத்தில் சிக்கி காயமடைந்தார். அவர் மனைவி பணிபுரியும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் கணவருக்கு உதவியாக லதாதேவி ஆஸ்பத்திரியில் இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பூட்டிக் கிடந்த அவரது வீட்டின் கதவை மர்ம நபர்கள் உடைத்து 33 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சேலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செல்போன் பேசிய படி பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாக பெற்றோர் புகார் கூறியதை அடுத்து நர்சு மீது விசாரணை நடத்த கமி‌ஷனர் உத்தரவிட்டுள்ளார்.
    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி குள்ளப்பன் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (28). ஆடிட்டர் அலுவலக உதவியாளர். இவரது மனைவி கலைமணி (26). காதல் திருமணம் செய்த இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார்.

    இந்தநிலையில் 2-வதாக கர்ப்பம் தரித்த கலைமணிக்கு தாதகாப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 1-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி 2-ந் தேதி குழந்தை உயிரிழந்தது.

    இந்தநிலையில் சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் பிரபாகரன் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனது மனைவிக்கு குழந்தை பிறந்ததும் மூச்சு, பேச்சு இல்லாமல் குழந்தை இருந்தது. அப்போது பணியில் இருந்த நர்சு செல்வி செல்போனில் பேசியபடி அஜாக்கிரதையாக செயல்பட்டார்.

    இதனால் இயற்கை உபாதை கழிவுகள் குழந்தையின் வயிற்றுக்குள் சென்று உயிரிழந்து விட்டது. அவர் துரிதமாக செயல்பட்டிருந்தால் குழந்தையை காப்பாற்றி இருக்கலாம்.

    ஆனால் மறுநாள் போனில் பேசிய அந்த நர்சு குழந்தையின் உடல் நிலை பற்றி எதுவும் கேட்காமல் பிரசவம் பார்த்ததற்கு 8 ஆயிரம் தரும்படி கேட்டார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த சம்பவம் நேற்றிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து மாநகராட்சி கமி‌ஷனரிடம் கேட்டபோது, இந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சேலம் மாநகர நகர் நல அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வந்ததும் நர்சு மீது தவறு இருப்பது தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். #tamilnews
    நாகர்கோவிலிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவகத்தில் தன்னை ஏமாற்றி கற்பழித்த டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நர்சு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று மதியம் இளம்பெண் ஒருவர் மனு கொடுக்க வந்தார்.

    அப்போது அவர் திடீரென தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவரை தடுத்து மண்எண்ணை கேனை பறிமுதல் செய்தனர். தற்கொலைக்கு முயன்ற அந்த பெண்ணை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிக்சைக்காக அனுப்பி வைத்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காதலன் கற்பழித்து ஏமாற்றியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அந்த பெண் தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

    அந்த பெண் தக்கலை குமாரகோவில் அருகே உள்ள பிரம்மபுரத்தைச் சேர்ந்தவர். அவருக்கு 21 வயது ஆகிறது. தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றுகிறார். இவருடன் அருமநல்லூர் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் நர்சாக பணியாற்றினார். அவரை பார்க்க அவரது சகோதரர் வினித் (24) அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு வந்து சென்றார்.

    அப்போது பிரம்மபுரத்தைச் சேர்ந்த நர்சுக்கும், வினித்துக்கும் பழக்கம் ஏற்பட்டது. வினித், நர்சை காதலிப்பதாக கூறினார். அதை நம்பி நர்சு, அவருடன் செல்போனில் பேசி மகிழ்ந்தார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வினித், காதலியான நர்சை அங்கு வரவழைத்தார். நர்சை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி வினித் அவரை கற்பழித்தார். இதேபோல பலமுறை வினித், நர்சை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தார்.

    சமீபகாலமாக வினித், நர்சை சந்திப்பதை தவிர்த்தார். மேலும் நர்சை திருமணம் செய்து கொள்ளவும் அவர் மறுத்தார். இதனால் ஏமாற்றம் அடைந்த நர்சு, போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தார். புகாரை போலீசார் ஏற்காததால் மனம் உடைந்து அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

    இதையடுத்து நர்சின் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசாருக்கு சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் சாந்தகுமார் விசாரணை நடத்தி நர்சை ஏமாற்றி கற்பழித்த வினித் மீது வழக்குப்பதிவு செய்தார். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 417, 376 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    போலீசார் வினித்தை தேடிச் சென்றபோது அவர் தலைமறைவாகி இருந்தார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
    செங்குன்றத்தில் நர்சை கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட டாக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்குன்றம்:

    சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் 108 ஆம்புலன்சு அலுவலகம் உள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அவரிக்காடு பகுதியை சேர்ந்தகுமார் மனைவி தாமரைக்கனி நர்சாக பணி புரிந்து வந்தார்.

    அங்கு வேலைபார்த்த டாக்டர் ஒருவர் கடந்த 6 மாதத்துக்கு முன்பு தாமரைக் கனிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுபற்றி தாமரைக்கனி அப்போதே தேனாம்பேட்டையில் உள்ள 108 ஆம்புலன்சு தலைமை அலுவலகத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

    இதனால் மனஉளைச்சல் அடைந்த டாக்டர் அப்போதே வேலையை ராஜினாமா செய்துவிட்டார். தாமரைக்கனி தொடர்ந்து அந்த அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் தாமரைக்கனி நேற்று இரவு பாடிய நல்லூர் அங்காள பரமேஸ்வரி கோவில் மைதானம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் அவரை தாக்கி கடத்த முயன்றனர். அவர்களிடம் இருந்து தாமரைக்கனி தப்பி வந்து செங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரில், தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டரே ஆட்களை வைத்து தன்னை கடத்த முயன்றதாக கூறி இருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மர்மநபர்கள் தாக்கியதில் தாமரைக்கனி பலத்த காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #tamilnews
    பஸ்சுக்காக காத்திருந்த அரசு ஆஸ்பத்திரி நர்சிடம் 5 பவுன் நகையை மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
    மதுரை:

    மதுரை எஸ்.ஆலங்குளம் டெலிபோன் காலனியைச் சேர்ந்தவர் சலீம். இவரது மனைவி மகபூப்ஜான் (வயது 53). இவர் கருங்காலக்குடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

    தினமும் பஸ்சில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று காலையில் மகபூப்ஜான் ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக வீட்டின் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த 2 மர்ம நபர்கள் திடீரென்று மகபூப்ஜான் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை நகரில் நாள் தோறும் வழிப்பறி, நகை பறிப்பு உள்ளிட்ட குற்றங்கள் நடப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் தனியாக செல்லவே அச்சப்படுகின்றனர். #tamilnews
    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர் மற்றும் நர்சு ஆகியோர் ஆஜரானார்கள்.
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது.

    இதில் இதுவரை 40-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    முக்கிய தகவல் தெரிவிப்போரிடம் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்.

    ஒவ்வொருவர் அளிக்கும் வாக்குமூலம் முழுமையாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த 4 நாட்களாக அப்பல்லோ டாக்டர்களை அழைத்து விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று மருத்துவர் ஷில்பா, செவிலியர் ஹெலனா ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.

    இன்று அப்பல்லோ டாக்டர் பத்மா, நர்சு மகேஸ்வரி ஆகிய 2 பேரும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

    இவர்கள் இருவரும் ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்த நிலையில் இப்போது மீண்டும் ஆஜர் ஆகி உள்ளனர். #Jayalalithaa #ApolloHospital
    ×