search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தம்பதி"

    • பிறந்த குழந்தை எங்கே என்று கேட்டபோது, தங்களால் குழந்தையை பராமரிக்க இயலாது என்பதால் மதுரையில் உள்ள தனது அண்ணன் வீட்டில் கொடுத்து வளர்க்க வைத்துள்ளதாக சங்கர் கூறினார்.
    • 4 பேரையும் பிடித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள உப்புக்கோட்டை முத்தாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 35). இவருக்கு திருமணமாகி குழந்தை இல்லாததால் முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனையடுத்து மனைவியின் தங்கை பாண்டீஸ்வரியை 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கடந்த 1 மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை மதுரையைச் சேர்ந்த சிவக்குமார்-உமா மகேஸ்வரி தம்பதிக்கு விற்று விட்டதாக தகவல் பரவியது. மேலும் கடந்த 2 நாட்களாக குழந்தையை விற்ற பணத்தில் சங்கர் அளவுக்கு அதிகமாக மது குடித்து வீட்டிலேயே அலப்பறை செய்து வந்துள்ளார்.

    இது குறித்து சிறார் நலக்குழு மற்றும் வீரபாண்டி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் மற்றும் சிறார் நலக்குழு களப்பணியாளர் வனராஜ் ஆகியோர் சங்கர் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல் தெரிவித்தனர். பிறந்த குழந்தை எங்கே என்று கேட்டபோது, தங்களால் குழந்தையை பராமரிக்க இயலாது என்பதால் மதுரையில் உள்ள தனது அண்ணன் வீட்டில் கொடுத்து வளர்க்க வைத்துள்ளதாக சங்கர் கூறினார்.

    இருந்தபோதும் அவர்களது பேச்சில் நம்பிக்கை இல்லாமல் சங்கர் கூறிய விலாசத்தில் மதுரைக்கு விரைந்து சென்றனர். மதுரை அம்புஜம் நகரில் வசிக்கும் சிவக்குமார் (45) மற்றும் அவரது மனைவி உமா மகேஸ்வரி (35) ஆகியோரை போலீசார் வரவழைத்து விசாரித்தனர். அவர்களும் முறையான பதில் அளிக்காததால் சந்தேகம் வலுத்தது. இதனைத் தொடர்ந்து 4 பேரையும் பிடித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    குழந்தை கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும், போலீசார் கைப்பற்றி கொண்டு வந்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் குழந்தை ரூ.1.50 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவக்குமார்- உமாமகேஸ்வரி தம்பதி வேறு யாரிடமாவது இது போல வறுமையில் உள்ள தம்பதியிடம் குழந்தையை வாங்கி விற்பனை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    தேனி அருகே வாடகை தகராறில் தம்பதியை தாக்கிய கும்பல் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் ஆனைமலையான்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் (வயது 25). இவரது மனைவி கவுசல்யா. (20). இவர்கள் தீபாவளி என்பவருக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு கடை வைத்திருந்தனர். இதற்காக ரூ.15 ஆயிரம் அட்வான்சும் மாதம் ரூ.1500 வாடகையும் செலுத்தி வந்தனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கடையை காலி செய்வதாக அவர்கள் கூறி தங்களது அட்வான்ஸ் பணத்தை திருப்பி தருமாறு கேட்டனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே தீபாவளி, அவரது மனைவி செல்வி மற்றும் முருகன், குமரேசன், விகாஸ் ஆகியோர் சேர்ந்து நவீன் மற்றும் அவரது மனைவியை கொடூரமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    படுகாயமடைந்த அவர்கள் 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல் போடி மல்லிகாபுரம் மேற்கு தெருவைச் சேர்ந்த கோபால் மகள்கள் ஜெயசூர்யா (21), ஸ்ருதி (15) ஆகியோர் சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த பங்கஜம் என்பவரது வீட்டு முன்பு விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது பங்கஜத்துக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் பங்கஜம், கணவர் ராஜா, மகன் மலைச்சாமி ஆகியோர் சேர்ந்து கோபால் மற்றும் அவரது மனைவியை தாக்கினர். இது குறித்து போடி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரத்தில் வீட்டுக்கு மின் இணைப்பு வழங்காததை கண்டித்து மண்எண்ணை கேனுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு தீக்குளிக்க வந்த தம்பதியால் பரபரப்பு ஏற்பட்டது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக கலெக்டரிடம் கொடுத்தனர்.

    செஞ்சி அருகே உள்ள அடகுணம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 51), விவசாயி. இவரது மனைவி திலகவதி. இவர்கள் 2 பேரும் இன்று காலை விழுப்புரம் கலெக்டரை சந்தித்து மனு கொடுப்பதற்காக வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் வழியாக சென்ற போது அவர்களை போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது அவர்கள் வைத்திருந்த துணி பையில் மண்எண்ணை கேன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து முருகன் மற்றும் அவரது மனைவி திலகவதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கணவன், மனைவி 2 பேரும் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்காக மண்எண்ணை கேனை எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த மண்எண்ணை கேன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள் வைத்திருந்த மனுவை போலீசார் கைப்பற்றினர்.

    அடகுணம் கிராமத்தில் எங்களது விவசாய நிலத்தில் சொந்தமாக ஒரு வீடு கட்டினோம். அந்த வீட்டுக்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக விண்ணப்பித்திருந்தோம். ஆனால் இதுவரை மின் இணைப்பு கொடுக்கவில்லை.

    இதுகுறித்து அன்னியூரில் உள்ள இளநிலை மின்வாரிய அலுவலகத்தில் கேட்டும் எந்த பயனும் இல்லை. எனவே உடனடியாக மின் இணைப்பு வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நாங்கள் மண் எண்ணையை ஊற்றி தற்கொலை செய்து கொள்வோம்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இதையடுத்து முருகன் மற்றும் அவரது மனைவி திலகவதியை விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    கோவையை சேர்ந்த 38 வயது பெண்ணுக்க பேஸ்புக் மூலம் செக்ஸ் தொல்லை கொடுத்ததாக சோமனூரை சேர்ந்த தம்பதி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    வடவள்ளி:

    கோவை வடவள்ளியை சேர்ந்த 38 வயது பெண் சென்னையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கு கோவை சோமனூரை சேர்ந்த ஒருவர் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆனார். இருவரும் செல்போன் எண்களை பரிமாறி கொண்டனர். அதன் பின்னர் நட்பு ரீதியாக பேசி வந்தனர்.

    இந்த நிலையில் அப்பெண் சென்னையில் இருந்து வடவள்ளி வந்து விட்டார். அதன் பின்னரும் சோமனூரை சேர்ந்தவர் நட்புடன் பேசி வந்தார். இதனால் அவரது பேஸ்புக்கிற்கு வடவள்ளியை சேர்ந்த பெண் தனது மகளுடன் இருக்கும் படத்தை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

    இதனை பார்த்த அவர் உன்னை விட உனது மகள் அழகாக இருக்கிறார் என கூறி அவரது மகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக தெரிகிறது. மேலும் மார்பிங் செய்த படத்தை வெளியிட்டு விடுவேன். உனது மகள் முகத்தில் ஆசிட் வீசி விடுவேன் எனவும் மிரட்டல் விடுத்து உள்ளார். இதற்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வடவள்ளி பெண் தனது பேஸ்புக்கில் சோமனூரை சேர்ந்தவர் மற்றும் அவரது மனைவி ஆகியோரை போலீசில் புகார் செய்து விடுவேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஆனால் தொடர்ந்து பேஸ்புக் மூலம் மிரட்டல் விடுத்து வந்ததால் அப்பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    இது குறித்து விசாரணை நடத்தும் படி வடவள்ளி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து வடவள்ளி போலீசார் சோமனூரை சேர்ந்தவர், அவரது மனைவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் மீது கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்ததல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    தற்போது போலீசில் புகார் கொடுத்துள்ள வடவள்ளி பெண் சென்னையில் வேலை பார்த்த போது இது போல் 4 பேர் மீது புகார் கொடுத்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    முதுகுளத்தூர் அருகே விபத்தில் சிக்கிய கணவன், மனைவியை காப்பாற்றிய திமுக பொறுப்பாளர் முத்துராமலிங்கத்தை பொதுமக்கள் பாராட்டினர்.
    முதுகுளத்தூர்:

    முதுகுளத்தூரிலிருந்து பரமக்குடி செல்லும் வழியில் உடைகுளம் அருகில் சாம்பகுளம் விலக்கு ரோட்டில் மணக்குளத்தை சேர்ந்த செந்தமிழ் (42), கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து இருந்து தவறி விழுந்தனர். இதில் செந்தமிழ் பலத்த காயமடைந்தார். விபத்து நடந்து பகுதியில் உதவிக்கு யாரும் இல்லாமல் தம்பதிகள் தவித்தனர்.

    அந்த வழியாக ராமநாதபுரத்திற்கு காரில் சென்ற தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் முத்துராம லிங்கம் விபத்தில் சிக்கிய தம்பதியை மீட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து அவர்களை ஏற்றி அனுப்பி வைத்தார்.

    கமுதி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செந்தமிழை பரிசோதித்து, மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மனிதாபிமான அடிப்படையில் செயல்பட்ட தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்கத்தை பொதுமக்கள் பாராட்டினர். விபத்து குறித்து கீழத் தூவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்து 10 நாட்களே ஆன பெண் சிசு பரிதாபமாக இறந்தது.

    மதுரை:

    திருமங்கலத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி தேவி. இவர்களுக்கு குழந்தை இல்லை. எனவே அவர்கள் அந்தப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் 10 நாட்களே ஆன பெண் சிசு ஒன்றை வளர்ப்பதற்காக வாங்கிச் சென்றனர்.

    அந்த பெண் சிசுவுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த குழந்தையை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, பெண் சிசு பரிதாபமாக இறந்தது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மதுரை கிழக்கு கிராம நிர்வாக அதிகாரி சுருளி ஆண்டவன் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கு திருமங்கலம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.

    குழந்தைக்கான பெயரை சூட்ட வாக்குப்பதிவு நடத்தி புதுமையான முறையில் பெயர் தேர்வு செய்த தம்பதிகள் பற்றிய செய்தி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. #BabyName #MaharashtraCouple
    நாக்பூர்:

    மராட்டிய மாநிலம் கோண்டியா மாவட்டம் தியோரி தாலுகாவை சேர்ந்தவர் மிதுன் பங் (வயது 34), தொழில் அதிபர். இவரது மனைவி மன்சி. இந்த தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 5-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

    இந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என இவர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குழந்தைக்கான பெயரை வாக்குப்பதிவு நடத்தி புதுமையான முறையில் தேர்வு செய்ய அவர்கள் முடிவு செய்தனர்.

    இதன்படி யாக்‌ஷ், யுவன், யுவிக் ஆகிய 3 பெயர்களை தேர்வு செய்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடையே வாக்குப்பதிவு நடத்தினர். இதன்படி சம்பவத்தன்று மிதுன் பங்கின் வீட்டிற்கு அவரது நண்பர்கள் உறவினர்கள் வருகை புரிந்தனர். முன்னாள் எம்.பி. நானா பட்டோலே இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

    இதையடுத்து ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு இருந்த 3 பெயர்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 192 பேர் இதில் கலந்து கொண்டு வாக்குச்சீட்டு மூலம் ஓட்டுப்போட்டனர். இதில், யுவன் என்ற பெயர் அதிகபட்சமாக 92 ஓட்டுகள் பெற்று தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து குழந்தைக்கு பெற்றோர்கள் யுவன் என பெயர் சூட்டினர். 
    நெல்லையில் கைதான திருமண மோசடி தம்பதி பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. குடும்ப பெண்களின் படங்களையும் அவர்கள் வாட்ஸ்-அப் மூலம் ஆண்களுக்கு அனுப்பியது தெரியவந்துள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் முருகன் (வயது 48). இவர் நெல்லை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் மணமகள் தேவை என்று விளம்பரம் செய்திருந்தார். இதை அறிந்த ஒரு கும்பல் முருகனிடம் செல்போன் மூலம் பேசி அழகான பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி, பெண்ணுக்கு பெற்றோர் இல்லை என்பதால் திருமண செலவுகளை நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கான பணத்தை அனுப்புங்கள் என்றும் கூறியுள்ளது.

    இதனை நம்பிய முருகன், அந்த கும்பலுக்கு ரூ.27 லட்சத்து 81 ஆயிரத்து 705 கொடுத்துள்ளார். திருமணத்துக்கு தாமதம் ஆனதால் சந்தேகம் அடைந்த முருகன் இதுதொடர்பாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமாரிடம் புகார் செய்தார். அதன்பேரில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    முருகன் புகார் தொடர்பாக நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம், இன்ஸ்பெக்டர்கள் ரமா, அனிதா ஆரோக்கிய மேரி ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். இந்த விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே சத்யாநகரில் வசித்து வந்த சுப்பிரமணியன், அவருடைய மனைவி லாவண்யா, கொழுந்தியாள் மாயா ஆகிய 3 பேரும் இந்த திருமண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. உடனே போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

    இந்த கும்பல் சென்னை அடையாறு பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன், சென்னை எல்.ஐ.சி. ஊழியர் அன்பழகன், அமெரிக்காவில் வசிக்கும் தமிழரான அரசகுமரன் உள்ளிட்டோரை ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. இதன்மூலம் பல கோடி ரூபாய் சுருட்டி உள்ளனர்.

    தற்போது போலீசார் இவர்களிடம் இருந்து ரூ.63½ லட்சம், 69 பவுன் தங்க நகைகள், நிலம் மற்றும் சொகுசு பங்களா, செல்போன்கள், பித்தளை சிலை ஆகியவற்றை மீட்டுள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1½ கோடி ஆகும்.

    இந்த திருமண மோசடி தம்பதி குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    கைதான சுப்பிரமணியன், அவருடைய மனைவி லாவண்யா, கொழுந்தியாள் மாயா ஆகிய 3 பேருக்கும் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் என். புதுக்கோட்டையை அடுத்த காளிசெட்டிபட்டி ஆகும். இவர்கள் பல பேரிடம் இதுபோல் மோசடி செய்து அதில் கிடைத்த பணத்தை கொண்டு அஞ்சுகிராமம் அருகில் சொகுசு பங்களா கட்டி வசித்து வந்துள்ளனர். இதுபோன்ற மோசடி செயல்களுக்காகவே அவர்கள் நாகர்கோவிலுக்கு குடிபெயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

    இந்த கும்பல் மணமகள் தேவை என்று விளம்பரப்படுத்தப்படும் இணையதளங்களை அடிக்கடி நோட்டமிட்டுள்ளனர். அதில் 45 வயது முதல் 50 வயதுக்குள் இருக்கும் அதிகாரிகள், வசதி படைத்தவர்களிடம் பணம் பறிக்க திட்டமிட்டனர். பின்னர் அவர்களது செல்போனில் தொடர்பு கொண்டு அவர்களது விருப்பத்தை தெரிந்து கொண்டனர். அப்போது அவர்களிடம் அழகாகவும், ஆபாசமாகவும் பேச்சு கொடுத்து ஆசையை தூண்டினர். பின்னர் வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்றவற்றில் பதிவிடப்பட்டு இருக்கும் அழகான குடும்ப பெண்களின் படங்களை தேர்வு செய்து வைத்து, அதில் மிகவும் அழகாக இருக்கும் பெண்களின் புகைப்படங்களை வாட்ஸ்- அப் மூலம் அந்த ஆண்களுக்கு அனுப்பி உள்ளனர்.

    அதாவது செல்பி மோகத்தில் இளம்பெண்கள் தங்களது செல்போன் படங்களை வாட்ஸ்-அப், பேஸ்புக்கில் பதிவு செய்கின்றனர். அதனை சேமித்து வைத்து மோசடிக்கு பயன்படுத்தி உள்ளனர். மேலும் அதிகமாக வெளியே தெரியாத துணை நடிகைகள், டி.வி. நாடக நடிகைகள் படங்களையும் அனுப்பி உள்ளனர். இதில் சிக்குகின்றவர்களை நைசாக பேசி தங்களது வங்கி கணக்குக்கு இணையதளம் மூலம் பணத்தை அனுப்ப கூறி பெற்றுக்கொண்டது தெரியவந்தது.

    தற்போது நெல்லை மாட்ட குற்றப்பிரிவு போலீசார் சுப்பிரமணியன் வங்கி கணக்குகளுக்கு பண பரிமாற்றம் செய்துள்ளவர்களின் பட்டியலை சேகரித்து உள்ளனர். இதில் அதிகமானோர் சென்னையை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடத்தி விவரங்களை சேகரிக்க உள்ளனர்.

    மேலும் இந்த கும்பல் தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டோர் போலீசாரிடம் புகார் அளிக்கலாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. 
    கிருஷ்ணகிரி அருகே தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் ரூ.5 கோடி மோசடி செய்த கணவன், மனைவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தர்கா ஹவுசிங் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 47). இவர் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இதில் ஓசூர் பசுமை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்யா. இவரது மனைவி அகிலா ஆகிய 2 பேரும் பங்குதாரர்களாக உள்ளனர்.

    கடந்த மாதம் 16-ந்தேதி முதல் நிறுவனம் செயல்படாமல் இருந்தது தெரியவந்தது.

    உடனே வெங்கடேஷ் நிறுவனத்திற்கு சென்று கணக்குகளை சரிபார்த்தார். அப்போது ஆதித்யாவும், அவரது மனைவி அகிலாவும் சேர்ந்து நிறுவனம் சார்பில் பணம் கொடுக்கல், வாங்கலில் ரூ.5 கோடி வரை மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர்களிடத்தில் வெங்கடேஷ் செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவர்களது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னர் கணவன்-மனைவி 2 பேரையும் வெங்கடேஷ் பல இடங்களில் தேடிபார்த்தார். எங்கும் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.

    இந்த சம்பவம் குறித்து வெங்கடேஷ் கிருஷ்ணகிரி குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள ஆதித்யாவும், அகிலாவையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.  #Tamilnews

    தேனி அருகே தொழில் போட்டியில் தம்பதியை தாக்கிய கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள பூதிபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ஆண்டவர். இவரது மனைவி பஞ்சு (வயது35). ஆண்டவர் அதே பகுதியில் பெட்டிகடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவரது கடை அருகே அதே ஊரைச் சேர்ந்த பொன்னாங்கன் என்பவரும் கடை வைத்துள்ளார். இருவருக்கும் இடையே தொழில் போட்டி காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    சம்பவத்தன்று கடையில் இருந்த பஞ்சுவிடம் பொன்னாங்கன், அவரது மகன் தங்கபாண்டி, அல்லிநகரத்தை சேர்ந்த கோபி ஆகியோர் தகராறு செய்து தாக்கினர். இதை தட்டிகேட்ட ஆண்டவரையும் தாக்கி காயம் ஏற்படுத்தினர்.

    மேலும் கடையை காலி செய்யாவிட்டால் தீ வைத்து கொளுத்திவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் ஆண்டவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பொன்னாங்கன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கோபியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரெயிலில் முன்பதிவு செய்த பெட்டியில் தம்பதியின் பொருட்களை திருடியது தொடர்பான வழக்கில் அவர்களுக்கு வடக்கு ரெயில்வே நிர்வாகம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க தேசிய நுகர்வோர் கமி‌ஷன் உத்தரவிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ரெயிலில் முன்பதிவு செய்த பெட்டியில் கணவன்- மனைவி பயணம் செய்தனர். அவர்கள் விலை உயர்ந்த பொருட்கள் அடங்கிய பெட்டி வைத்திருந்தனர். அப்போது அந்த பெட்டியில் அத்துமீறி ஏறிய பிச்சைக்காரன் பெட்டியை உடைத்து அதில் இருந்த பொருட்களை திருடிச்சென்று விட்டான். இச்சம்பவம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.

    இது குறித்து தேசிய நுகர்வோர் கமி‌ஷனிடம் தம்பதியினர் புகார் செய்தனர். ரெயில்வேயின் கவனக்குறைவு காரணமாக முன்பதிவு செய்த பெட்டியில் ஏறிய பிச்சைக்காரன் தனது பொருட்களை திருடிச் சென்று விட்டதாக புகார் கூறி இருந்தனர். வழக்கை விசாரித்த நுகர்வோர் கமி‌ஷன், தம்பதிக்கு வடக்கு ரெயில்வே நிர்வாகம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது.#tamilnews
    ×